modi-demonetisation
கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறோம் என்று சொல்லித்தான்
மோடி அரசு ஆயிரம் ஐநூறு நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.
சொல்லி மாளாத இழப்புகளை சந்தித்த அந்த நடவடிக்கையின் முடிவு என்ன?
ரூபாய் 15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டன.
ரூபாய் 10720 கோடி மதிப்புள்ள நோட்டுகள் தான் வராமல் தங்கி விட்டன.
ரூபாய் 12877 கோடி புதிய நோட்டுகள் அச்சடிக்க மத்திய அரசு செலவு செய்துள்ளது.
ஆக கடைசியில் நோட்டு அச்சடித்த செலவு கூட தேறாத நிலையில்தான்
மோடியின் ரூபாய் நோட்டு புரட்சி சாதித்திருக்கிறது.
3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணம் கிடைக்கும் என்று திட்டமிட்ட
மோடிக்கு முக்காடு போட்டுக் கொண்ட நிலைதான் .
கறுப்புப் பணம் என்பது நோட்டுக்களால் மட்டும் ஆனது அல்ல என்பதை புரிந்து கொள்ள மத்திய அரசுக்கு வக்கில்லை.. அதிகாரிகளை மட்டும் நம்பி ஆட்சி நடத்துபவர்கள் இப்படித்தான் ஏமாறுவார்கள்.
This website uses cookies.