Home இந்திய அரசியல் ஆந்திராவில் சோழர் காலத்து வீரனின் சிலை கண்டுபிடிப்பு; நடுகல் வணக்க முறைக்கு சான்று கிடைத்தது

ஆந்திராவில் சோழர் காலத்து வீரனின் சிலை கண்டுபிடிப்பு; நடுகல் வணக்க முறைக்கு சான்று கிடைத்தது

ஆந்திராவில் சோழர் காலத்து வீரனின் சிலை கண்டுபிடிப்பு; நடுகல் வணக்க முறைக்கு சான்று கிடைத்தது

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி வாகவேடு கிராமத்தில்
தமிழர் நாகரிகம் சம்பத்தப் பட்ட பழங்கால சிலை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது.
Archaelogical Survey of India தொல்லியல் துறையின் வின் ஆந்திர பிரிவு இதை கண்டுபிடித்திருக்கிறது .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால சிலை.
அந்த அமைப்பின் துணை ஆய்வாளராக Asst Epigraphist , இருக்கும் பி டி நாகராஜன்
என்பவர் இந்த சிலையை தோண்டி எடுத்த குழுவின் உறுப்பினர்.
ஓர் வயலில் இருந்து இது கண்டு எடுக்கப் பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் பல முறை இது போன்ற
தமிழ் எழுத்துக்கள் பொறித்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டிருகின்றன.
இந்த சிலையின் உயரம் ஐந்தடியாம். அகலம் நான்கடி.
கிராநைட் கல்லில் செதுக்கப் பட்ட ஒரு மனிதன் கையில் வாள் ,
கேடயம் இடுப்பில் கட்டிய கத்தி இருக்கிறது.

அதில் பொறிக்கப் பட்ட வாசகங்கள் படி, இரண்டு பெயர்கள் குறிக்கப் படுகின்றன.
ஒருவர் பெயர் சிந்தன். மற்றொருவர் பெயர் பெரும்பீமன் .
இவர் ஏத்தா என்ற கோட்டையை காக்கும் பொருட்டு
ஏராளமான எதிரிகளை வீழ்த்தியிருக்கிறார்.
சிந்தன் போரில் இறக்க, அழகன் கருப்பருடையார் என்ற குறுநில மன்னர்
வரியில்லாத வளமான நிலங்களை வாகவேடு கிராமத்தில் இருந்த
அவரது சகோதரர் சோழர் மால்துயன் என்பவருக்கு தானம் அளித்திருக்கிறார்.
இந்த தானம் கருப்பருடயான் என்ற அதிகாரியால் சாட்சி செய்யப் பட்டிருக்கிறது.
நாகராஜன் சொல்லும்போது இந்த பதிவு பதினோரு நூற்றாண்டுகளாக அப்படியே இருக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில் போர் வீரர்களுக்கு கல் நாட்டி வழிபடுவது வழக்கமான ஒன்று.
உள்ளூர் காரர்களுக்கு இதன்முக்கியத்துவம் தெரியாததால் அப்படியே கிடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கூட குல தெய்வ அய்யனார் கோவில்களில் முன்பெல்லாம் நடுகல் வணக்க முறையில் செதுக்கப் பட்ட சிலைகள் தான்
இருந்திருக்கின்றன. அவைகள் அந்தந்த கிராமத்தின் வெற்றி வீரர்கள்.
அந்தந்த ஊர் வீரர்கள் பெயரில் அய்யனார் அழைக்கப் படுவார்.
அய்யனார் என்பது பொதுப்பெயர். பெயரோடு அய்யனார் சேர்க்கப் படும்.
பெயர் கல்யாணி என்றால் அவர் கல்யாணி அய்யனார்.
பெயர் சேர்வராயர் என்றால் அவர் சேர்வராயர் அய்யனார்.
பெயர் பரமநாதன் என்றால் அவர் பரமநாத அய்யனார்.
இப்படி ஆயிரக்கணக்கான பெயர்களில் இருந்த அய்யனார்களை
ஒரு கால கட்டத்தில் பார்ப்பனர்கள் சாஸ்தா அய்யனார் ஆக்கி விட்டார்கள்.

அதாவது ஐயப்பன் தான் அய்யனார் என்று திருத்தி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழர்களும் கேட்டுக் கொண்டு கும்பிடு போட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் இந்த இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாற்றை இழந்து நிற்கும் தமிழன்
கொஞ்சமாவது சிந்திக்க ஆரம்பித்தால்
வரலாறு மீண்டும் திரும்பும் என்பது நிச்சயம்.
ஆட்சிக்கு வருபவர்கள் தான் இந்த உணர்வைப் பெறவேண்டும்.
பெறுவார்களா? தமிழ்நாட்டு அரசு இதுபற்றி ஏதாவது
கொஞ்சமாவது கவனம் செலுத்த வேண்டுமே?
அதற்கு அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டுமே?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here