Home இந்திய அரசியல் தேசிய கீதத்தை கேலிக்கூத்து ஆக்கும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும்??!!

தேசிய கீதத்தை கேலிக்கூத்து ஆக்கும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும்??!!

தேசிய கீதத்தை கேலிக்கூத்து ஆக்கும்  உச்சநீதி மன்றமும் மத்திய அரசும்??!!
national anthem theatre

சினிமாவுக்குப் போகிறவன் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று முதலில் பிரச்னையை கிளப்பியது உச்ச நீதி மன்றம்தான்.

அரசியல் சட்டத்திலேயே அப்படி ஒரு பிரிவு இருப்பது உண்மைதான்.

இதுவரை அரசு விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப் படும் போது எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்வது ஒழுங்காக நடந்து கொண்டுதான் இருந்தது.

இதை பொழுது போக்கு இடங்களில் விரிவு படுத்தும் போதுதான் பிரச்னை எழுகிறது.

நிற்காதவனை மற்றவர்கள் திட்டுவது.   அடிக்க முயல்வது. எல்லாம் நடந்தது.

மாட்டுக் கறி தடை வந்தபோது மாடுகளை ஏற்றி வந்தவர்கள் தாக்கப் படுவது நடந்தது.        மாட்டுக் கறி வைத்திருந்ததாக அடித்துக் கொலை கூட செய்யப் பட்டார்கள்.

இது நீதி மன்றத்தின் வேலையல்ல.   மீண்டும் உச்சநீதி மன்றம்  இது பற்றி முடிவு செய்யவேண்டிய நேரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்கிறார்கள்.

பொருள் புரிந்து மரியாதை செய்பவர்கள் மிகவும் குறைவு.     ஏதோ எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பாடப் படுவதால் நாட்டை உயர்த்தி பாடுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மரியாதை செய்பவர்கள் தான் அதிகம்.

எத்தனை பேருக்கு வங்காள மொழி தெரியும்?

போகிற போக்கை பார்த்தால் நூறு பேர் கூடி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் தேசிய கீதம் பாடு என்று சட்டம் கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள் போல் தெரிகிறது.

வெறுப்பை நன்றாகவே வளர்க்கிறார்கள்.   எல்லாம் நன்மைக்கே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here