Home இந்திய அரசியல் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் நீட் தேர்வை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்!

தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் நீட் தேர்வை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்!

தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் நீட் தேர்வை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்!
ban-neet

நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது.

இன்னிலையில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கி சி பி எஸ் இ இட்ட உத்தரவை ரத்த சென்னை உயர்நீதி மன்றம் அவர்களுக்கு தமிழ் நாட்டிலேயே உள்ள பத்து இடங்களில் ஒன்றை ஒதுக்கி உத்தரவிட ஆணை பிறப்பித்தது .

பதினேழு வயது மாணவன் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அந்த தேர்வை எழுத முடியுமா?   அப்படி என்ன அவசியம்?     ஏன் அவர்களுக்கு இந்த மனச்சுமையை தர வேண்டும்?   இந்த அக்கிரம உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்று போராடித்தான் ரத்து செய்ய வேண்டிய நிலைமை இருந்தால் , அதற்கு வழக்கறிஞர்  வைத்து செலவு செய்து வழக்காடி ஒரு தேர்வு மையத்தை நிர்ணயிக்கவே இத்தனை போராட்டமா?

இப்படி விதி வைத்ததை ரத்து செய்தால் மட்டும் போதுமா? அவர்களுக்கு என்ன தண்டனை?

தமிழர்களை வஞ்சிப்பது என்று மோடியின் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை களில் இதுவும் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here