Home கல்வி தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாமா?

தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாமா?

தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாமா?
school-students

தமிழகத்தில் சிறுபான்மையர் பள்ளிகள் 2022 வரை தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாம். அதற்குப் பிறகு நடத்தியாக வேண்டும். இதுதான் உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு.

இதையும் சிறுபான்மை நிருவனங்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துமா என்பது அப்போதுதான் தெரியவரும்.

தமிழ்நாடு கற்றல் சட்டம் 2006 தமிழ் பாடத்தை கட்டாயமாக பத்தாம் வகுப்பு வரை கற்று தேர்வு நடத்த சொன்னது. ஆனால் அதை எதிர்த்து சிறுபான்மை நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றன. தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப் படாமல் எப்படி பாடம் நடத்துவது.

2006ல் சட்டம் இயற்றிய அரசு 2014ல் தான் சட்டத்தை அமுல்படுத்துகிறது. நீதிமன்றம் சென்ற பிறகுதான் அரசு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவரை ஆண்டுக்கு ஆண்டு விலக்கு அளித்துவந்த நீதிமன்றம் இப்போது 2022 வரை விலக்கு அளித்து அதன்பின் தமிழ் தேர்வு நடக்கும் என அறிவித்திருக்கிறது. சட்டத்தில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டது.

அரபு, உருது மொழிகளை  தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தமிழை ஒரு மொழியாக கற்று தேர்வது தமிழகத்தில் வாழ்பவர்கள் கடமை என்பதை சிறுபான்மையர் உணரவேண்டும். ஒப்புக் கொள்ளவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here