Home Blog Page 10

அழுத்தமான செய்தியை பொழுதுபோக்காக சொல்லும் நாடோடிகள் -2 வசூலில் வெல்லுமா?!

கௌரவக் கொலைகள் நடப்பது உண்மை. அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பொழுதுபோக்காக ஒரு அழுத்தமான செய்தியை உரக்க சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி.

அதுதான் சாதியற்ற மதமற்ற சமுதாயம் படைப்போம் என்ற செய்தி.

தமிழர் என்ற போர்வையில் ஒன்றிணைவதை தடுப்பது சாதி. சாதியின் மூலம் எவரும் கண்டிராத காரணம். மூவேந்தர் காலத்தில் இன்று இருக்கும் சாதிகள் இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை.

பல்வேறு தொழில் கள் செய்பவர்கள் இருந்திருக்கிறார்களே தவிர அவர்கள்  இன்றைய சாதி பெயர்களை கொண்டிருக்க வில்லை.

எந்தக்  கோணத்தில் பார்த்தாலும் சாதியை தூக்கி வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில் தமிழகம் இல்லை.

நாட்டிலேயே சாதிப் பெயர்களை ஒழித்து அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை தமிழ் நாட்டில் தான் இருக்கிறது.

ஆனால் நல்ல படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பார்க்கலாம். நல்ல செய்தியை சொன்ன சமுத்திரகனி – சசிகுமார் கூட்டணி வெற்றி பெறுகிறதா என்பதை.

ரசினிக்கு ஊக்க மருந்தும் விஜய்க்கு பேதி மருந்தும் தரும் வருமான வரித்துறை?!

ரசினிக்கு விதிக்கப் பட்ட வரியை  கட்டத் தவறினாலும் அவர் மீது போடப்பட்ட மேன்முறையீட்டை வாபஸ் பெறுகிறது வருமான வரித்துறை.

சமீபத்தில் ரசினி தர்பார் படத்துக்கு நூறு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கினார் என்று ஊடகங்கள் எழுதின.  அதை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வரித்துறை தயாராக இல்லை.

அவர்தான் பாஜக அரசுக்கு ஆதரவாக  வாய்ஸ் கொடுத்து விட்டாரே?

எதற்கும் மாட்ட மாட்டேன், காவி சாயம் பூச மாட்டேன் என்று விரதம் இருந்து வந்த சைவ கொக்கு எந்த கெண்டை மீனைக் கண்டு விரதத்தை  கைவிட்டது என்பது  தெரியத்தானே போகிறது. 

அடுத்து அரசியலில் நுழையப் போகிறேன் என்பவர் வந்து எந்த சட்டையைப் போடப் போகிறார் என்பது தெரிந்து விட்டது. எனவே அவருக்கு சலுகைகள் தாராளம் நிச்சயம்.

ஆனால் விஜய் காவி சாயம் பூச மாட்டார். முன்பே அவரை ஜோசப் விஜய் என்று முத்திரை குத்தி எச் ராஜா கறை படுத்த முயல ஆமாம் நான் ஜோசப்தான் என்று விஜய் பதிலடி கொடுக்க வெளுத்துப் போனது பாஜகவின் சாயம்.

விஜய் ரசினிக்கு போட்டியாக வரக்கூடும் என்று பாஜக அச்சப் படலாம். அவர் எதிர் முனைக்கு போய் விடாமல் தடுக்க நினைத்துதான் அவர் மீது  திடீர் என்று பாய்ந்து மிரட்டுகிறது வருமான வரித்துறை என்றுதான் அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏனென்றால் படப்பிடிப்பில் இருந்தவரை அறிவிப்பு கொடுக்காமல் 20  மணி நேரம் தனியே அழைத்து சென்று விசாரிக்க வேண்டிய அளவு கொடிய குற்றத்தை விஜய் செய்து விட்டார் என்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

வரி கட்டி விட்டால் குற்றம் எல்லாம் மன்னிக்கப் பட்டு விடும் என்பதுதானே இன்றைய கொள்கையாக  இருக்கிறது. அதற்கு ஏன் இத்தனை கெடுபிடி?!

தெரியாமல் செய்பவர்களை தடுக்கலாம். தெரிந்தே செய்பவர்களை?!

பார்க்கலாம் பேதி மருந்து  வேலை செய்கிறதா ஊக்க மருந்து வேலை செய்கிறதா என்பதை?

பசுத்தோலில் செய்த மிருதங்கத்தை பார்ப்பனர்கள் இனி வாசிக்க மாட்டார்களா?

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா புகழ் பெற்றவர்.

பார்ப்பனரில் திறமையுடன் மனசாட்சியும் உள்ளவர்.

கர்நாடக சங்கீதத்தில் ஏசுவையும் ஏன் பாடக் கூடாது என்று கேட்டு பாடியவர். அதனால் எதிர்ப்புகளை சம்பாதித்தவர்.

அவர் எழுதிய செபஸ்டியன் அண்ட் சன்ஸ் என்ற புத்தகத்தை தனது அரங்கில் வெளியிட முதலில் அனுமதி அளித்த கலாஷேத்ரா என்ற அமைப்பு தனது அனுமதியை திரும்ப பெற்றுக்கொண்டது. காரணம் அந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் தொழிலாளிகளின் வாழ்க்கையை அலசுகிறதாம்.

மிருதங்கம் பசுத்தோலில் செய்யப்படுகிறது. அந்த பசுத்தோல் மிருதங்கத்தை உற்பத்தி செய்யும் தலித் குடும்பங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறார் கிருஷ்ணா. அவர்கள் அந்த வாத்தியத்தை உற்பத்தி செய்யாவிட்டால் எங்கே புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்கள் உருவாகி இருப்பார்கள்?

சிலவற்றை உலகத்துக்கு வெளியே சொல்வதில் பார்ப்பனரில் பலருக்கு உடன்பாடு இருக்காது.

இத்தனைக்கும் அது மத்திய அரசின் உதவியில் நடக்கும் நிறுவனம். அதை ஆக்ரமித்துக் கொண்டு தங்கள் சாதி செல்வாக்கை காத்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் அதே தேதியில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருக்கிறார் கிருஷ்ணா. தொல். திருமாவளவன் புத்தகத்தை வெளியிடுகிறார். அணி திரண்டு சென்று  வாழ்த்துவோம்.

நல்லவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் சூது மதியாளர்களையும் திருத்தும் என்ற நம்பிக்கை உண்மைதானே.

மராட்டியர் பெரியகோயில் அறங்காவலராக நீடிப்பது தமிழர்களுக்கு அவமானம்..

பெரியகோயில் மட்டுமல்ல இன்னும் அதனுடன் இணைந்த ஏறத்தாழ 90  கோயில்களுக்கு மராட்டிய சரபோஜி வாரிசாக போன்ஸ்லே என்பவர் அறங்காவலர் ஆக தொடர்கிறார்.

அவர்கள் தஞ்சை அரண்மனையில் வாழ்கிறார்கள். எந்தப் பிரச்னைகளிலும் தலையிடாமல் கௌரவமாக ஒதுங்கி வாழ்கிறார்கள்.

ஒரு காலத்தில் மராட்டியர் மட்டுமல்ல முஸ்லிம் நவாப்புகள், தெலுங்கு  நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பல பேர் தமிழகத்தை வாள்முனையில் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளில் களப்பிரர் காலம் தவிர்த்த ஏனைய காலங்களில்  தமிழர்களை மற்றவர் ஆண்டு வந்ததால் தமிழர்கள் மீண்டும் ஒன்று கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதே நிலை நீடித்திருந்தால் தமிழர்கள் மீண்டும் ஒன்று கூடி அவர்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கக் கூடும். அந்த தேவை இல்லாமல் போய்விட்டது.

மக்களாட்சி மலர்ந்து விட்டது.

 இனி எதற்கு மன்னராட்சியின் எச்சம். அதுவும் நம்மவரல்ல. ஆக்ரமித்து ஆட்சி செய்தவர். அவர்களுக்கு உரிய மரியாதை அரசு கொடுக்கட்டும். வசதிகள் செய்து தரட்டும். ஆனால் அவர்கள்தான் நிரந்தர ஆட்சியாளர்கள் போல பாவித்து அவர்களின் வாரிசுகளுக்கு உரிமை வழங்குவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது மக்களாட்சிக்கு உகந்ததும் அல்ல.

சோழர்கள் வாரிசுகளுக்கு உரிய  உரிமையை மராட்டியர் களவாட அனுமதிப்பது சோழர்களுக்கு இழைக்கப்டும் அநீதி. வாரிசுகளை தேடினால்  அதற்கு போட்டி ஏராளம். இது மக்களாட்சி. எனவே மக்களின் பிரதிநிதிகளே அறங்காவலர்கள் ஆக வேண்டும்.   

எனவே அரசு உடனடியாக தஞ்சை கோவில்களுக்கு மராட்டியர் போன்ஸ்லே அறங்காவலராக நீடிப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இதற்கெல்லாம் மக்கள் போராடித்தான் ஆக வேண்டும் என்பதே ஒரு இழுக்கு.

பெருந்தன்மை வேறு. இழுக்கை அகற்றல் வேறு.

எந்தக் கட்சி ஆண்டாலும் அவர்கள் தமிழர்கள் தானே.

அவர்களுக்கு இந்த இழுக்கு  கண்ணுக்கு பட வில்லையா?

எடப்பாடியை மிரட்டும் திவாகரன்!

தஞ்சையில் நடந்த திருமணத்தில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் நாளைய முதல்வர் ஸ்டாலின்தான் என்று பேசினார். உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற 85 % வெற்றியை ஆளும் கட்சி தட்டி பறித்து விட்டதாகவும் கூறினார். திராவிட தலைவர்கள் மறைந்து விட்டதால் இன்று கன்னடத்தில் இருந்து ஒருவர் வந்து பெரியாரை பற்றி பேசும் அளவுக்கு வந்து விட்டது . அதை தடுக்கும் ஆற்றல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் உள்ளது என்றும் பேசியிருக்கிறார்.

திவாகரன் திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சு உடனே கிளம்பிவிட்டது. ஆனால் அதில் துளி அளவு கூட உண்மை இல்லை.

ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் எடப்பாடியை எல்லோரும் மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அமைச்சர்கள் பலரும் ஆளாளுக்கு ஏதேதோ பேசி எடப்படிக்கு சங்கடத்தை உண்டாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வரும்போது என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை பற்றி எடப்பாடி உறுதியாக எதையும் சொல்ல மறுக்கிறாராம்.

பாவம்! பாஜகவின் நெருக்குதல் ஒருபுறம், சசிகலா வரவால் அதிமுக உடையும் அபாயம் மறுபுறம் என தத்தளித்து நிற்கிறார் எடப்பாடி.

அதோடு திவாகரன் சொல்லும் எதையும் செய்து கொடுக்கும் மனநிலையிலும் இல்லையாம் எடப்பாடி.

எனவே எடப்பாடிக்கு திவாகரன் விடுத்த மறைமுகமான எச்சரிக்கை யாகத்தான் இந்த பேச்சு பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஸ்டாலினிடம் எடுபடுமா?

கொடியவன் கோட்சேவை தேச பக்தன் என்னும் வஞ்சகர்களை மறவோம்?

கொடியவன்  கோட்சே மகாத்மா காந்தியை கொன்ற நாள்.

கோட்சேவை விட கொடியவர்கள் அவனை தேசபக்தன் என்று சொல்பவர்கள்.

அவனது  சகோதரன் கோபால் கோட்சே குற்றவாளி என்று தண்டிக்கப் பட்டு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டு 14 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டான் காங்கிரஸ் அரசால்.

கோட்சேவின் சித்தாந்தத்தை மோடியும் பகிர்ந்து கொள்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் இன்று கோட்சேவின்  சித்தாந்தம் கோலோச்சுகிறது.  ஆனால் பிரதமர் மோடி கோட்சேவை பாராட்டிய தனது கட்சி  எம் பி சாத்வி மகராஜை மன்னிக்க மாட்டேன் என்றார். நடைமுறையில் ஒரு நடவடிக்கையும் இல்லை.

கோட்சேக்கள் எண்ணிக்கை வளர்கிறது. இது ஆபத்தானது.

இந்துக்கள் என்ற போர்வையில் பார்ப்பனீயம் ஆள்கிறது. வன்முறையில் நாட்டம் கொண்டது பார்ப்பனீயம். அதிகாரம் கிடைத்தால் ஆட்டம் போடும். இல்லாத போது வாலை சுருட்டிக் கொண்டு காத்திருக்கும்.

கமல்ஹாசனை கோட்சே ஆதரவாளர் என்று அடையாளம் காட்டியவர் ரஜினிகாந்த்.

கமலை பாராட்டும் சாக்கில் அவர் எடுத்த ஹே ராம் படத்தை நினைவுபடுத்தி எச்சரித்தார். ரஜினி தான் ஓய்வாக இருக்கும்போது மூன்று படங்களை பார்ப்பதாகவும் அவை மார்லன் பிராண்டோ நடித்த காட் பாதர், சிவாஜி நடித்த திருவிளையாடல் அடுத்து கமல் நடித்த ஹேராம் என்றார். அதாவது கமல் அடிப்படையில் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று பொருள். அந்த படத்தில் கமலின் மனைவியை முஸ்லிம்கள் கற்பழித்து கொலை செய்வார்கள். இந்து முஸ்லிம்கள் கொடூரமாக வன்முறையில்  ஈடுபடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கமலின் நண்பர் கூறுவார். அவர் காந்தியை  கொல்ல ஒரு துப்பாக்கியையும் கொடுப்பார். கமல் அதை வாங்கிக் கொண்டு காந்தி வரும்போது கையில் வைத்திருப்பார். அதற்குள் கோட்சே காந்தியை கொன்று விடுவான். இதுதான்  கதை..

இப்படி கமலை அடையாளப்படுத்திய கடுப்பில் தான் கமல் ரஜினி ஒரு கன்னடக்காரர் என்றும் ரஜினி தனது  முதலீடுகளை தமிழகத்தில் செய்ய வேண்டும் என்று கூறி ரஜினி கர்நாடகத்தில் முதலீடு செய்திருப்பதை காட்டிக் கொடுத்தார்.

காந்தி நினைவு நாளில் கோட்சேக்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருப்போம்.

செங்கோட்டையனை மீறி பள்ளிக்கல்வித் துறையை ஆட்டுவிக்கும் சக்தி எது?

பலமுறை பள்ளிக்கல்வித் துறையின் அறிவுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்திருக்கிறார்.

இப்போது ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் எட்டாம் வகுப்பு மானவர் களுக்கு  தினந்தோறும் பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப் படும் என்று அறிவிக்கிறார். அது தவறு என்று பின்னால் விளக்கம்  கொடுக்கின்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன் இல்லையில்லை பள்ளிக் கல்வி  நேரத்தில் தான் சிறப்பு வகுப்பு நடத்தப் படும் அதுவும் மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்று சொல்கிறார். ஏன்  இந்த தடுமாற்றம்.?

அமைச்சருக்கு தெரியாமலேயே என்னென்ன்னவோ நடக்கிறது என்ற புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை கல்வித் துறைதான் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு தனது திட்டங்களை அமுல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது.    அதற்கு மாநில  அரசு ஒத்து ஊத வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.   மாநில அரசின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றன.

மாணவர்களுக்கு தேவையில்லாத மனச்சுமையை திணித்து அவர்களை கல்வியை தொடர்வதில் இருந்து விரட்ட வேண்டும்  என்ற ரீதியில் தான்  மத்திய அரசின் புதிய கல்வி திட்டம் வர இருக்கிறது.

அதை முன்கூட்டியே அமுல்படுத்தி நாங்கள் உங்கள் அடிமைகள் என்பதை சொல்லாமல் சொல்கிறதா அதிமுக அரசு?

இன்று எல்லாருக்கும் மடிக்கணினி வழங்க நிதி நிலை இடங்கொடுக்க வில்லை என்ற சாக்கில் நான்கு பேருக்கு ஒரு கணினி தான் தர முடியும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையான காரணம் நிதி  நிலையா ? திட்டத்துக்கு மூடு விழா நடத்த முன்னோட்டமா?

ஏழை மாணவர்கள் மடிக்கணினி பெற்று அறிவு வளர்ச்சி பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திட்டதையே கைவிடுகிறார்கள் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.    ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி  நடத்துபவர்கள் அவரது திட்டங்கள் ஒவ்வொன்றாக கைவிடப் படுவதை ஏற்கிறார்களா?

செங்கோட்டையனை சுதந்திரமாக செயல்பட விடாமல் மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மறைமுகமாக மத்திய அரசின் திட்டங்களை செயல் படுத்த முனைகிறார் என்ற குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது.

தஞ்சை பெரியகோயிலில் வெடித்த புரட்சி தமிழகம் எங்கும் பரவட்டும்?

தமிழில் குடமுழுக்கு செய்ய முடியாது. பாரம்பரியப்படி சமச்கிரிதத்தில்தான் செய்வோம் என்று  அடம் பிடித்தவர்கள் இன்று தமிழிலும் சமஸ்கிரிததிலும் செய்வோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.

உயர்நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் அரசு தவறான தகவல்களை சொல்லி இருக்கிறது.

” பூஜை நேரங்களில் திருமுறை ஓதுவதற்காக ஓதுவார்கள் நிரந்தரமாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். எல்லா பூஜையின் போதும் திருமுறை ஓதப்படுகிறது.” என்று தேவஸ்தான உதவி கமிஷனர் கூறுகிறார். இது உண்மையா? பெரிய கோயிலுக்கு போகும் எத்தனை பேர் ஓதுவார்கள் பாடுவதை கேட்டிருக்கிறார்கள்.?   ஒருவேளை கணக்கில் எழுதி வைத்திருக்கிரார்களோ என்னவோ?

நிரந்தர ஓதுவார்கள் யார் யார் ? அவர்கள் எப்போது பணி அமர்த்தப்பட்டார்கள்?  அவர்களது சம்பளம் என்ன? எல்லா சன்னிதிகளிலும் ஓதுவார்கள் பணி அமர்த்தப் பட்டிருக்கிறார்களா ?

யாகசாலையில் திருமுறைகள் படிக்கப்படும் என்றும் அதற்கு 13 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறும் உதவி கமிஷனர் ராஜராஜன் நியமித்த 48 ஓதுவார்கள் எங்கே என்று கூறுவாரா?

கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். அதையும் பூணூல் போட்ட அர்ச்சகரோடு சேர்ந்து பூணூல் போடாத அர்ச்சகரும் தமிழ் மறை ஓதி அர்ச்சனை செய்ய  வேண்டும். அந்த நாளே இறைவனுக்கு உகந்த நாள்.

தமிழில் அர்ச்சனை செய் என்று கேட்காமலே செய்ய வேண்டும். வேண்டும் என்பவர்கள் சமஸ்க்ரிதத்தில் வேண்டும் என்று கேட்கட்டும்.

இங்கு சமஸ்கிரிததிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று வேண்டுமானால் விளம்பரம் வைக்கலாம்.

குடமுழுக்கை தமிழில் நடத்தினால் போதாது. நாள் தோறும் அர்ச்சனை தமிழில் நடக்க வேண்டும்.

தஞ்சையில் எழுந்திருக்கும் இந்த புரட்சி நாடெங்கும் வெடிக்கட்டும்.

அண்ணாவோடும் கலைஞரோடும் ரசினியை ஒப்பிட்டதால் இனி மணியன் பெயர் மாங்கா மணியன்?

அண்ணா ராசாசியோடு கூட்டணி  வைத்தாலும் அண்ணா வலதுசாரி ஆகிடவில்லை கலைஞர் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் மதவாதி ஆகிடவில்லை எனவே ரசினி பாஜகவோடு சேர்ந்தாlலும் மதவாதி ஆகிட மாட்டார் – இதுதான் தமிழருவி மணியனின் கண்டுபிடிப்பு.

கொஞ்சம்கூட வெட்கமும் தயக்கமும் இல்லாமல் எப்படி  இந்த மணியனால் அவர்களோடு இவரை ஒப்பிட முடிந்தது? காலம் போன கடைசியில் என்ன உனக்கு கிடைத்து விடப் போகிறது?

அண்ணாவும் கலைஞரும் ஒரு மாபெரும் தத்துவத்தின் பிரதிநிதிகள். சமூக நீதிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்களின் அரசியல் அனுபவத்தை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரசினி இதுவரை தான் எந்த தத்துவத்தின் பிரதிநிதி என்பதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயல்கிறவர்.

சோவோடு உறவாடி சுசாமியோடும் குருமூர்த்தியோடும் ஆலோசித்து அரசியல் செய்ய திட்டமிடுகிறவர்.

தமிழகத்தில் நடப்பது ஆரிய திராவிட அதிகாரப் போட்டி தான். இதில் ரசினி எந்தப் பக்கம்?

காட்டிக் கொடுப்பதில் தமிழர்களுக்கு இணை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மணியன். மற்றவர்கள் தெரியாமல் ஏமாறலாம். ஆனால் மணியன் தெரிந்தே ஏமாற்ற துணை போகும் கோடரிக்காம்பு.

இன்னும் எத்தனை கோடரிக் காம்புகள் வரிசை கட்டி வந்தாலும் அத்தனையையும் துவம்சமாக்கும் சக்தியை  தமிழ் சமூகம் இன்று பெற்று விட்டது.

தமிழன் முன்பிருந்த ஏமாந்த நிலையில் இருப்பதாக மணியன் கனவு காண்கிறார்.

கடைசியில் வெகு காலமாக கட்டிக் காத்த  தமிழருவி மணியன்  என்ற பெயரை  இழந்து மாங்கா மணியன் என்ற பெயரை சம்பாதித்ததுதான் மிச்சமாக இருக்கப் போகிறது மணியனின் ரசினிக்கு பல்லக்கு தூக்கிய வேலை.

திமுக வெற்றி பெற்றால் நிதி இல்லை; அமைச்சர் கருப்பணன் நீக்கப்பட வேண்டியர்?

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கருப்பணன் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் போதுமா. நாங்கள்தானே நிதி ஒதுக்க வேண்டும். திமுகவுக்கு நாங்கள் எப்படி நிதி ஒதுக்குவோம் என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.

அதிமுக அமைச்சர்கள் ஆளுக்காள் தாறுமாறாக பேசி வருகிறார்கள்.

இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் பழனிசாமி தடுமாறி வருவது தெரிகிறது.

அரசியல் சட்டபடி உறுதிமொழி எடுத்துக் கொண்ட அமைச்சர் அதை மீறலாமா?

நொய்யல் ஆற்றில் நுரை வந்ததற்கு பொதுமக்கள் பயன்படுத்திய சோப்பு தான் காரணம் என்றும் சாய ஆலைக்கழிவுகள் அல்ல என்றும் சொன்னவர் தான் இவர்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்த மிரட்டல் பாதிக்கும் என்பதில் உண்மை இருக்கிறது.  வெளிப்படையாக மிரட்டும் அளவு அதிமுக சென்று விட்டது.

மக்கள் மன்றத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அமைச்சர்கள் பேசியே கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல.