Home தமிழக அரசியல் தினகரன் முடிவால் 20 தொகுதிகளின் இடைதேர்தல் வருமா? எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!!

தினகரன் முடிவால் 20 தொகுதிகளின் இடைதேர்தல் வருமா? எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!!

தினகரன் முடிவால் 20 தொகுதிகளின் இடைதேர்தல் வருமா? எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!!
dinakaran

நீதிபதி சத்யநாராயணா தீர்ப்புக்கு மேல் உச்சநீதி மன்றத்துக்கு மேன்முறையீடு செல்வார்கள் என்று  எதிர் பார்க்கப் பட்ட நிலையில் மேன்முறையீடு இல்லை தேர்தலை சந்திப்போம் என்ற தினகரனின் அறிவிப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

துணிச்சலான முடிவுதான். ஆட்சிக்கு மட்டுமல்ல. பல கட்சிகளின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் முடிவு இது.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமையும் என்பதையும் இது தீர்மானிக்கும்.

மேன்முறையீடு சென்றால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று நிம்மதியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த நிம்மதி போயேபோச்சு.

18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளோடு திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளும் இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

தேர்தல் கமிஷன் இப்போது என்ன செய்யும் என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பு. எதை சொல்லி தேர்தலை தள்ளி வைக்க முடியும் ?

பாஜக தனது பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை இப்போதே தீர்மானிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகும்.

பாராளுமன்ற தேர்தலோடு இந்த இருபது தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவார்கள் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.

ஆனால் அதற்கு முன்பே வேறு இடங்களில் தேர்தல் நடத்தினால் இங்கும் நடத்தியாக வேண்டும். ஜனவரி அல்லது பிப்ருவரியில் நடத்தலாம். ஏப்ரலில் தான் பாராளுமன்ற  தேர்தல் வரும்.

பத்து இடங்களில் அதிமுக தோற்றாலே அரசு விழுந்து விடும்.

எப்படியோ எடப்பாடி அரசின் நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here