Home Latest News டெல்டா விவசாயிகள் பலியை தடுக்க தவறும் அரசு!!!

டெல்டா விவசாயிகள் பலியை தடுக்க தவறும் அரசு!!!

டெல்டா விவசாயிகள் பலியை தடுக்க தவறும் அரசு!!!

காவிரித் தண்ணீரும் வரவில்லை.   வடகிழக்கு பருவ மழையும் பொய்த்தது.   சும்மா இருக்க முடியாத டெல்டா விவசாயிகள் கடன் பட்டு விதைப்பு மூலம் சாகுபடி செய்த பயிர்கள் கருக தொடங்கியதை பார்க்க முடியாமல் உயிரை விட்டு வருகிறார்கள்.

இதுவரை நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.    திருத்துறைபூண்டி ரகுநாத புறத்தை சேர்ந்த கோவிந்தராஜ் , ஆதிச்சபுரம் அழகேசன் , கீழதிருபூந்துருத்தி வெள்ளையன் என்கிற ராஜேஷ் கண்ணன் வேதாரண்யம் ஆதனூர்   ரத்தினவேல்  என்று இந்த பட்டியல் முடியுமா எனத் தெரியவில்லை.

120  நாட்களுக்கு குறையாமல் தண்ணீர் தேவை இருக்கும்போது நாற்பது நாள் மட்டும் கிடைத்தால்  பயிர் எப்படி வளரும் ?    வட கிழக்கு பருவ மழை யை நம்பித்தான் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர்.    அரசு முனைந்து காவிரி நீரைப் பெற்றுத்  தந்திருந்தால் பயிர் காப்பாற்றப் பட்டிருக்கும்.

இப்போது ஒவ்வொரு விவசாயியும்  ஏக்கருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் நட்டமடைந்திருக்கிறார்கள்.                 விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்திருக் கிறார்கள்.

93.47   டி எம் சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது     13.5 டி எம் சி நீர்தான் உள்ளது.    இன்னும் ஒரு வாரத்துக்கு வருமா எனபதே சந்தேகம்.

கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு இல்லையென்று  உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப் பட்டுவிட்ட நிலையில் அது வராது.    பருவ மழையும் பொய்த்து விட்டது .      நிலைமை என்ன ஆகும்?

நட்டம்  நிச்சயம் என்ற  நிலையில் முதல் போட்டவர்கள் என்ன செய்வார்கள்?

மாநில  அரசு எதையும் கண்டு கொள்கிற நிலையில் இல்லை.      என்னதான் தீர்வு?

கடன் தள்ளுபடி.    கிராம அடிப்படையில் இழப்பீடு  என்று ஏதாவது நிவாரணம் அறிவித்தால் விவசாயிகள் கொஞ்சம்   ஆறுதல் அடைவார்கள்.

அரசு கண்டு கொள்ளாது என்றால் விவசாயிகள் அரசை நிம்மதியாக ஆள விட மாட்டார்கள் .

விவசாயிகளை கண்ணீர் விட வைக்கும் அரசு எப்படி நிம்மதியாக ஆளும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here