Connect with us

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

Latest News

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

என்ன செய்கிறது தமிழக அரசு?
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப் போல
பேசி வருகிறார்கள் அதிமுக அமைச்சர்கள் ?
ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் மரியாதைகள் அத்தனைக்கும்
தகுதி படைத்தவரா அவர்?

முதல் குற்றவாளி ஜெயலலிதா. 2 முதல் 4 வரை யிலான குற்றவாளிகள்தான் சசிகலாவும் இளவரசி சுதாகரனும்
அவர்கள் அத்தனை சிறையில்.
ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால்
அவரும் சிறையில் இருந்து இருப்பார்.
உச்ச நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராதம் ரூபாய் நூறு கோடியை
பறிமுதல் செய்யும் படி உத்தரவிட்டது.

மற்றவர்களுக்கு அபராதம் தலா ரூபாய் பத்து கோடி மட்டுமே

அதைக்கூட அவர்கள் இன்னும் செலுத்தவில்லை.
2017 மே மாதம் இறுதியில் தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு
வழக்கு மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு விபரங்கள் உள்ளடக்கி
சொத்துகளை கையகப்படுத்த
வேண்டிய கடிதங்களை சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர்
திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும்
அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
ஆனால் தொடர்ந்து நடவடிக்கை இருப்பதாக தெரிய வில்லை..
அம்மா அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசு
அம்மா சொத்துக்களை எப்படி கையகப்படுத்தும் ?

இறுதித் தீர்ப்பு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில்
இந்த அபராத வசூல் வசூலிக்கும் நடவடிக்கைகள் ஏன் முடிவடையவில்லை?
ஜெயலலிதா சொத்து அரசுடமை ஆனால் தான்
இவருக்கு எப்படி அரசு மரியாதை செய்ய முடியும் என்ற கேள்வி எழும்!
எனவே தான் தாமதம் செய்கிறது எடப்பாடி அரசு.
நக்கீரன் இதழ் மட்டுமே இதுபற்றி கேள்வி எழுப்பியிருக்கிறது?
பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் நடவடிக்கை இது.

பொது மக்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்.
அரசே ! முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் சொத்துக்களை
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி உடனே கையகப்படுத்து!
என்ற குரல் உரத்து எழ வேண்டும்.
அப்போதுதான் இந்த ஆட்சியாளர்கள் யார் என்பது தெரிய வரும்.
நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்தி சட்டத்தின் முன் எல்லோரும் சமமே
என்று நிலைநாட்டுகிறார்களா அல்லது
அம்மா பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு எப்படி அவர் சொத்துக்களை
பறிமுதல் செய்வது எப்படி அதன்பின் எப்படி யார் பேரைச் சொல்லி
கட்சி நடத்துவது என்று குழம்பிப் போய்
சொத்து பறிமுதல் நடவடிக்கைகளை வேண்டும் என்றே
தள்ளிப் போடுகிறார்களா என்று பார்க்கலாம்?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top