Home Latest News தமிழ்ப்பெயர் சூட்டினால் இனி வரிவிலக்கு கிடைக்காது ; மெர்சல் விஜய் தொடக்கம்!!??

தமிழ்ப்பெயர் சூட்டினால் இனி வரிவிலக்கு கிடைக்காது ; மெர்சல் விஜய் தொடக்கம்!!??

தமிழ்ப்பெயர் சூட்டினால் இனி வரிவிலக்கு கிடைக்காது ; மெர்சல் விஜய் தொடக்கம்!!??

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது வழக்கமாகிப் போனபோது கலைஞர் தமிழில் பெயர் வைத்தால் முப்பது சதம் வரி விலக்கு என்று ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார்.

விலக்கு வாங்குவதற்கு என்றே பலர் பெயரை மாற்றினார்கள்.   எம்டன் எம் மகன் ஆனது. பவர் பாண்டி ப. பாண்டி ஆனது.  இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு எல்லாம் வந்தது.

எல்லாம் பழைய கதை ஆகி விட்டது.      ஜி  எஸ் டி வந்தாலும் வந்தது.   இனி விலக்கு  தரும் உரிமை மாநில அரசுக்கு இல்லை என்றாகி விட்டது.    ஜி  எஸ்  டி வரிவிதிப்பால் சினிமா உலகமே பாதிக்கும் என்ற பயம் எல்லாரிடத்திலும் இருக்கிறது.

தமிழ்படம் என்றாலே அதில் தமிழ் இருக்காது என்ற நிலை உருவானாலும் ஆச்சரியம் இல்லை.    நடிகைகளை  வெளி மாநிலங்களில்  தேடிப் பிடிக்கிறார்கள்.     தமிழ் நாட்டு நடிகைகள் இங்கே மதிக்கப்  படுவது இல்லை.

இனி படப் பெயர்கள் எல்லாம் தமிழில் இருக்காது .     விஜய் தன் புது படத்திற்கு மெர்சல் என்று பெயர் சூட்டி   இருக்கிறார்.       பொருள் என்ன  என்று படம் பார்த்தால் தான்  தெரியும் .   ஆனால் நிச்சயம் தமிழ் இல்லை.

இவருக்குத்தான் எத்தனை ரசிகர் மன்றங்கள்?

தமிழ் தலைப்பில்லாத படங்களை புறக்கணிப்போம் என்று ரசிகர்கள்   குரல் கொடுக்க தொடங்கினால் தவிர இவர்களை கட்டுப் படுத்த முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here