Home Latest News கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வலியைப்போல் உணர்ந்தாராம் சல்மான் கான்- மீண்டும் சர்ச்சை??!!

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வலியைப்போல் உணர்ந்தாராம் சல்மான் கான்- மீண்டும் சர்ச்சை??!!

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வலியைப்போல் உணர்ந்தாராம் சல்மான் கான்- மீண்டும் சர்ச்சை??!!

சல்மான் கான் எதையாவது சொல்லிவிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இப்போது சிக்கியிருப்பது கற்பழிப்பு வலியைப்பற்றி பேசி.      சுல்தான் படத்தில் தான் 120  கிலோ எடை கொண்ட எதிரியை பத்து முறைக்கு மேல் தான் தூக்கி தூக்கி போட வேண்டி இருந்தது என்றும் அவற்றை முடித்து விட்டு தன்னால் கால்களை எடுத்து வைக்க முடியவில்லை என்றும் அப்போது ஏற்பட்ட வலி கற்பழிக்கப் பட்ட பெண்ணின் வலியைப்போல் இருந்தது என்றும் ஒப்பிட்டு பேசினார்.

உவமை கூறும்போது கூட பெண்களை இழிவு படுத்தி பேச வேண்டுமா என்ன?

மற்றவர்களை புண் படுத்தும் என்ற உணர்வு கூட இல்லாமால் சல்மான் போன்ற பிரபல  நடிகர்கள் பேசுவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.

சரி. சர்ச்சை வந்த பிறகாவது அதை முடிக்க முயல வேண்டுமே?   அதையும் செய்ய அவர் தயாரில்லை.

அவர் சார்பில் அவர் தந்தை மன்னிப்புக் கோருகிறார்.        சிம்புவுக்காக அவர் தாயும் தந்தையும் மன்னிப்பு கோரியது போல.

சினிமாக்காரர்கள் வாயை கொஞ்சம் அடக்கி பேசவும் .    அதுவும் பிரபலங்கள் கொஞ்சம் கூடுதல் மூடல் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here