Home கல்வி சாதிக்கொரு வண்ணத்தில் கயிறு கட்டி அலையும் பள்ளி மாணவர்கள்?!!

சாதிக்கொரு வண்ணத்தில் கயிறு கட்டி அலையும் பள்ளி மாணவர்கள்?!!

சாதிக்கொரு வண்ணத்தில் கயிறு கட்டி அலையும் பள்ளி மாணவர்கள்?!!
rakshabanthan

பள்ளி மாணவர்கள் மனதில் சாதி உணர்வை பதிய வைக்க அவர்கள் கைகளில் சாதிக்கேற்ற சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், காவி என்று பல வண்ணங்களில் கயிறு கட்டி அனுப்புகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளியில் இப்படி சாதி பார்த்து கயிறு கட்டி வரும்படி பள்ளி ஆசிரியர்களே ஊக்கமளிக்கிறார்கள் என்பது இன்னும் வேதனை.

இவர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி வளர்வார்கள்? சாதி வெறியோடுதான் வளர்வார்கள்.

எப்படி தமிழன் ஒன்றுபடுவான்? சாதியால் பிரிந்தே கிடைக்க வேண்டும் தமிழன் என்று யார் திட்டமிடுவார்கள்? சாதியை புகுத்தியவர்கள் தான் திட்டமிடுவார்கள்.

தமிழன் சாதியை மறந்து ஒன்று பட்டு விட்டால் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்று அஞ்சுகிறவர்கள் அவர்கள்.

இதற்கு ஆசிரியர்களும் அவர்களை கண்காணிக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களும்தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி எங்கெல்லாம் சாதிக் கயிறு கட்டி வரும் வழக்கம் இருக்கிறதோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்தால்தான் இந்த தீமையை ஒழிக்க முடியும்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

போதாது. கடுமையான தொடர் நடவடிக்கை எடுத்தால்தான் இந்த சமுதாய தீங்கு தொடராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here