Home மொழி செம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி? பாஜகவின் ஓரவஞ்சனை??!!

செம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி? பாஜகவின் ஓரவஞ்சனை??!!

செம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி? பாஜகவின் ஓரவஞ்சனை??!!
Ramachandran-Nagaswamy

செம்மொழி விருது தேர்வுக் குழுவில் தமிழ் வெறுப்பாளர் நாகசாமி?

வேதங்களில் இருந்து வந்தது திருக்குறள் என்று தமிழர் நெஞ்சில் தீயை வைத்தவர் நாகசாமி.

திருவள்ளுவரை சிறுமைப்படுத்துவது மட்டுமின்றி தமிழர்களுக்கு என்று தனியே கலாச்சாரப் பெருமை எதுவுமே இல்லை எல்லாமே பார்ப்பனர்களின் வேதத்தை பின்பற்றி உருவானவை தான் என்று திருபுவாதம் பேசி உள்ளிருந்தே கொல்லும் நோயாக தன்னை நிருபித்து வருபவர் நாகசாமி.

இவர் எழுதிய திருக்குறள் புத்தகத்தில் கடவுள் வாழ்த்தில் வரும் ‘அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாக்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது ” என்ற  குறளுக்கு அந்தணரின் (பார்ப்பனரின் ) கால்களை வணங்கினால் தவிர பிறவி எடுப்பதை தடுக்க முடியாது என்றும் பொருள் கூறலாம் என்று எழுதி தனது சாதி வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டவர் அவர்.

காஞ்சி சங்கராச்சாரிக்ளின் படங்களை போட்டு தான் யார் பக்தன் என்பதை பறை சாற்றவும் அவர் வெட்கப்படவில்லை.

அப்படிப்பட்ட தமிழர் வெறுப்பாளரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப் படும் குடியரசுத் தலைவர் விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக மத்திய பாஜக அரசு நியமிதிருப்பதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

நாகசாமிக்கு பத்மபூஷன் விருது பாஜக வழங்கியதில் வியப்பென்ன?

தமிழுக்கும் தமிழருக்கும் விரோதிகளாக தங்களை உருவகப்படுத்திக் கொள்வதில் பார்ப்பன்ர்களுக்கோ பாஜக வுக்கோ எந்த தயக்கமும் இல்லை.   நீங்கள் எங்கள் அடிமைகள். ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும் என்று வெட்கமில்லாமல் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் தயார் என்பதைத்தான் இந்த நியமனம்  காட்டுகிறது.

ஏற்கெனெவே செம்மொழி தமிழாய்வு நிறுவனம் நிதி ஒதுக்கீட்டில் பார பட்சம் காட்டப் பட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் மத்திய அரசுக்கு எது செய்தாவது அதை முடக்க வேண்டும் என்று நினைக்கிறது  என்பதில் என்ன சந்தேகம்? இல்லையென்றால் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டாமல் செய்யட்டும்.

பாஜக வின் இத்தகைய விபரீத விளையாட்டுகள் நாட்டுக்கு நலம் பயப்பவை அல்ல.

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இது வருவதால் அவர்கள் இப்படி எல்லாம் விளையாடுகிறார்கள்.

தமிழ்நாட்டிலே இருக்கும் அரசுக்கு

இதில் கவனம் செலுத்த நேரமில்லை.

இதைப்பற்றி பேசவே மறுப்பவர்கள் தான் இன்று ஆட்சியில். பேசினால் எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களே?!

யார் ஆண்டாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்தியிலே இருப்பவர்கள் காப்பார்கள் என்று நம்பியிராமல் தாங்களே அவற்றைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்பவர்களே ஆட்சிக்கு வரவேண்டும் தமிழ்நாட்டில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here