Home சட்டம் காற்றில் பரந்த உச்ச நீதிமன்ற தடை; ஓயாமல் வெடித்த பட்டாசுகள்??!!

காற்றில் பரந்த உச்ச நீதிமன்ற தடை; ஓயாமல் வெடித்த பட்டாசுகள்??!!

காற்றில் பரந்த உச்ச நீதிமன்ற தடை; ஓயாமல் வெடித்த பட்டாசுகள்??!!
crackers-2-hours

காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த ஆண்டு ஏட்டில் தான் இருந்தது.

இன்று சென்னை மாநகரில் மாலை ஆறு மணிக்கு வெடிக்க தொடங்கிய பட்டாசு வெடி சத்தங்கள் குறையவே இல்லை.

நெல்லை போன்ற சில இடங்களில் சிலர் காவல் துறையினர் நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக கைது செய்து பிறகு எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். நீதிமன்றம் கேட்டால் அல்லது ஊடகங்கள் கேள்வி எழுப்பினால் நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லலாம் அல்லவா?

அடுத்த ஆண்டு சிறு குறு பட்டாசு ஆலைகள் இருக்குமா என்பது சந்தேகமே. ஏன் என்றால் மத்தாப்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் வேதிப் பொருளான பேரியம் பயன் படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றான ரசாயன பொருள் என்னவென்று ஆராய்ச்சி நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டும்.

பெரிய முதலீட்டில் இயங்கும் ஆலைகள் மட்டுமே இனி கட்டுபபாடுகளை மதித்து பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். சிறிய ஆலைகள் இயங்கவே முடியாது.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 900 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இனி எப்படி இயங்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு இதுவரை எந்த முன் முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை .

உச்ச நீதிமன்றம் இது போன்ற உத்தரவுகளை இடும்போது அமுல்படுத்தப்படும் சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து அதன் பின் உத்தரவிட்டால் தான் அவற்றிற்கு மதிப்பிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here