Home இந்திய அரசியல் பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணைக் கெடுத்து பாவம் செய்த பாதிரியார்கள் ??!!

பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணைக் கெடுத்து பாவம் செய்த பாதிரியார்கள் ??!!

பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணைக்  கெடுத்து பாவம் செய்த பாதிரியார்கள் ??!!

கேரள மாநிலம் மலங்கரா ஆர்தொடாக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு ஒரு உறவுக்கார பாதிரியாரிடம் தொடர்பு வைத்திருந்ததாககூறி பாவ மன்னிப்பு கோரினார்.

அப்போது அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்.    பாவ மன்னிப்புக் கொடுத்த பாதிரி கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு அதை விடியோ எடுத்து மற்ற பாதிரிகளிடம் காட்ட அவர்களும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.  இதுபோல் எட்டு பாதிரியார்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.

விபரம் தெரிந்த கணவர் சபை நிர்வாகத்திடம் புகார் செய்ய சபை ஐந்து பாதிரியார்களை மட்டும் இடை நீக்கம் செய்திருக்கிறது.

மற்ற மூவரும் தண்டிக்கப் படும் வரை ஓயப் போவதில்லை என்று கணவர் கூறுகிறார்.

அவர் திருச்சபையின் புகழை கெடுக்க விரும்பாமல் காவல் துறையில் புகார் கொடுக்காவிட்டாலும் பிரச்னை சமூக வலை தளங்களில் வெளியாகி விட்டதால் வேறு வழியின்றி குற்றப் பிரிவு விசாரணைக்கு டி ஜி  பி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டிருக்கிறார்.

அவர்களுக்குதான் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் ஈடுபட உரிமை  உண்டே இந்த பாதிரிகளுக்கு ஏன் இந்த விபரீத எண்ணம்.

ஆக எல்லா மதங்களிலும் கொடுமையானவர்கள் இருக்கத் கத்தான் செய்கிறார்கள்.

நடவடிக்கை எடுத்த திருச்சபைக்கு பாராட்டுக்கள்.

வெளியில் வந்தது ஒன்று என்றால் வெளியில் வராதது இன்னும் எத்தனையோ என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

மதத்தை மாசு  படுத்தும் சக்திகள் களைஎடுக்கப் படத்தான் வேண்டும்.

ஆமாம் . இந்தப் பாதிரிகளுக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா?

சட்டம் தண்டனை கொடுக்கும்.

இன்னொரு பாதிரி பாவமன்னிப்பு கொடுப்பார்.

எனவே மீண்டும் குற்றம் செய்வார்களோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here