Home Latest News ஐக்கிய இந்திய நாடுகள் -அதுதான் இந்தியா

ஐக்கிய இந்திய நாடுகள் -அதுதான் இந்தியா

0
ஐக்கிய இந்திய நாடுகள் -அதுதான் இந்தியா
நமது நாட்டின் பெயரை இந்தியா என்கிற பாரதம் என்று அழைக்கிறது நமது அரசியல சட்டம் .
அது மட்டுமல்ல . அது பல மாநிலங்களின் மைய அரசாகவும் விளங்கும் என்றும் ( shall be a Union of States ) என்றும் அது விளக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு ஒன்று அரசின் பெயரையும் தன்மையையும் மேற்கண்டவாறு விவரிக்கிறது.
இந்தியாஅதாவது பாரதம் பல்வேறு மாநிலங்களின் மைய அரசாக விளங்கும் என்பது சரியானால் அதன் பெயர் ஐக்கிய இந்திய நாடுகள் என்றுதானே இருந்திருக்க வேண்டும்? இருந்தாலும் சுருக்கமாக இந்தியா அல்லது பாரதம் என்று சௌகரியதுக் காகஅழைக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி போராட்டம் எழும் போதெல்லாம் நமது அரசியல சட்டம் மத்திய அரசை மையமாக கொண்ட மய்யத்தன்மை கொண்டதா அல்லது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் சமஷ்டி தன்மை கொண்டதா என்ற கேள்வி எழுவது வழக்கம். Whether it is Unitary or Federal is yet to be finally decided.
இந்தியாவில் ஒருமைத்தன்மை நிலைத்துவிட்டது. யாருக்கும் பிரிந்து போகும் மனநிலை இல்லை. பிரிவினை தடை சட்டம் இருப்பது உண்மைதான். ஆனால் பிரிவினை கோரிக்கை எழாமல் இருப்பதற்கு சட்டம் மட்டுமே காரணம் இல்லை. சௌகரியம்தான் காரணம்.யாரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் தொழில் செய்யலாம் என்று அரசியல சட்டம் நமக்கு தந்திருக்கும் உரிமை தனிச்சிறப்பு.
இந்த ஒருமைத்தன்மைக்கு இரண்டு அம்சங்கள் பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. ஒன்று மாநிலங்களின் தனித் தன்மையை பாதிக்கும் அளவிற்கு மாநிலங்களுக்கு இடையே யான மக்கள் தொகை பரிவர்த்தனை . இரண்டு மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரக் குவியல். மாநில சுயாட்சி கோரிக்கை அவ்வப்போது எழுவது மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படும்போது. அதற்கு நாட்டின் பெயர் கூட ஒரு காரணம்.
இந்தியா என்ற பெயரில் தனித் தன்மை கொண்ட மாநிலங்கள் இருப்பது மறைக்கப்படுகிறது. மாறாக ஐக்கிய இந்திய நாடுகள் என்னும்போது மாநிலங்களின் தனித் தன்மை வெளிப்படையாக தெரிகிறது.
மேலாகப் பார்க்கும்போது இது இந்திய ஒற்றுமைக்கு எதிரான கருத்து போலத்தான் தோன்றும்.
உண்மையில் இது இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் சிந்தனைதான்.
அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமை கொண்டவைகளாக விளங்கினாலும் இதுவரை யாரும் பிரிவினை பற்றி சிந்தித்ததே இல்லை. அதுதான் உண்மையான தேசியம்.
பெயரில் என்ன இருக்கிறது என்போருக்கு சொல்கிறேன். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.
எனவே ஐக்கிய இந்திய நாடுகள் என்ற பெயர்தான் சரி. அப்போதுதான் விழிப்புணர்வு பெருகும். தன்னம்பிக்கை பிறக்கும். ஒற்றுமை நிலைக்கும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
vaithiyalingamv@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here