Home சட்டம் நீதிபதிகள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொல்வது நியாயமா?!

நீதிபதிகள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொல்வது நியாயமா?!

நீதிபதிகள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொல்வது நியாயமா?!
judge

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் முன்பு அமமுக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு போட்டனர்.

அதை விசாரித்த நீதிபதி அந்த திட்டத்தால் என்ன பாதிப்பு? தமிழகத்திற்கு கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பொத்தாம் பொதுவாக எதிர்க்கக் கூடாது என்றும் என்ன பாதிப்பு என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. பின் ஏன் போராட்டம் என்றும் கேட்டார்.

போராட்டம் நடத்துவது முழு நேர வெளியாகி விட்டது என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே எல்லா வேலைகளிலும் வெளி மாநிலத்தவர் வந்துவிட்டனர். ஓட்டல வேலை, முடி வெட்டும் வேலை கட்டிட வேலை என்று எல்லா பக்கமும் அவர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மாண்புமிகு நீதிபதி அவர்களின் கருத்துக்கள் எல்லாம் சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது. அவைகள் எல்லாம் தனிப்பட்ட கருத்துக்கள். தீர்ப்பு அல்ல. அவரே விசாரணையின் போது தரப்படும் விபரங்களை வைத்து தனது கருத்துக்கு முரணாகவே கூட தீர்ப்பு சொல்ல வேண்டி வரலாம். அதற்குள் ஏன் இப்படி எல்லாம் கருத்து சொல்ல வேண்டும்?

நீதிமன்ற மாண்பு இதனால் பாதிக்கப்படலாம்.

                 ஹைட்ரோ கார்பன் திட்டமும் வெளி மாநிலத்தவர் தமிழ் நாட்டில் அனைத்து தளங்களிலும் வேலை வாய்ப்புகளை பறிப்பதும் எதிர்த்து போராட வேண்டிய பிரச்னைகள் இல்லையா?

போகிற போக்கைப் பார்த்தால் வெளிமாநிலத்தவர்க்கு ரேஷன் கார்டு கொடுத்து மேலும் அவர்களுக்கு இங்கே வாக்குரிமையும் கொடுத்து தமிழ்நாட்டின் அரசியல் தளத்தை கைப்பற்ற சூழ்ச்சி நடக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு நீதிபதிகள் கருத்து சொல்லும்போது மிக கவனமாக மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் பேசவேண்டும் என்றே பொதுமேடை பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here