Home இந்திய அரசியல் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து புரோகிதப் பெண்களாக்கி அடிமைப்படுத்திய பார்ப்பனீயம்??!

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து புரோகிதப் பெண்களாக்கி அடிமைப்படுத்திய பார்ப்பனீயம்??!

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து புரோகிதப் பெண்களாக்கி அடிமைப்படுத்திய பார்ப்பனீயம்??!

மும்பையை அடுத்த மொஹோபதா என்ற கிராமத்தை சேர்ந்த
ராமேஷ்வர் கார்வே என்ற பார்ப்பனர்
பிராமணர் அல்லாத 150 பெண்களுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து
அவர்களுக்கு சான்றிதழ் பெற்றுத் தந்ததுடன் அவர்களை , தானே , நவி மும்பை பகுதிகளில் பிறப்பு இறப்பு மற்றும் இதர சனி சாந்தி பூஜை உட்பட எல்லா சடங்குகளையும் செய்ய வைத்திருக்கிறார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் சுமார் 18 ஆண்டுகள் இதை சீர்திருத்தம் என்பதா ? அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்பதா ? செய்தது தனிமனிதர் – அவர் பார்ப்பனர்
இந்த முயற்சிக்கு பார்ப்பனீய இயக்கங்கள் ஆதரவு அளிக்கின்றனவா?
ஆம் என்றால் ஏன் அவர்களே எல்லா பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கும்
இந்த பயிற்சியை அளிக்கக் கூடாது?

இல்லை என்றால் இது சரியல்ல என்றாவது சொல்ல வேண்டும்.
அதையும் சொல்ல மாட்டார்கள் ஏன் என்றால் ஒருவகையில்
அந்த பெண்களை புரோகிதர் ஆக்கி
சனாதன தர்மத்துக்கு அடிமைகள் ஆக்கி விட்டாரே
அந்த வகையில் அவர்களுக்கு சம்மதமே
ஐந்து பள்ளிக்கூடங்களையும் கார்வே நடத்தி வருகிறார்.
கல்வி செல்வத்தை எல்லாருக்கும் வழங்க வேண்டும் என்ற
அவரது தொண்டு உண்மையில் பாராட்டப் பட வேண்டியது தான்.
ஆனால் இந்த சமய தொண்டை அவர் மராத்தி மொழியிலும்
செய்திருக்க வேண்டும்.

பார்ப்பனர் அல்லாத ஆண்களுக்கும் செய்து கொடுத்து அவர்களை
கோவில் அர்ச்சகர்கள் ஆக உரிமை பெற்றுத் தர முயற்சித்திருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான தொண்டு
அம்பேத்கர் எல்லாருக்கும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்று
போராடியது உண்மைதான்.

ஒருவகையில் பாராட்ட வேண்டிய முயற்சியாக இருந்தாலும்
மறுபுறம் பெண்களை பார்ப்பநீயத்துக்கு அடிமைகள்
ஆக்கும் முயற்சிக்கும் இரையாகக் கூடாது அல்லவா?
எனவே எச்சரிக்கையுடன் வரவேற்போம் இந்த முயற்சியை?!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here