Home வேளாண்மை விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் ?!

விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் ?!

விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் ?!
pepsico-farmers

1989ல் தொடங்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனமான பெப்சிகோ கம்பெனி விவசாயிகளிடம் உருளைக்கிழங்கு FC 5 ரக விதைகளை கொடுத்து அவர்கள் விளைவித்த உருளைக்கிழங்குகளை கம்பெனியே வாங்கி அதை சிப்ஸ் ஆக விற்பனை செய்து வந்தார்கள்.

அந்த ரக விதைகள் பலருக்கு கைமாறி புது வடிவம் பெற்றன. விவசாயிகளும் பெருத்து விட்டதால் பல நிறுவனங்களும் அதை கொள்முதல் செய்ய துவங்கினார்கள்.

சந்தைக்கு தனக்கு போட்டியாக வந்த உருளை கிழங்கு பெப்சியை உறுத்த தன் ஆட்களை கொண்டு அதை கொள்முதல் செய்து அதை கம்பெனி மூலமாகவே ஆய்வு  செய்து அது தங்கள் கம்பெனி கொடுத்த விதையின் பகுதிதான் என்ற அடிப்படையில் நான்கு விவசாயிகள் மீது தலா ஒரு கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

வேறு நாட்டில் இது சாத்தியமா என்பது தெரியவில்லை.

நம்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக நம்நாட்டு நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு அதுவும் கோடிக்கணக்கில் கேட்டு வழக்குப் போடுபவர்கள் நெஞ்சில் ஈரமில்லாதவர்களாக தான் இருக்க முடியும்.

எதிர்ப்பு கிளம்பியவுடன் பெப்சிகோ தன் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறது.

லேஸ் LAYS சிப்ஸ் பிரியர்கள் இனி அதை தொடுவர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here