Home தமிழக அரசியல் பியுஷ் மானுஷை பாஜகவினர் தாக்கியபோது காவல் துறை என்ன செய்தது??!

பியுஷ் மானுஷை பாஜகவினர் தாக்கியபோது காவல் துறை என்ன செய்தது??!

பியுஷ் மானுஷை பாஜகவினர் தாக்கியபோது காவல் துறை என்ன செய்தது??!
piyush-manush-attack

சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர் பியுஷ் மானுஷ் காஷ்மீர் நிலைப்பாடு மற்றும் பல பிரச்னைகள் பற்றி பேசுவதற்காக முன் அறிவிப்பு கொடுத்து விட்டு காவல் துறையினர் இருக்கும்போது  நுழைகிறார். அவரை மாவட்ட  தலைவர் வரவேற்று பேசிக்கொண்டிருக்கிறார்.

பேச்சு சூடாகி அவருக்கு பாஜகவினர் செருப்பு மாலை போட்டு அடிக்கத் துவங்குகிறார்கள். காவல் துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று தடுக்க முயற்சித்து அதனையும் மீறி அவருக்கு பலமான அடிகள் விழுகின்றன.

இந்த சம்பவத்திற்கு யார் காரணம்.?

தாக்குதலை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி கொடுக்கிறார். இன்னும் சிலரும் கொடுக்கிறார்கள் .

முதலில் பியுஷ் மனுஷ் பாஜக அலுவலகம் சென்றுதான் தனது மாற்றுக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. தவிர்த்திருக்கலாம்.

காவல் துறை பாதுகாப்பில் இருக்கிறது. அவர்கள் இந்த சந்திப்புக்கு அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. கொடுத்தால் தகுந்த பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அடிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்க எதற்கு காவல்துறை. ?

இந்தப் பிரச்னையில் குற்றம் காவல்துறையின் மீதுதான் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது.

இரண்டு தரப்பின் மேலும் வழக்கு பதிந்திருக்கிறது காவல் துறை.

இப்படி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நடவடிக்கைகளுக்கு காவல் துறை  துணை போனது போல் இருக்கிறது நடந்த சம்பவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here