Home Latest News ஜல்லிக்கட்டை நடத்துவதில் உறுதி என்கிறாரே ஓ பி எஸ் எப்படி நடத்துவார் ??

ஜல்லிக்கட்டை நடத்துவதில் உறுதி என்கிறாரே ஓ பி எஸ் எப்படி நடத்துவார் ??

ஜல்லிக்கட்டை நடத்துவதில் உறுதி என்கிறாரே ஓ பி எஸ் எப்படி நடத்துவார் ??

இன்னும்  மூன்று நாளில்  பொங்கல்.

உச்ச நீதி மன்ற தடை நீங்கவில்லை.  மத்திய அரசுக்கு மாநில அரசும் பல கட்சிகளும் வேண்டுகோள் வைத்து  விட்டார்கள்.

உச்ச நீதி  மன்றம்  தடையை விலக்கி கொள்ள தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு செய்யாமலேயே வெறும் வாய் மூலமான பொய் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை விலக்க தயாராக இருப்பதாக கூறும்  மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை   ஏன் நீக்கவில்லை?

நீக்கி விட்டால் மட்டும் உச்ச நீதி மன்றம் தடையை விலக்குமா என்பது வேறு .      ஆனால் விலக்காமலேயே வெறும் அரசாணை மூலமே நடத்துவோம் என்று ஒரு நிலை  எடுக்க வேண்டிய காரணம் என்ன?

வஞ்சக மத்திய அரசு  சொல்வது  வேறு செய்வது வேறு ?      ஒரு பக்கம்  ஆதரவு மக்கள் வெறுப்பிலிருந்து தப்பிக்க.    மறுபுறம் நீதிமன்ற தடை நீடிக்க வகை செய்து எதிர்ப்பு.    இந்த இரட்டை  நிலை  தான் இப்போது பிரச்னை.

மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.      ஏக இந்தியாவில் தனித்த எதுவும் இயங்கக் கூடாது.    இதுதான் மத்திய அரசின் திட்டம்.

தடையை மீறி ஏறு தழுவல் என்ற பெயரில் விளையாட்டை நடத்த வீரர்கள் தயாராகிவிட்டார்கள்.

தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி?

ஏற்கெனெவே ஜல்லிக்கட்டு வேண்டாம்  என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி  நடத்தி தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கிறார் காவல் துறை கண்காணிப்பாளர் .

காவல் துறையை மீறி நடத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.     அதையும்  எதிர் கொன்வோம் என்ற நிலை எடுக்கலாம்.  அது நீதிமன்றத்தையே திணறடிக்கும்.      காவிரி நீரை திறக்க முடியாது .  நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கிறோம் என்று  சவால் விடுத்த கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு மீது உச்ச நீதி  மன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது. ?

உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவெடுக்கப்  படும் என்கிறார் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே .           உச்ச நீதி  மன்றம் இப்போது எதுவும் தீர்ப்பு வழங்கப் போவதில்லை.

தமிழக அரசு என்ன செயப் போகிறது?    இதுதான் எல்லார் மனதிலும் உள்ள கேள்வி?

நடத்தி முடித்த பின் கைதா?         நடத்தும் முன்பே கைதா ?

நடத்த விட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க போகிறதா?  கைது செய்து தானே வில்லனாகப் போகிறதா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here