பொழுதுபோக்கு

புகாரே கொடுக்காமல் தண்டிக்கும் மீ டூ சின்மயிக்கு என்ன தண்டனை? யார் கொடுப்பது?

Share

கவிஞர் வைரமுத்துவுக்கு கொடுக்க இருந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வருகையை ரத்து செய்ததால் ரத்து செய்யப்  பட்டிருக்கிறது.

இதற்குப் பின்னால் பார்ப்பனீய சக்திகளின் அசுர பலம் இருக்கிறது. அதை யாராலும் வெல்ல முடியாது.

தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒரு அவாள் சொன்னால் உடனே ராஜ்நாத்  சிங் தனது வருகையை ரத்து செய்து விடுவார் என்று எல்லாருக்கும் தெரியும். இப்போது எஸ்ஆர்எம் பச்சமுத்து பாஜக கூட்டணியில் கூட இல்லை.

ராஜ்நாத்சிங் முதலில் ஒப்புக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அப்போது தெரியாதா வைரமுத்து யார் என்று?

பேசாமல் அவருக்கு கொடுத்திருந்த பத்ம பூஷன் விருதைக்கூட திரும்பப் பெற்றுக் கொள்ளலாமே?

காவல் துறையிடம் ஒரு புகார் கொடுக்கக் கூட சின்மயிக்கு துப்பில்லை. ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கும்பிட்டு ஓடிப்போன ஆள்தானே சின்மயி. தனது மார்பகங்களையும் அக்குளையும் குறிவைத்து  படம் பிடிக்கிறார்கள் என்று குற்றம் சொன்னவர்தான் இந்த சின்ன மயி.

ஒரு டிவிட் போட்டு உன் டாக்டர் பட்டத்தை காலி செய்து விட்டேன் என்று வேண்டுமானால் சின்மயி புளகாங்கிதம் அடையலாம்.

தன் புகாரை யாரும் விசாரிக்க வில்லை என்று ஆதங்கம் காட்டும் சின்மயி தரும் செய்திகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும் பார்ப்பன ஊடகங்கள் ஏனம்மா ஒரு புகார் கொடுத்து காவல் துறையிடம் விசாரிக்க சொல்ல கூடாது என்ற கேள்வியை கேட்பதில்லை.

எம் ஜே அக்பர் முதற்கொண்டு புலன் விசாரணை பத்திரிகையாளர் வரை காவல் துறைதான் மீ டூ புகார்களை விசாரித்து வருகிறது. மீ டூ புகார் தருவதும் அதில்  விசாரணை நடத்துவதும் தவறே இல்லை. ஆனால் அதை வைத்து ஒரு ப்ளாக் மெயில் செய்ய முடியுமா? புகாரும் தர மாட்டேன். தனியார் தான் விசாரிக்க வேண்டும் என்றால் யார் அந்த தனி ஆள்? அதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறதா? ஏன் பதினைந்து வருடம் கழித்து சொல்கிறாய் ஏன் உன் திருமணத்திற்கு வாழ்த்துவதற்கு அழைத்தாய் என்ற கேள்விகளுக்கு சின்மயிடம் பதில் இல்லை.

தன்னோடு எட்டு பெண்களை துணைக்கு அழைக்கிறாரே ஏன் அவர்கள் புகார் கொடுக்க துணியவில்லை? எல்லாம் ஒரு ரகம் என்பதாலா?

அவாள்கள் ஒன்று சேர்ந்து ஆண்டாள் சர்ச்சையை ஏற்படுத்தியவரை பழி வாங்க செய்த முயற்சியின் விளைவுதான் சின்மயியா?!

ராணுவ அமைச்சருக்கு வேறு முக்கிய வேலைகள் காரணமாக விழா ரத்து செய்யப் பட்டிருந்தால் வேறு தேதி கொடுக்கலாம். மறுத்தால் அவர் யார் என்பது மீண்டும் உறுதிப்படும்.

வேறு ஒருவரைக் கொண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க எஸ்ஆர்எம் நிறுவனம் தயாராக இருந்ததாகவும் அதை வைரமுத்து மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஏன் ராஜ்நாத் சிங்கை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் இல்லையா என்ன?

பெண்கள் ஆண்களை பாலியல்  காரணம் காட்டி துன்புறுத்தினால் அதுவும் மீ டூ இயக்கத்தில் வருமா ?

அதுவும் அந்த புகாரை காவல் துறையில் கொடுக்காமல் ட்விட்டரில் சின்மயி மீது கொடுத்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது இல்லையா?

யாருக்காவது விடை தெரிந்தால் பொதுமேடையில் எழுதலாம்.

This website uses cookies.