Home இந்திய அரசியல் மராட்டியத்தில் சிவசேனாவும் பாஜகவும் நடத்தும் குடுமி பிடி சண்டை?

மராட்டியத்தில் சிவசேனாவும் பாஜகவும் நடத்தும் குடுமி பிடி சண்டை?

மராட்டியத்தில் சிவசேனாவும் பாஜகவும் நடத்தும் குடுமி பிடி சண்டை?
shiv-sena-bjp

மராட்டியத்தில் சிவசேனாவும் பாஜகவும் நடத்தும் குடுமி பிடி சண்டை?!

பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்று ஆட்சி அமைக்கத் தேவையான 105+56 = 161 இடங்களை பெற்று விட்டார்கள். 145 இடங்கள் மட்டுமேஆட்சி அமைக்கத் தேவை.

பத்து நாளாக முதல்வர் பதவி எனக்கு உனக்கு என்று சண்டை போட்டுக் கொண்டு தேர்ந்தெடுத்த மக்களை கேலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன் உடன்படிக்கை என்றால் அது மக்கள் மு ஏன் முன்பே வைக்கப்படவில்லை? அதிகாரத்தை சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்பதே உடல்படிக்கை என்கிறது சிவசேனா. மறுக்கிறது பாஜக. இப்படிப்பட்டவர்கள் மக்கள் நலனை எப்படி முன்வைப்பார்கள்.?

2014லும் இதுபோல்தான் பாஜக முதலில் ஆட்சி அமைத்து பின்னால் சிவசேனா கூட்டு சேர்ந்தது. இப்போதும் அதே பல்லவி என்றால் மக்கள் தீர்ப்பை மதிக்கும் லட்சணம் இதுதானா?

தேசியவாத காங்கிரஸ் 54 + காங்கிரஸ் 44 ஆக எதிர்கட்சிகள் 98 இடங்களை பெற்று இருப்பதால் சிவசேனாவின் 56 இடங்களை சேர்த்து பெரும்பான்மைக்கு தேவையான 154 எண்ணிக்கை வருவதால் அதற்கும் முயற்சித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

இந்த முயற்சிக்கு தான் தயாராக இல்லை  என்று சொல்லிக் கொண்டு  இருந்த சரத் பவார் இப்போது மறுபரிசீலனை செய்கிறாராம்.

ஆனால் முதலில் பாஜகவின் படனாவிஸ் முதலில் முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு பிறகு கூட்டணி விளையாட்டை தொடரலாம் என்பதே இப்போதைய நிலவரம்.

மத்தியில் ஆண்டு கொண்டு அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுவார்களா?

பாராளுமன்றத்தில் பெற்ற மகத்தான வெற்றியை சட்ட மன்ற தேர்தலில் பாஜக பெறமுடியவில்லை என்பதே நல்ல அறிகுறி.

எப்போது முடிவுக்கு வரும் இந்த விளையாட்டு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here