Home இந்திய அரசியல் மராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதார் அதிகாரப் போட்டியே?!

மராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதார் அதிகாரப் போட்டியே?!

மராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதார் அதிகாரப் போட்டியே?!
Devendra Fadnavis

மராட்டியத்தில் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார். அவர்  செல்வாக்கு மிக்க பார்ப்பனர்.

பார்ப்பனர் அல்லாதாரை முதல்வராக்க சிவசேனா விரும்புகிறது. அதற்கு பாஜக தயாராக இல்லை. வாய்ப்பை பயன்படுத்தி தனது மகனை முதல்வராக்க உத்தவ் தாக்கரே விரும்பலாம்.

பார்ப்பனர்- மராத்தாக்கள் மோதல் முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. சிவாஜி இறந்ததும் அவர் வாரிசுகளுக்குள் ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி முதன் முதலாக சித்பவன் பார்ப்பனர் ஆன பாலாஜி விஸ்வநாத் என்பவர் பேஷ்வாவாக அறிவிக்கப் பட்டார். அதாவது முதன் மந்திரி. பெயருக்குத்தான் முதன் மந்திரியே தவிர எல்லா அதிகாரங்களும் அவரிடத்தில்தான்.

அடுத்த  நூற்றைம்பது ஆண்டுகள் பேஷ்வாக்கள் ராஜ்ஜியம்தான். பெயருக்குத்தான் மராட்டா மன்னர். அதிகாரம் பேஷ்வாக்கள் கையில்.

ஆனால் பார்ப்பனர்கள் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் ஒட்டிக்கொண்டு அதிகாரத்தில் அமர்ந்து விடுவார்கள். பார்ப்பனர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் அதிகாரத்தில் பங்கு வகிப்பவர்கள் ஆகவும் விளங்கும் மாநிலம் மகாராஷ்டிரா.

அந்த வகையில் இப்போதும் அந்த அதிகாரப் போட்டி நிலவுகிறது.

திடீர் என்று நிதின் கட்கரியை முதல் அமைச்சர் ஆக்கலாமா என்று திட்டம் தீட்டி வருகிறார்கள். அவரும் பார்ப்பனர் தான். எனவே அவர் வந்தால் பிரச்னை இல்லை.

சரத் பவார் தான் இன்று மராட்டா மக்களின் பிரதிநிதி என்று சொல்லலாம்.    அவர்களையும் பிரித்து இந்து என்ற போர்வையில் பல கட்சிகளிலும் சிதறடித்து விட்டார்கள்.

மராத்தாக்களுக்கு 16% இட ஒதுக்கீடு தர பாஜக அரசு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

சிவசேனை இந்து மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்குமே தவிர மராத்தா மக்களின் உரிமைகளுக்கு என்று குரல் கொடுப்பதில்லை. சிவசேனைக்கு வாய்ப்பு வந்தபோது பால் தாக்கரே ஒரு பார்ப்பனரைத்தான் முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தார். அவர் மனோகர் ஜோஷி. மூன்று  ஆண்டுகளில் அவரை நீக்கி விட்டு மராத்தா நாராயண் ரானே வை முதல்வராக்கினார் பால் தாக்கரே.

பார்ப்பனர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் எங்கிருந்தாலும் பார்ப்பநீயத்துக்கு ஆபத்து வந்து விடாமல் பாதுகாப்பதில் கருத்தாக இருப்பார்கள்.

அந்த வகையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதிகாரம் தங்கள் கையில் நிலைக்க வைக்க விரும்புகிறது ஆர்எஸ்எஸ் தலைமை.

யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது  நாளை தெரிந்து விடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here