Home Latest News அன்னை பாரதம் வாழ்க சொல்வோம்? பாரத் மாதா கீ ஜெய் சொல்ல மாட்டோம்???!!! சரியா தவறா?

அன்னை பாரதம் வாழ்க சொல்வோம்? பாரத் மாதா கீ ஜெய் சொல்ல மாட்டோம்???!!! சரியா தவறா?

0
அன்னை பாரதம் வாழ்க சொல்வோம்? பாரத் மாதா கீ ஜெய் சொல்ல மாட்டோம்???!!! சரியா தவறா?

ஜெய் ஹிந்த் , ஜெய் பாரத் ஜெய் மகாராஷ்டிரா என்று சொல்லிக்கொண்டே பாரத் மாதா கீ ஜெய் சொல்ல மறுத்த சட்ட மன்ற உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல் இடை நீக்கம் செய்யபட்டார்.
அல்லாவைத் தவிர வேறு எவரையும் வணங்க தன் மதம் அனுமதிக்க வில்லை என்று சொல்லி விளக்கம் சொல்லியிருக்கிறார்.

காங்கிரசின் அப்துஸ் சத்தார் என்ற காங்கிரஸ் உறுப்பினர் இடைநீக்கத்தைவரவேற்றிரிக்கிறார்.
இதற்குள் கழுத்தில் கத்தி வைத்தாலும் சொல்ல மாட்டேன் என்றும் அரசியல் சட்டம் அப்படி நிர்பந்திக்க வில்லை என்றும் ஒரு தரப்பும் மறுப்பவர்கள் தலையை கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசு என்று மறு தரப்பும் மாறி மாறி நிலைமையை மோசமாக்கி வருகிறார்கள்.
தேசிய கீதம் வங்க மொழியில் இருக்கிறது. . எல்லாரும் புரிந்தோ புரியாமலோ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

விளக்கம் கிடைக்க முடியாத பல முரண்பாடுகளோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என் தாய் மொழி தமிழ். என் தாய் நாடு இந்தியா என்றால் என் தாய் மொழியில் அதை வாழ்த்தி போற்றுவது தானே முறை. இந்தி என் நாட்டு மொழி என்றாலும் அது என் தாய் மொழி அல்ல.
என் தாய் நாட்டை வேற்று மொழியில்தான் வாழ்த்தி முழக்கம் இட வேண்டும் என்று என்னை யாராவது கட்டாயப் படுத்தினால் மறுக்க எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா?
எனவே சொல்லுவோம் அன்னை பாரதம் வாழ்க!!!
சொல்ல மறுப்போம் பாரத் மாதா கீ ஜெய்???!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here