Home பொழுதுபோக்கு சின்மயிக்கு வால் பிடிக்கும் மேல்தட்டு ஊடகங்கள்?!

சின்மயிக்கு வால் பிடிக்கும் மேல்தட்டு ஊடகங்கள்?!

0
சின்மயிக்கு வால் பிடிக்கும் மேல்தட்டு ஊடகங்கள்?!
chinmayi-vairamuthu

சின்மயி எதை செய்தாலும் அதை பெரிதாக்கி அவரை தூக்கிப் பிடிப்பதை ஒரு வேலையாகவே செய்து வருகிறார்கள் மேல்தட்டு ஊடகங்கள்.

அதிலும் குறிப்பாக வைரமுத்துவுக்கு எதிராக ஒருதலைப்பட்ச கருத்து உருவாக்கத்தில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

கமல் பிறந்த நாள் விழாவில் வைரமுத்து கலந்து கொண்டதையே பெரிதாக்கி அவர் ஏதோ செய்யக் கூடாத குற்றத்தை செய்ததைப் போல் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வைரமுத்து குற்றம் செய்து இருந்தால் அவரை எப்படி வேண்டுமாலும் தண்டிக்கட்டும். ஆனால் அதை சட்ட அமைப்புகள் மட்டும்தான் செய்ய வேண்டுமே தவிர இவர்களிடம் ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்காக அவர் வெளியில் தலை காட்டக் கூடாது என்பதைப் போல் இவர்களே தீர்ப்பு தருவது பெரிய கொடுமையல்லவா?

மி டூ வில் யார் குற்றம் சுமத்தினாலும் எந்த விசாரணையும் இல்லாமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? அவர்களே குற்றம் சுமத்துவார்கள். அவர்களே தண்டிப்பார்களா?

ஏன் சின்மயி காவல் துறையை அணுகவில்லை? ஏன் அச்சப்பட வேண்டும்? ஆதாரம் இல்லை அதனால் புகார் கொடுக்கவில்லை என்றால் அது பொய் குற்றசாட்டுதானே ?

ஒன்று வைரமுத்து விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அல்லது பொய் குற்றச்சாட்டு சுமத்திய சின்மயி தண்டிக்கப் பட வேண்டும்? இரண்டில் ஒன்று நடந்தால் தான் ஊடகங்கள் இதை விவாதிக்கலாம்;

நடவடிக்கை எடுக்க மாட்டாராம். ஆனால் தண்டிக்கப் பட வேண்டுமாம். எப்போது இந்த பிரச்னை தீரும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here