Connect with us

சாலை வரி வசூலிக்கும் அரசுக்கு சுங்கம் வசூலிக்க உரிமை இல்லை.

toll-tax-road

வணிகம்

சாலை வரி வசூலிக்கும் அரசுக்கு சுங்கம் வசூலிக்க உரிமை இல்லை.

வாகனங்கள் பதிவு செய்யப்படும் போதே சாலை வரி வசூலித்து விடுகிறார்கள்.

அதில் வேண்டுமானால் காலத்துக்கு ஏற்ப சாலை வரியை உயர்த்திக் கொள்ளலாமே தவிர கூடுதலாக சுங்க வரி வசூலிக்க அரசுக்கு உரிமை உண்டா என்பது கேள்விக்குரியது. 

சுங்க வரி வசூல் செய்யும் டோல் கேட்டுகளை நாங்கள் வென்று வந்தால் எடுத்து விடுவோம் என்று பாஜக 2014ல் கூறியது.

இப்போது சுங்க வரி தாறுமாறாக உயர்த்தப்பட்டு மக்கள் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

அது மட்டுமல்ல எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது அரசுக்கே கூட தெரியாமல் நடக்கிறதாம். அந்த அனுமதியை அரசு உரிமதார்களுக்கு வழங்கினால் அவர்கள் கொள்ளைதான் அடிப்பார்கள்.

இதனால் பேருந்து கட்டணம் உயரும். சரக்கு கட்டணம் உயரும். விலைவாசி உயரும்.

ஆதாயம் அடைவது ஆளும் அரசியல் கட்சிகள் தான். அதுமட்டுமல்லாமல் போக்குவரத்தும் பாதிக்கபடுகிறது.

வெளிப்படைத்தன்மை இல்லாததால் ஊழல் நடக்கிறது.

பொதுமக்களை தொல்லைக்குள்ளாக்கும் சுங்க வரி எப்போது ஒழியும்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in வணிகம்

To Top