Home சட்டம் அரசு செலவில் 2000 குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் வீதம் ரூ 200 கோடி கொடுத்த முதல்வர்?!

அரசு செலவில் 2000 குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் வீதம் ரூ 200 கோடி கொடுத்த முதல்வர்?!

அரசு செலவில் 2000 குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் வீதம் ரூ 200 கோடி கொடுத்த முதல்வர்?!
chandrasekhara-rao

தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் புதுமையானவர்.

ஆனால் அவரது செல்வாக்கை தடுத்து பாஜக கடந்த பாராளுமன்ற தேர்தலில் நான்கு இடகளில் வெற்றி பெற்று அடுத்தது நாங்கள்தான் என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

இன்னிலையில் கேசிஆர் தனது சொந்த கிராமம் சிந்தாமடகா செல்கிறார். அங்கு உள்ள 2000 குடும்பங்களுக்கும் தலா பத்து லட்சம் தரப்போவதாகவும் அதை வைத்து நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

டிராக்டர், வீடு நிலம் உபகரணங்கள் எதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு உடனே இந்த துகையை நான் அனுமதிக்க போகிறேன் என்றும் அறிவிக்கிறார்.

அந்த கிராமத்து மக்கள் ஏழ்மையில் உழல்வதாகவோ அல்லது அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாகவோ இருந்தால் ஒருவேளை இது சட்டப்படி சரியாக இருக்கலாம்.

ஆனால் ஒரு முதல்வர் தனது சொந்த கிராமம் என்ற அடிப்படையில் மட்டும் தன் விருப்பப்படி நன்கொடை வழங்க முடியுமா என்பது சட்டப்படி கேள்விக்குரியது.

எதிர்க்கட்சிகள் இதை நீதிமன்றம் கொண்டு செல்வார்களா அல்லது விட்டு விடுவார்களா என்பதை தாண்டி ஜனநாயகத்திலும் மன்னர் போல சிந்தித்து செயல்படும் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு கேசிஆர் ஒரு உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here