Home Latest News மண்டகப்படி உரிமை அல்லது மதமாற்றம் – மிரட்டும் நாகை தலித்துகள்??!!! திருவிழாவை ரத்து செய்த ஆட்சியர்!!! தீர்வு என்ன???!!!

மண்டகப்படி உரிமை அல்லது மதமாற்றம் – மிரட்டும் நாகை தலித்துகள்??!!! திருவிழாவை ரத்து செய்த ஆட்சியர்!!! தீர்வு என்ன???!!!

மண்டகப்படி உரிமை அல்லது மதமாற்றம் – மிரட்டும் நாகை தலித்துகள்??!!!  திருவிழாவை ரத்து செய்த ஆட்சியர்!!! தீர்வு என்ன???!!!

நாகை மாவட்டம் கள்ளிமேடு கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிகிழமை திருவிழா உற்சவத்தில் தங்களுக்கு ஒருநாள் உற்சவம் உபயத்தை தர வேண்டும் என்று ஆதி திராவிடர்கள் கோரிக்கை வைத்தனர்.

மற்ற சாதியினர் நடைமுறையை மாற்றி தர முடியாது என்று மறுத்து விட்டனர்.

இவர்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறுவதாக மனு கொடுக்க அவர்களுக்கு குரான் புத்தகமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.     இடையே  கிறிஸ்தவர்களும் தங்கள் மதத்துக்கு மாற்ற முயற்சிக்க பலரும் சமாதானம்  பேசி ஆட்சியர் தலைமையிலும்  பேச்சு வார்த்தை நடந்து அதிலும் எந்த முடியும் எட்டப்படவில்லை.

கடைசியில்  மாவட்ட ஆட்சியர் நடக்க இருந்த திருவிழாவை ரத்து செய்து உத்தரவிட்டு  தற்காலிகமாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இடையே கரூரில் மலைகோவிலூர் லிங்கதுபாறை காலனி  ஆதி திராவிடர்கள்  தாங்கள் 2009 ல் கட்டிய  மகாசக்தி மாரியம்மன் கோவிலை சாதி இந்துக்கள் கைப்பற்ற முயற்சிப்பதை எதிர்த்து நீதி மன்றத்தை நாடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். .

சமாதான கமிட்டி கூட்டம் கூட இருக்கிறது.

இந்து ஒற்றுமை பற்றி பேசுபவர்கள்.     இந்து சாதிகளுக்குள் முதலில்  ஒற்றுமையை உறுதி படுத்தட்டும்.

இந்துக்களே இந்துக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலை நீடிக்கலாமா??!!

சாதிகளை பிரித்து வைத்து அரசியல் செய்பவர்கள்  ஒன்று படுத்த  முயற்சிப்பார்களா ?     எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுவார்களா ???!!!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here