Home வேளாண்மை தூங்கும் தமிழக அரசு- பாலாறு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசு??!!

தூங்கும் தமிழக அரசு- பாலாறு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசு??!!

தூங்கும் தமிழக அரசு- பாலாறு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசு??!!
palar

கர்நாடகத்தில் துவங்கி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில்  கடலில் கலக்கும் நதி பாலாறு.

கர்நாடகத்தில் 93  கி. மீட்டரும் , ஆந்திராவில் 33  கி.மீட்டரும் ,  தமிழகத்தில்   222  கி.மீட்டரும் அதன் ஓட்டங்கள்.

கர்நாடகா அதன் பகுதிகளில் பெத்தமங்களா , விஷ்ணுசாகர்,  ராம்சாகர்  என்று அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டி விட்டது.

ஆந்திர அரசோ அதன் பகுதிகளில்  29  தடுப்பணைகளை கட்டி விட்டது. இப்போது  21 தடுப்பணைகளில்     2 அடி முதல்    5 அடி வரை உயரம்  அதிகரிக்கவும் புதிய மூன்று தடுப்பணைகள் கட்டவும்     ரூபாய்  41.70  நிதி ஒதுக்கீடு  செய்திருக்கிறது.

கேட்டால் இருக்கும் அணைகளைத்தானே பழுது பார்க்கிறோம் என்று சொல்வார்கள்.   ஆனால் செய்வதை  யார் கண்காணிப்பது? உயரத்தை அதிகரிக்கவும் புதிய அணைகளை கட்டவும் தமிழ் நாட்டிடம் அனுமதி பெற்றார்களா?

வேலை முடிந்து விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழக பகுதிகளில்  இருக்கும் பாலாற்றிற்கு வராது.  மிச்சம் இருக்கும் மணலை விற்று கொள்ளைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு விவசாயிகளையும் பொதுமக்களையும்  தவிக்க விட வேண்டியதுதான்.

தமிழக அரசு உடனடியாக செயல் பட்டு அந்தப் பணிகளை நீதிமன்றம் மூலமாக கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்கள் குடிநீர் ஆதாரம் பறிக்கப் பட்டு பாதிக்கப் படும் சூழ்நிலை தான் இன்று  இருக்கிறது.

ஆந்திரா  செயல்படுகிறது. தமிழ் நாடு  தூங்குகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்??!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here