தாலி வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் பல நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டில் விவாதிக்கப்பட்டது. அதையே புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்த முயன்றபோது டிபன் பாக்ஸ் குண்டு வெடிக்கப் பட்டது.
ராம கோபாலன் களும் இந்து இயக்கங்களும் என்னவெல்லாமோ பேசினார்கள்.
கலைஞர் தாலி அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டார்.
இப்போது மணிரத்தினம் ஒரு படம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் கல்யாணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக வாழலாம் என்ற கருத்து முதல் முறையாக தமிழ் சினிமாவில் நுழைக்கப்பட்டுள்ளது. கடைசியில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது வேறு.
இது இந்துக் கலாச்சாரத்தின் மீதான படை எடுப்பாக எந்த இந்து இயக்கமும் கருத வில்லை.
அவாள் செய்தால் எதுவும் தப்பில்லையே ,. ஒருவேளை அவாளே அந்த முறையை நோக்கிப் போறாளோ என்னவோ? வாழ்ந்தால் சரி.!!!
—
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)