Home இந்திய அரசியல் கேரளாவில் ராகுல் போட்டியிடுவது அச்சத்தின் அடையாளமா?

கேரளாவில் ராகுல் போட்டியிடுவது அச்சத்தின் அடையாளமா?

கேரளாவில் ராகுல் போட்டியிடுவது அச்சத்தின் அடையாளமா?
rahul-gandhi-1

வயநாட்டில் ராகுல் போட்டியிடுவர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கேரளாவில் காங்கிரசும் கம்யுனிச்டுகளும் தான் ஆளும் கட்சி எதிர்கட்சிகள்.

ஆனால் இந்தியா முழுதும் பல மாநிலங்களில் இருவரும் ஒரு அணியிலேயே போட்டியிடுகின்றனர்.

மோடியை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஏனைய மாநிலங்களில் ஒருமித்து இருக்கும் இவர்கள் கேரளாவில் மட்டும் போட்டியிட்டுக் கொள்வது தவறல்ல.

ஆனால் அங்கே காங்கிரசின் தலைவரே போட்டியிடுவதும் அவரை தோற்கடிப்போம் என்று மாநில முதல்வர் பேசுவதும் எதிர்கட்சி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமேதியில் ராகுலின் வெற்றியில் ஒருவேளை சந்தேகமோ?

தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல. முலாயம் சிங் யாதவ் கூட இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்று ஒன்றை ராஜினாமா செய்தார்.

எதிர்க்கட்சி ஒற்றுமையை இந்த போட்டி சரிக்காமல் இருந்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here