Home Latest News இந்திய அரசின் அறிவுரை இல்லாமல் மலேசியா வைகோவை திருப்பி அனுப்பி இருக்குமா?

இந்திய அரசின் அறிவுரை இல்லாமல் மலேசியா வைகோவை திருப்பி அனுப்பி இருக்குமா?

இந்திய அரசின் அறிவுரை இல்லாமல் மலேசியா வைகோவை திருப்பி அனுப்பி இருக்குமா?

விசா பெற்று ஒரு திருமண விழாவிற்கு சென்ற வைகோவை மலேசியா அரசு துணை பிரதமர் அலுவலக உத்தரவு என்று சொல்லி அனுமதிக்க மறுத்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.

ஒரு இந்தியருக்கு இழைக்கப் பட்ட அநீதியாக இந்திய அரசு நினைத்தால் உடனே நடவடிக்கை எடுத்திருக்கும்.

தமிழர்கள் அதிலும் ஈழ ஆதரவு தமிழர்கள் என்றாலே மோடியின் அரசுக்கு இரண்டாம் தர இந்தியராகத்தான் தெரிகிறது.

ஸ்டாலின் ,திருநாவுக்கரசு உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள் .

மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.    இலங்கையில் வழக்கு இருக்கிறது என்றால் ஏன் விசா வழங்க வேண்டும்?    அப்போது தெரியாதா வழக்கு இருப்பது?

இந்திய அரசு  தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்ல முடியுமா?

இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆகி வருகிறார்கள் என்ற உணர்வு வலுவாகிக் கொண்டிருக்கிறது.

ஆமாம்.   தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதே??!! எங்கே அது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here