Home இந்திய அரசியல் 2G வழக்கு தீர்ப்பும் ஆர் கே நகர் இடைத்தேர்தலும் ஒரே நாளில்??!!

2G வழக்கு தீர்ப்பும் ஆர் கே நகர் இடைத்தேர்தலும் ஒரே நாளில்??!!

2G வழக்கு தீர்ப்பும் ஆர் கே நகர் இடைத்தேர்தலும் ஒரே நாளில்??!!
raja-kanimozhi-2g

2G  வழக்கிலும் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கிலும் டிசெம்பர் மாதம்  21 ம் தேதி காலை  10.30  மணிக்கு சொல்லப்படும் என்று சி பி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி அறிவித்திருக்கிறார் .        அதாவது ஆ ராசா மற்றும் கனிமொழியின் அரசியல் வாழ்வு அந்த தீர்ப்பில் அடங்கி இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்ட தேதி ஏப்ரல்   26 ம் தேதி.   அதாவது ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப் படுகிறது.

தீர்ப்பு தேதி அறிவிக்கப் படும் முன்பே   ஆர் கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது.

தீர்ப்பு யாரையாவது பாதிக்கும் என்றால் அது தி மு க வைத்தான்.

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டம் என்று பிரசாரம் செய்து குற்றச்சாட்டு புனையப் பட்டது முப்பதாயிரம் கோடி இழப்பு என்று.

விடுதலை என்றால் அது நிச்சயம் தி மு க வுக்கு பெருத்த ஆறுதலை தரும்.   அதே நேரம் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பு வந்தால் அது ஓரளவுக்கு  பாதிப்பை  ஏற்படுத்தலாம் .

கனிமொழி விடுதலை செய்யப் பட்டு ராசா மட்டும் தண்டிக்கப் பட்டால் கூட பாதிப்பு கட்சிக்கு இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அரசியல் நிகழ்வுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஒரு நீதிபதி தீர்ப்பு தேதியை நிர்ணயிக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை.

ஆனாலும் அப்படி ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியாது!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here