Home சட்டம் விதிக்கப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு செய்த தமிழக அரசு

விதிக்கப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு செய்த தமிழக அரசு

விதிக்கப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு செய்த தமிழக அரசு
ops-eps-admk-election

சென்னையில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசுபட்டு விட்டதாகவும் அதை தமிழக அரசு தடுக்க தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நீர்நிலைகளை சாக்கடையாக மாறிவிட்டதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாவும் எனவே மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக அரசு ரூபாய் 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் இதில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு நிபுணர் குழு சிபாரிசு அறிக்கையுடன் தலைமை செயலாளர் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜர் ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதாவது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதன்படி தலைமை செயலாளர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நூறு கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது உறுதி செய்யப்படாத அபராதத்தை எதிர்த்து மேன்முறையீடு. இதை எப்படி மாநில அரசு வழக்கறிஞர்கள் அங்கீகரித்தார்கள் என்பது தெரியவில்லை.

இறுதி விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் அபராதத் துகை எதுவும் விதிக்கப்பட வில்லை என்று கூறி மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இதில் யார் குற்றவாளி? பொறுப்பில்லாமல் செயல்பட்ட தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுதான்.

தமிழக அரசின் சட்டத்துறை இவை எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தை காக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here