Home இந்திய அரசியல் பிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை ??!!

பிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை ??!!

பிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை ??!!
modi-amit-shah

மத ரீதியாக தாக்குதலுக்கு ஆளானவர்கள் இந்தியாவில் நுழைந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

அந்த முயற்சியை எதிர்க்கும் முதல் அரசாக பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து விட்டது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிற மாநிலத்தவர் நுழைய அனுமதிக்கும் இன்னர் லைன் பெர்மிட் முறை அருணாச்சல், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் அமுலில் உள்ளது. பெர்மிட்டை மத்திய அரசு வழங்கும். அந்த உரிமையை மேகாலயாவில் மாநில அரசு வழங்கும்.

ஆட்சியில் இருப்பதற்காக பாஜக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்பதற்கு  சாட்சியாக மேகாலயா கூட்டணி அரசின் இந்த முடிவு அமைந்திருக்கிறது.

பிற மாநிலத்தவர் நுழைவு  தங்களுக்கு ஆபத்து என்று கருதும் மாநிலங்கள் இதே முறையை பின்பற்றத் துவங்கும் என்பதற்கு இது முன்னோட்டமா?! 

பிற மாநிலத்தவர் ஆதிக்கம்  அதிகரித்து விட்டது என்று குமுறும் சிவசேனா இதே முறையை பின்பற்ற முனையுமோ?

மராட்டியர் ஆதிக்கம் அதிகம் என்று கர்நாடகம் தடுக்க முனையுமோ?

எதிர்காலம் தான் பதில் அளிக்க வேண்டும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here