Home Latest News ஜல்லிக்கட்டு- தமிழர்களுக்கு பா ஜ க – ஜெயலலிதா அரசுகளின் துரோகம்?!!!

ஜல்லிக்கட்டு- தமிழர்களுக்கு பா ஜ க – ஜெயலலிதா அரசுகளின் துரோகம்?!!!

0
ஜல்லிக்கட்டு- தமிழர்களுக்கு பா ஜ க – ஜெயலலிதா அரசுகளின் துரோகம்?!!!

எதிர்பார்த்ததைப் போலவே உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக் கால தடை விதித்து விட்டது.

மத்திய அரசு 07.01.2016 ல் கொண்டு வந்த அறிக்கையில் கண்ட ஓட்டைகளே இந்த குளறுபடிக்கு காரணம். காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை மத்திய அரசு நீக்காமலேயே ஏன் இந்த அறிக்கையை வெளியிட்டது. ?

ஜெயலலிதா அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு போட்ட மறு சீராய்வு மனு என்ன காரணத்துக்காக கிடப்பில் போடப்பட்டது?
மறுசீராய்வு மனு விசாரணைக்கு வந்திருந்தால் மத்திய அரசு அறிக்கை வெளியிட அவசியம் வந்திருக்காது.

ஆனால் மத்திய அரசின் அறிக்கையை எதிர்த்து போடப்பட்ட மனுக்கள் மறுநாளே விசாரணைக்கு வருகின்றன. உச்ச நீதி;மன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை இது காட்டவில்லையா?

உச்ச நீதி மன்றம் நான்கு ஆண்டுகளாக நடக்காத ஜல்லிக்கட்டை இப்போது நடத்தியே ஆக வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் சென்ற ஒரு ஆண்டு மட்டுமே நடக்கவில்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்றத்திடம் சொல்லத் தவறியது யார்?

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோருவதும் , அந்த உரிமை எங்களுக்கு இல்லை மாநில அரசு வேண்டுமானால் கொண்டுவரட்டும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் சொல்லுவதும் யாரை ஏமாற்றுவதற்காக???!!!

ஜல்லிக்கட்டு வழக்கொழிந்து போகட்டும் என்று இருவருமே நினைக் கிறார்கள். பாஜகவில் ஒரு மேனகா காந்தி என்றால் காங்கிரசில் ஒரு ஜெய்ராம் ரமேஷ் . , விலங்குகள் பாதுகாப்பு என்ற போர்வையில் மனிதர்களை ஆதிக்கம் செய்து வஞ்சிப்பவர்கள்
தங்கள் மதம் சாராத எந்த விழாக்களையும் பிற்பட்டோர் தாழ்த்தப் பட்டோர் நாடு முழுவதும் கொண்டாடக் கூடாது என்ற ஆழமான சதிதான் இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளும்.

கேரளாவில் யானைகள் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. கோவில்கள் சம்பத்தப் பட்டு வதை செய்யலாம். நாய் கண்காட்சிகள் நடக்கின்றன. பணக்காரர்கள் வதை செய்யலாம். குதிரைப் பந்தயம் நடக்கிறது. பணம் சம்பாதிக்க வதை செய்யலாம்.

நாள்தோறும் லட்சக் கணக்கில் ஆடுகள், மாடுகள் கோழிகள் உணவுக்காக வதை செய்யப் படுகின்றன. விலங்கின ஆர்வலர்கள் மூச்சு விடமாட்டார்கள். இறைச்சி ஏற்றுமதியில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவர்கள்.

விலங்கின ஆர்வலர்களின் பொருளாதார பின்புலத்தை யாராவது ஆய்வு செய்திருக்கிரர்களா? கோடிக்கணக்கில் செலவு செய்ய இவர்களால் முடிகிறது.
கொடுமை என்னவென்றால் இவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான்.

பிற்பட்டோரும் தாழ்த்தப் பட்டோரும்இணைந்து கொண்டாடும் ஜல்லிக்கட்டு விழாவை ஏதோ ஒரு சாதியாதிக்க விழா போல சித்தரிக்க முயல்கிறார்கள்.
இவர்களின் ஆன்மிக ஆதிக்கத்திற்கு எல்லாரும் கொடி பிடிக்க வேண்டும். . வேர்வை சிந்தாமல் உழைக்காமல் இறைப்பணி மட்டுமே செய்து கொண்டு எங்களால் சுகமாக வாழ முடியும் என்று நிரூபித்திருக்கிறார்களே?

எல்லாத் துறைகளிலும் உயர் மட்டத்தில் இருந்து ஆதிக்கம் செய்ய இவர்களால் முடிகிறது. காரணம் இவர்களுக்குள் இருக்கும் ஒருங்கிணைப்பு.
மற்றவர்கள் ஒன்று சேர்வதில்லை. அல்லது ஒன்று சேர விடுவதில்லை.
ஜல்லிக்கட்டையும் ரேக்ளா பந்தயதையும் இவர்கள் குறி வைக்க என்ன காரணம்? இவர்கள் யாரும் இதில் ஈடுபடுவதில்லை.

தாங்கள் ஆதாயம் அடையாத எதுவும் இருக்க கூடாது. மற்றவர்களுக்கு என்று தனி அடையாளம் எதுவும் இருக்க கூடாது. எல்லாம் தங்களை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற குரூர சதியை தவிர வேறு என்ன இருக்க முடியும்?
என்ன நடக்கும்? நீதிமன்றத்தின் மீது பழியைப் போட்டு காலத்தை ஒட்டி விடுவார்கள். மீறி நடத்த முற்படும் நபர்களை குறிவைத்து அடக்கு முறை ஏவப்படும். சட்டம் தன் கடமையை செய்யும் என்பார்கள்.

ஒருசில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்த வில்லை என்றால் ஒன்றும் குடி முழுகி விடாது. ஒருங்கிணைந்து புத்தியை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் தேட முயற்சிக்க வேண்டும்.

உச்சபட்ச அபத்த தீர்ப்பை அகற்ற வேண்டும்.
அவர்களின் அரசியல் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்.
அவாள்களின் வெற்றிக்கு காரணத்தை ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும்.. தங்கள் நோக்கத்திற்காக மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளும் சாமர்த்தியம்.
எல்லாம் நன்மைக்கே !!! அவாள்களை அடையாளம் கண்டு கொள்ளவாவது மற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்ததே???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here