Home தமிழக அரசியல் 100 கோடி சொத்து, 5.5 கோடி கடனுக்கு ஏலம்? விஜயகாந்த் நிலைமை உண்மையா??!!

100 கோடி சொத்து, 5.5 கோடி கடனுக்கு ஏலம்? விஜயகாந்த் நிலைமை உண்மையா??!!

0
100 கோடி சொத்து, 5.5 கோடி கடனுக்கு ஏலம்? விஜயகாந்த் நிலைமை உண்மையா??!!
captain-vijayakanth-property1

100 கோடி சொத்து வைத்திருப்பவர்கள் தங்களின் 5.5 கோடி கடனுக்கு சொத்தை ஏலம் போக விட்டு விட மாட்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அது விஜயகாந்த் விஷயத்தில் நடக்கும்போது சந்தேகத்துக்கு உள்ளாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் நூறு கோடி இருநூறு கோடி வாங்கி விட்டார்கள் என்று பிரேமலதா மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் இப்போது தான் ஒரு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில் சொத்தை ஏல அறிவிப்பு வரும்வரை விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்களா என்ற கேள்வி எழுவது இயல்புதானே.

சிலர் இது ஒரு நாடகம் என்கிறார்கள். அதற்கு காரணம் வேண்டுமே? சம்பத்தப் பட்டவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் என்று பிரேமலதா கூறுகிறார். ஆனால் இது கட்சிக்காரர்களை சோர்வடையச் செய்யும் என்பதை அவர் உணர்ந்திருகிறாரா அல்லது சோர்வடைய விடும் என்று விரும்புகிறாரா என்பதும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இனி அரசியல் கட்சிகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் பாஜக சம்பத்தப்படாமல் இருக்காது என்பதனால் இப்படியெல்லாம் சிலர் சிந்திக்கிறார்கள். 

தெலுகு தேசம் கட்சியை பாஜக எப்படியெல்லாம் சிதற அடித்திக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோமே?

சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்ற நேரம் பார்த்து அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் ராஜ்ய சபா உறுப்பினர்களும் ஆன நான்கு பேரை பாஜகவில் இணைத்துக் கொண்டுவிட்டார்கள்.

புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தெலுகு தேசம் கட்சிக்காரர்கள்.

பாஜக-வின் ஒரே நாடு ஒரே கட்சி லட்சியத்தில் விஜயகாந்தின் தேமுதிக சேதாரம் அடையாமல் இருந்தால் சரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here