Home சட்டம் எழுவர் விடுதலையில் தமிழக அரசின் இரட்டை வேடம்?!

எழுவர் விடுதலையில் தமிழக அரசின் இரட்டை வேடம்?!

எழுவர் விடுதலையில் தமிழக அரசின் இரட்டை வேடம்?!
ltte-7-murugan-nalini

நளினியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

இது சரியான தீர்ப்பு அல்ல. மேன்முறைஈட்டில் நிற்காது.

ஆனால் நளினி மேன்முறையீடு செய்வாரா என்பது தெரியவில்லை.

09.09.2018ல் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அது சரியா என்ற கேள்விக்கும் மாநில அரசின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்பதற்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.

நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் முன்வைத்த வாதம் அரசின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது.

அகில இந்திய சிறை சீர்திருத்த கமிட்டி பரிந்துரையை ஏற்று மோசமான குற்றங்களில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுவிப்பதில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும் அதன்படி அரசியல் சட்ட பிரிவு 161 ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டார்கள்.

161ஐ பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசின் கொள்கை முடிவு உண்மையா அல்லது 09.09.2018ல் அரசு விடுதலை செய்ய கேட்டு ஆளுனருக்கு செய்த பரிந்துரை உண்மையா? எது அரசின் நிலைப்பாடு? 

இதையும் ஏற்றுக் கொண்டு அரசு பரிந்துரை செய்து விட்டது எனவே அதற்கு மேல் அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்பளித்து இருப்பது சரியல்ல.

ஆக எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று மாநில அரசு கருதுகிறதா? யார் இந்த மாநிலத்தை ஆளுகிறார்கள். தமிழக அரசா? மத்திய அரசீன் பிரதிநிதி ஆளுநரா? இதுதான் ஜனநாயகமா?

கூட்டணியில் இருந்து  கொண்டு அதற்கு மேல் பேசமுடியாது என்று ஆளுநர் செப்டம்பர் 9க்கு முன் முடிவெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை விடுகிறார்.

ஆளுநர் நிராகரித்தால் வேறு ஒன்றுமே செய்ய முடியாதா?

மீண்டும் அரசு பரிந்துரைத்தால் ஆளுநர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார் ராமதாஸ். அப்போது மட்டும் என்ன உறுதி?

மாநில அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே இது முடியும்.

காந்தியை கொன்றவனை பதினைந்து வருடத்தில் விடுவித்தவர்கள் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மட்டும் சாகும் வரை சிறையில் கிட என்கிறார்கள்.

யார் கொலை செய்தாலும் சிரச்சேதம் பார்ப்பான் கொலை செய்தால் மட்டும் அவனது தலைமயிரை சிரை என்று மனு நீதி எழுதியவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அடிமைகளின் ஆட்சி என்றால் கோபப்படுவார்கள் அதிமுக வினர். நீங்கள் செய்வதற்கு என்ன பெயர் என்று நீங்களே கூறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here