Home சட்டம் எழுவர் விடுதலை; அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்த ஆளுநர்?! மௌனம் காக்கும் அரசு??!!

எழுவர் விடுதலை; அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்த ஆளுநர்?! மௌனம் காக்கும் அரசு??!!

எழுவர் விடுதலை;  அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்த ஆளுநர்?! மௌனம் காக்கும் அரசு??!!
rajiv gandhi assasination

நீட் தேர்வு விலக்கு கோரிய தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்றுக்  கொள்ள வில்லை என்பதையும் இரண்டு ஆண்டுகளாய் மறைத்தார்கள்.   மீண்டும் சட்டம் இயற்றி அனுப்புவோம் என்ற முக ஸ்டாலின் ஆலோசனையை  ஏற்க மறுத்து கடிதம் எழுதி விட்டு காத்திருக்கிறார்கள்  அதிமுக அரசினர்.

அதே வஞ்சகத்தை எழுவர் விடுதலை பிரச்னையிலும் தொடர்கிறது மத்திய அரசு.

உச்ச நீதிமன்றம் மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்ன பிறகு தமிழக  அமைச்சரவை கூடி தீர்மானம் போட்டு ஆளுனருக்கு அனுப்பினார்கள்.   ஓராண்டாகிறது.   எதுவும் தெரியவில்லை.

இப்போது தகவல் கசிகிறது அதுவும் ஆந்திர பத்திரிகையில்.   அதாவது ஆளுநர் தமிழக முதலமைச்சரிடம் தான் எழுவரை விடுதலை செய்யக் கோரும் தீர்மானத்தை  ஏற்கவில்லை என்பதை.

யாரும் இதை மறுக்க வில்லை.    ஆளுநருக்கு அமைச்சரவை முடிவை மறுக்கும் அதிகாரம் கிடையாது என்பதை உச்சநீதி மன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாக சொல்லி விட்டது.

இப்போதும் ஆளுநர் மறுக்கிறார் என்றால் அது மத்திய  அரசின் முடிவுதான்.     இவராகவா  தனியாக முடிவெடுக்கிறார்?

ஆக  பாஜக அரசின் முடிவைத்தான் பன்வரிலால் புரோகித் நிறைவேற்றுகிறார்.

அதை முறையாக அனுப்பினார் என்றால் மீண்டும் அமைச்சரவை கூடி மீண்டும் அதே முடிவை மீண்டும் அனுப்பப் வேண்டும்.   அப்போது ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாகும்.

அதை செய்யாமல் மீண்டும் நீதிமன்றம் சென்றால் அவர்களும்  இதைத்தான் சொல்வார்கள்.

இரண்டாவது முறையும் அமைச்சரவை பரிந்துரை  செய்தால் கூட அதையும் பந்வாரிலால் மறுப்பார்.   வேண்டுமானால் நீதிமன்றம் சென்று அது தவறு என்று தீர்ப்பு வாங்கி வாருங்கள் என்பார்.   அதில்  கொஞ்சம் வருடங்கள் செல்லட்டுமே அவர்கள் சிறையில் வாடட்டுமே ??!!

இன்னும் எத்தனை காலம் இவர்கள் ஏமாற்றுவார்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here