Connect with us

மத்திய அரசு ஊழியர்களிடம் ஓராண்டு வசூல் அவசியமா ?

central-govt-staff

மருத்துவம்

மத்திய அரசு ஊழியர்களிடம் ஓராண்டு வசூல் அவசியமா ?

மத்திய அரசு தனது ஊழியர்களிடம்  ஒரு  நாள் சம்பளத்தை ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

அந்த துகை பி  எம் கேர்ஸ்‌ பண்ட் நிதிக்கு போய் சேரும். இன்று அறிவித்து இருபதாம் தேதிக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவியுங்கள் என்கிறார்கள்.

யார் தெரிவிப்பார்கள்? இது ஒரு வகை கட்டாய வசூல் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

கொரொனா நிவாரண நிதிக்கு எல்லாரும் வசூல் செய்கிறார்கள். மாநில  அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் சம்பளத்தில்  பிடித்தம் செய்கிறார்கள். ரயில்வே கூட தனது ஊழியர்களிடம் சம்பளத்தில்  பிடித்தம் செய்து பிரதமரின் நிதிக்கு கொடுக்க இருக்கிறார்கள். எல்லா துறையினரும் தங்கள் பங்கை செலுத்த தயாராக இருக்கும் நேரத்தில் மத்திய அரசு  எந்த வகையிலும் கட்டாய வசூலில் ஈடுபடக் கூடாது.

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பிரதிநிதிகள் இந்த முடிவை  கண்டித்திருக்கிறார்கள்.  மத்திய அரசு ஏதோ நிதி நெருக்கடியில் இருப்பது  போல் ஒரு தோற்றத்தை  இது உருவாக்கும் என்று அவர்கள் ஆட்சேபிக்கிறார்கள்.

176000 கோடி ரிசர்வ் வங்கி நிதியை எடுத்து யார் யாருக்கு மத்திய அரசு  கொடுத்தது என்பது பற்றி தெளிவான பதில் இல்லை.

இன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிதி சலுகைகள் கூட மறைமுகமாகத்தான் ஏழைகளுக்கு பயன் அளிக்குமே தவிர நேரடியாக அல்ல.

ஒரு மாதம் இரண்டு மாதம் என்றால் இந்த கேள்வி எழுந்திருக்காது. ஒரு வருடத்திற்கு பிடிப்போம் என்றால் அதுவரை  கொரொனா பாதிப்பு நீடிக்கும்  என்று மத்திய அரசு  உறுதியாக நம்புகிறதா ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மருத்துவம்

To Top