Latest News

ஒன்று மணலுக்கு மாற்று தேடு அல்லது தமிழகத்தில் மட்டுமே பயன்படுத்த சட்டம் கொண்டு வா ??!!!

Share

மணல் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே எடுக்க  முடியும் என்றும் அதற்குப் பிறகு நிறுத்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இதில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா?

கேரள அரசு தன் ஆறுகளில் மணல் எடுப்பதில்லை.

தமிழ் நாட்டு  மணல்  மிகப் பெரும்பாலும் கேரளம் கர்நாடகம் ஆந்திர மாலத்தீவு மோரிஷஸ் அரபு நாடுகள் என்றெல்லாம் பயணிக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு பிறகு முடியாது என்றால் இப்போதே நிறுத்தினால் என்ன?

தன் மாநிலத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது சட்ட பூர்வமானதுதானே !

முழுவதும் சுரண்ட வேண்டும் என்பது விதியா?

மணலுக்கு மாற்று பற்றி  ஆராய்ந்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறது அரசு.?

இப்போதே திட்டமிடா விட்டால் மூன்று  ஆண்டுகளுக்கு பிறகு மணல் அள்ளுவது நிறுத்தப் படும் என்ற அறிவிப்பு எப்படி செயல் படுத்தப் படும்?

எப்படி பார்த்தாலும் அரிதான மணல் குறுகிய காலத்துக்கு மட்டுமே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை  என்பதால் அந்த குறுகிய காலத்துக்கு நம் தேவைக்கு மட்டுமே பயன் படுத்த அனுமதித்து விட்டு அதன் பிறகு மணலுக்கு மாற்று தேடுவதே அறிவுடைமை.

ஆட்சியாளர்களுக்கு அந்த சிந்தனை வருமா?

This website uses cookies.