Home இந்திய அரசியல் உதட்டில் காந்தி உள்ளத்தில் கோட்சே?

உதட்டில் காந்தி உள்ளத்தில் கோட்சே?

உதட்டில் காந்தி உள்ளத்தில் கோட்சே?
gandhi-gotse

அண்ணல் காந்தி அடிகளின் 150வது பிறந்த தினத்தில் நாட்டை ஆளும் பாஜக அவருக்கு மரியாதை செலுத்துகிறது.

அது உண்மையானதா?

உதட்டளவில் காந்தியின் பெயரை உச்சரித்துக் கொண்டே கோட்சேவின் கனவைத்தானே நிறைவேற்றி வருகிறார்கள்.

காந்தி சுடப்பட்ட போது அறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் உலக உத்தமர் மகாத்மா காந்தி என்று ஒரு கட்டுரை வனைந்தார். அதில் காந்தி யின் செய்தியை இலட்சியத்தை நேருவின் வழி அறிவிக்கிறார். ஆம். ‘பரம ஏழைகளும் இது தாங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பி௯ல் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிரதுன்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக் கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்மாக வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன். ‘இதுவே அவரின் லட்சியம்.

அது மட்டுமல்ல அண்ணா காந்தியாரின் கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு  எதிராக நடந்த இந்துக்களின் சதிகளை விவரிக்கிறார். ‘இந்து மதத்திலே ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம்  தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும் புதிய தத்துவார்த்ததாலும் நீக்கும்  காரியத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த்தாரோ அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த இந்து கிளம்பினான். ‘அண்ணாவை மிகவும் பாதித்தது அண்ணலின் மறைவு என்பதை அவரது கட்டுரை பிரதிபலித்தது .

காந்தி வேளாண்மை செய்வோரின் உரிமைகளுக்கு போராடி இருக்கிறார். ஆனால் இன்று என்ன நடக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெரு முதலாளிகளுக்கு லாபம் தேடித்தர மாநில மத்திய அரசுகள் உழைத்துக் கொண்டிருக்கின்றன.

காந்தியடிகளின் கனவை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்று மனசாட்சி உள்ள யாராவது சொல்ல முடியுமா?

காந்தியின் உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்துவதுடன் அந்த பொம்மையை சுட்டு அதையும் வெளியிட்டார்களே அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுத்தார்களா?

சத்தியமும் அகிம்சையும் இறுதி வெற்றியை அடையும். அதுவே காந்தியின் கனவு.

உலக நாடுகள் பலவற்றுக்கும் காந்தி ஒரு உன்னதமான வழிகாட்டி. இந்தியாவில் நோட்டில் மட்டும் இருக்கிறார்.

இந்த உதட்டு வாழ்த்து இலங்கையில் இருந்தும் வருகிறது. காந்தி பிறந்த நாளில் அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் உரிமைக் குரல் கொடுக்கும் சிறுபான்மையினரை மிதித்துக் கொண்டிருக்கிறார்களா இல்லையா?

என்றைக்கு ஆட்சியாளர்கள் காந்தியை உள்ளத்திலும் இருத்தி அவர் வழி ஆட்சி நடத்த முனைகிறார்களோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான விடிவு காலம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here