பருப்பு விலை உயர யார் காரணம்? மத்திய அரசா? மாநில அரசா?


      கிலோ 85   ரூபாயாக இருந்த துவரம் பருப்பின் விலை 250  அளவுக்கு உயர்ந்து நிற்க யார் காரணம்.? 
                 
         ஆண்டு தோறும சுமார்  45  லட்சம் டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா!.     இந்த ஆண்டு விளைச்சல் சரியில்லை  , ஊக வணிகம் காரணமாக வியாபாரிகள் பதுக்கி விப்டார்கள் என்றெல்லாம் அரசு  காரணம் காட்டி விலை உயர்வுக்கு தாங்கள் காரணமில்லை என்பது போல காட்டிகொள்ள  விரும்பினாலும் யாரும் அதை நம்பவில்லை. 
             ஓராண்டுக்கு முன்பே கொள்முதல் செய்து இனி தக்க கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப் படும் என்று இப்போதுதான் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார்
              இதை சொல்ல ஓராண்டு தேவைப்படிருகிறது..   
     மத்திய அரசிடம் இருந்து  500  ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதா ல்
நவம்பர் மாதத்தில்  i இருந்து கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலை பருப்பு விநியோகம் செய்யப்படும் என்று ஜெ ஜெயலலிதா  அறிவித்துள்ளார். 
               வெங்காயத்ததால் ஒருமுறை வீழ்ந்தது வாஜ்பாய் அரசு. இம்முறை நிலையை சரி செய்யவில்லை என்றால் மோடி அரசும் விழும் என்பதில் சந்தேகம்  இல்லை. 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)