Connect with us

நிவாரணம் கொடுக்க நிதி இல்லையாம்! 68607 கோடி தள்ளுபடி செய்கிறது ரிசர்வ் வங்கி?

nirav-modi-vijay-mallaya

வணிகம்

நிவாரணம் கொடுக்க நிதி இல்லையாம்! 68607 கோடி தள்ளுபடி செய்கிறது ரிசர்வ் வங்கி?

வங்கிகளின் நிதிகள் எப்படி கார்பரேட் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கடன் தள்ளுபடி அமைகிறது.

அதாவது ஐம்பது பேரின் கடன் ரூபாய் 68607 கோடியை வாராக்கடனாக அறிவித்து உள்ளது ரிசர்வ் வங்கி.

கீதாஞ்சலி ஜெம்ஸ், ரெய் அக்ரோ, வீன்சாம் டயமண்ட், ரோடோமக் குளோபல், குடோஸ் கெமி , ருசி சோயாஸ், ஜூம் டெவேலப்பர்ஸ், கிங் பிஷர் ஏர்லைன் போன்ற கம்பெனிகளுக்குத்தான் இந்த சலுகை.

எல்லாம் வாராக் கடன் என்றால் இவர்கள் எவரிடமும் எந்த உத்தரவாதமும் இல்லாமலா வங்கிகள் கடன் கொடுத்திருந்தன ?

இவர்களிடம் இருந்து இனி கடன்களை வசூலிக்கவே முடியாது என்பதை ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்வதாகத்தான் பொருள்.

இது வங்கிக்கு வரும் லாபத்தில் கழித்துச் சொல்லப்படும் கணக்குத்தான் என்றாலும் வங்கிக்கு நட்டம்தான்.

இதை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

வங்கிகள் கடன் வழங்கும் நிபந்தனைகள் எல்லாம் சாமானியர்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும்தான். இன்று கோடீஸ்வரர் களாக வலம் வரும் பெரிய மனிதர்களுக்கு எல்லாம் இந்த சட்டங்கள் பொருந்தாது.

நம்மை ஆளுவது  யாருக்கான அரசு என்பதை இது நிரூபிக்கிறது. இது அவர்கள் அரசு . அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

சாமானியர்கள் நொந்து கொள்ள மட்டுமே முடியும் இப்போது.

தேர்தல் வரும்போது மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in வணிகம்

To Top