Home Blog Page 101

பியுஷ் மனுஷ் சிறையில் தாக்கப்பட்டகொடுமை??! பொதுத் தொண்டு செய்த ராஜஸ்தானிக்கு கிடைத்த பரிசு??!

பியுஷ் மனுஷ் சேலத்தை சேர்ந்த ஒரு சுற்றுச் சூழல் ஆர்வலர்.    ராஜஸ்தானி.   வடக்கே இருந்து சம்பாதிக்க வருவார்கள்.

இவர் சேலத்தின் மண்ணையும் தண்ணீரையும் காக்கப் போகிறேன் என்று சேலம் மக்கள் குழு என்று அமைத்து ஏரிகளை  குளங்களை  மீட்டெடுப்பது போன்ற வேலைகளை வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறார்.

உலகம் முழுதும் சுற்றச் சூழல் ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடப்பது வாடிக்கை யாகிவிட்டது.

பொதுமக்களின் விழிப்புணர்வு இந்த அத்து மீறல்களுக்கு கண்டனங்களை தெரிவித்து நடவடிக்கை எடுத்திருந்தால் அதிகார வர்க்கம் நல்லது செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்த தயங்கும்.

தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.   யாரோ வந்து இங்கே நல்ல காரியம் செய்ய முடிகிறது.

கோடிக்கணக்கில்  நன்கொடை வசூலித்து பொது மக்களை பங்கேற்பாளர்கள் ஆக மாற்றி அரசியல் வாதிகள் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் குடி மராமத்து வேலையை கிராமமே செய்து கொள்ளும்.     ஆனால் இப்போது  அரசு செய்கிறது.   காலம் தாழ்ந்து , தரம் குறைந்து , ஊழல் செய்து செய்யப்படும் வேலைகளால் முழுப் பயனும் கிடைப்பதில்லை.

பாராட்ட வேண்டிய வேலையை செய்ததற்கு பரிசாக ஜெயலலிதா ஆட்சி தடி அடியைத்தான் தரும் என்பது உறுதிப் பட்டிருக்கிறது.

கட்சி அனுதாபம் தாண்டி நல்லது செய்பவர்களுக்கு பொது மக்கள் தோள் கொடுக்க வேண்டும்.    தவறினால் நட்டம  நமக்குத்தான்.

 

 

ஜெயலலிதா பெயரை சொல்லக்கூடாது-சபாநாயகர் தீர்ப்பு சரியா?! அடிமைத்தனம் என்று விலகும்??!!!

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி ஜால்ராக்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை.

தலைவியை    வானளாவப் புகழ்வதும்   பேசினால் தட தட வென்று மேசையைத் தட்டுவதும்

எதிர் கட்சியினரை மட்டம் தட்டுவதும் இழிவு படுத்துவதும் – அதுதான் அரசியலில் உயர ஒரே வழி என்று நம்புகிறார்கள்.

சட்டப்பேரவையில் ஒரு அதிமுக உறுப்பினர் மாண்புமிகு கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைக்க திமுகவினர் அப்போது நாங்களும் மாண்புமிகு ஜெயலலிதா என்று அழைக்கலாமா என்று கேட்க சபாநாயகர் மாண்புமிகு கருணாநிதி என்று அழைக்கலாம் ஆனால் முதல்வரை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று உத்தரவு இட்டுள்ளார்.

புரட்சித்தலைவி என்றும் அம்மா என்றும் ஜெயலலிதாவை அதிமுகவினர் அழைப்பது வழக்கம்.   எப்போது ஜெயலலிதா தன் பெயரை மாற்றிகொண்டார்.

கருணாநிதியை கலைஞர் என்றும் தலைவர் என்றும் திமுகவினர் அழைப்பது வழக்கம்.

ஆனால் தன் பேட்டியில் பலமுறை கருணாநிதி என்று ஸ்டாலின் அழைத்திருக்கிறார். ஒருவரை பெயர் சொல்லி அழைப்பது கூட தமிழ்நாட்டில்தான் பிரச்னை ஆகிறது.

இந்த விவாதம் நல்லதே! தன்னை ‘ நான் பாப்பாத்திதான் ‘ என்று சட்ட மன்றத்தில் சொன்னவர் ஜெயலலிதா.     சாதியை சொல்லி அழைப்பது எப்போதும் வழக்கமில்லை.     ஒருவரை இழிவு படுத்த வேண்டும் என்ற  உணர்வில் சாதியை சொல்லியோ பெயரை சொல்லியோ அழைத்து தன் வெறுப்பை வெளிக்  காட்டிக் கொள்வதை விட இவர்கள் வேறு ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.

சட்டமன்ற விதிமுறை களில் பெயரை சொல்லக் கூடாது என்று  எந்த விதியும்  இல்லை.

ஆக்க பூர்வமான விவாதங்கள் தமிழ் நாட்டில் நடக்க வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம்.

ஆள்கிறோம் என்பதற்காக எவரையும் இழிவு படுத்தும் உரிமை ஆளும்கட்சிக்கு இல்லை என்பதையும் அவரகள் மறக்கக் கூடாது.

கெயில் எரி வாயு குழாய்களை விவசாய நிலத்தில்தான் புதைப்போம் !! மத்திய அரசு பிடிவாதம்.??!!

கொச்சின் -பெங்களுரு எரி வாயு குழாய்களை  கேரளத்திலும் கர்நாடகத்திலும் நெடுஞ்சாலைகளில் புதைத்து விட்டு தமிழகத்தில் மட்டும்  ஏழு மாவட்டங்களை சேர்ந்த 2430  விவசாயிகள் பாதிக்கப்படும்  வகையில் விவசாய நிலங்களில்தான் பதிப்போம் என்று அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நாடாளு மன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசும் நெடுஞ்சாலை களில்தான் பதிக்க வேண்டும் என்கிறது.

879     கிலோ மீட்டர் தூரம்  கொண்ட பைப் லைனில்    310  கிலோ மீட்டர் தூரம்தான் தமிழ் நாட்டில் வருகிறது.    ஏன்  தமிழகத்தில்  மட்டும் விவசாய நிலங்களில் பதிக்க வேண்டும்?

கேரளத்திலும் கர்நாடகாவிலும் நெடுஞ்சாலைகளில் பதித்து விட்டு இங்கு மட்டும் ஏன்  நிலங்களில் பதிக்க வேண்டம் என்ற கேள்விக்கு பதிலே இல்லை.

மோடியுடன் நட்புடன் இருக்கும் ஜெயலலிதா பதவியில் இருக்கும்போது தமிழ்நாடு உரிமை இழக்கும் வகையில் நடக்க மாட்டார்கள் என்று நம்புவோம்??!!

ஆனால் இங்குதான் எல்லாமே நடக்குதே ??!!   எது நடந்தாலும்    யாரும் ஆச்சரியப் பட  மாட்டார்கள்.

மோடி- ஜெயலலிதா   இடையேயான சுமுக உறவுக்கு இதுவும் ஒரு சோதனை

மாயாவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டுப் பேசிய பா ஜ க தலைவர் நீக்கம்? தொடரும் போராட்டம்??!!

மாயாவதிக்கு நேரம் சரியில்லை.

அடுத்த ஆண்டு தேர்தல்.   கட்சிக்குள் சீட்டுகளை ஏலம் விடுவதாக குற்றம் சாட்டி முன்பே சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்தார்.

மூத்த தலைவர் ரவீந்திரநாத் திரிபாதி யும் அதே காரணங்களை சொல்லி ராஜினாம செய்தார்.    போதாதற்கு அமித்ஷாவும் இப்படியே போனால் மாயாவதி மட்டும்தான் மிஞ்சி இருப்பார் என்று விமர்சித்தார்.      அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் மாயா.

இன்னிலையில் பா ஜ க வின் துணைத் தலைவர்  தயா  சங்கர் சிங்  காலையில் ஒரு கோடி வாங்கிக்கொண்டு ஒருவருக்கு சீட் கொடுத்து மதியம் மற்றொருவர் இரண்டு கோடி கொடுத்தால் அவருக்கு  மாற்றிகொடுப்பார் .   மாலையில் இன்னொருவர் மூன்று கோடி கொடுத்தால் அவருக்கு மீண்டும் மாற்றிக் கொடுப்பார்.   மாயாவதியின் செய்கை பாலியல் தொழிலாளி யை விட மோசமானது என்று விமர்சித்தார்.

பற்றிக்கொண்டது நெருப்பு.    யாகாவாராயினும் நாகாக்க என்னும் வள்ளுவர் வாக்கு பலித்து விட்டது.      அவரது நாக்கை கொண்டுவருபவருக்கு ஐம்பது லட்சம் பரிசு என்று ஒருவர் அறிவிக்க நாடெங்கும் போராட்டங்கள் அறிவிக்கப் பட அவரை கட்சியை விட்டு நீக்கியது பா ஜ க.

போதாது வழக்குப் போடு என்று மாயாவதி கோடி தூக்க கலவரம் இப்போது ஓயாது  போல் தோன்றுகிறது.

தலித் என்றால் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று நினைக்கிறார்களோ?

சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

கங்கை நீரை அஞ்சலக மூலம் விற்கும் மோடி அரசின் வஞ்சக வலை?!

நாடு மத சார்பற்றது.    அரசியல் சட்டம் அதைத்தான் சொல்கிறது.

ஆனால் ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி அரசு தன்னை ஒரு சனாதன பார்ப்பனீய அரசாகத்தான் உருவக படுத்திக் கொள்கிறது.

கங்கை புனிதமானது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கலாம்.

மற்றவர்களுக்கு எல்லா நதிகளும் புனிதமானவைதான்.     கங்கைக்கு என்ன புனிதமோ  அது காவிரிக்கும் உண்டு நர்மதைக்கும்  உண்டு.

பிரச்சினை என்ன என்றால்  புனித கங்கை நீரை விற்கும் வேலையை  ஒரு மத சார்பற்ற அரசு செய்யலாமா என்பதுதான்.

புனிதமா இல்லையா என்ற கேள்வியை ஒதுக்கி மத சார்பற்ற அரசின் வேலை இதுதானா என்ற கேள்வி முன் நிற்கிறது.

கொடுமை என்னவென்றால்  200 மில்லி  500 மில்லி   அளவுகள்  கொண்ட பாட்டில்களில் தெளிவாக இது குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஆனாலும் வாங்குபவர்கள் அதை குடித்து விடுகிறார்கள்.     அந்த அளவுக்கு மன மயக்கம்.

விழிப்புணர்வு கொண்ட தமிழகத்திலேயே சனாதனிகளின் ராஜ்ஜியம் கொடி காட்டி பறக்கிறது.

நிறுத்தப் பட வேண்டிய சட்ட விரோத செயல் இது.

ஹரித்வாரில் அவமானப்படுத்த பட்ட திருவள்ளுவர் சிலை ??!! சனாதனிகளுக்கு தமிழர்கள் பதிலடி கொடுக்கும் முன் விழித்துக் கொள் மத்திய அரசே ???!!!!

வள்ளுவரை உயர்த்திப் பிடி என்று யாரையும் தமிழர்கள் கோர வில்லை.     அதற்கு அவசியமும்  இல்லை. தன் மதிப்பால் உயர்ந்து நிற்கும் கோபுரம் அது.

தானாக வந்தார் தருண் விஜய் !   பா ஜ க வின் செல்வாக்கை தமிழகத்தில் பதிய வைக்க ஏஜெண்டாக நியமிக்கப் பட்டதாக வருணிக்கப் படும் பாராளுமன்ற உறுப்பினர்.       நோக்கம் எதுவாக இருந்தாலும் வள்ளுவரையும் குறளையும் வடக்கே கொண்டு செல்ல உறுதி அளிக்கிறாரே அந்தப் பெருந்தன்மைக்கு இங்கே சிலர் பாராட்டு தெரிவித்தார்கள்.    அதில் முதன்மையானவர் வைரமுத்து.

உள்நோக்கத்தை உதறி தள்ளி செயல்பாட்டை மதிக்கும் நோக்கம்.

பெரும்பாலானவர்கள் அதை பொருட் படுத்தவில்லை என்பதே அவரகள் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் உணர்ந்தார்கள் என்பதற்கு விளக்கம்.

ஹரித்வாரில் வள்ளுவரின் 12 அடி உயர சிலை நிறுவப்பட ஹர்கிபவுரி என்ற இடம் தேர்வு செய்யப் பட்டு அதற்கு சாமியார்கள் சிலர் ஆட்செபித்ததை அடுத்து இட மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்சேபணைக்கு காரணம் வள்ளுவர் ஒரு தலித் என்ற பிரச்சாரம்.

வள்ளுவர் தலித்தா இல்லையா என்பது பிரச்சினை இல்லை.    யாராக  இருந்தாலும் அவர் தமிழர்களின் பிம்பம்.   வள்ளுவரை சாதி மதம் பார்த்து உலகம் கொண்டாட வில்லை.

குறளில் எங்குமே மதம் சார்ந்த கருத்துகள் இல்லை.    கடவுள் வாழ்த்தில் கூட எந்த மதத்தின் கடவுளும் இல்லை.

இன்றைக்கு ஹரித்வாரில் புல் தரையில் கிடக்கும் வள்ளுவரின் சிலையைப் பார்த்து   தமிழ் கூறும் நல்லுலகம் நொந்து கிடக்கிறது

நாளையே இது சரிப்படுத்தப் படா விட்டால் சனாதநிகளுக்கு பதிலடி கொடுக்க தமிழர்கள் தயாராவார்கள் .     அது எந்த வடிவம் எடுக்கும் யாரைத் தாக்கும் என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது.   என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

அது நாட்டு ஒற்றுமைக்கு உலை வைக்கும் வகையிலும் அமையலாம்.

விழித்துக் கொள் மத்திய அரசே??!!!

 

அவதூறு வழக்குகள் போடும் ஜெயலலிதா நேரில் ஆஜராவாரா? சட்டம் படும் பாடு?

அரசியல் எதிரிகளை அலைக்கழிக்க அவதூறு வழக்கு போடும் அதிகாரத்தை ஜெயலலிதா தவறாக பயன்படுத்துகிறார்.

ஒவ்வொரு முறையும் ஆட்சியை விட்டு அகலும்போது இந்த வழக்குகளை வாபஸ்  பெறுவது வழக்கம்..

இம்முறை மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதால் மேலும் மேலும் வழக்குகளை போடுகிறார்.

விஜயகாந்த் போட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் இதற்கெல்லாமா வழக்கு போடுவார்கள் என்று  கேட்டு  விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.

1991 ல் ஜெயலலிதா போட்ட அவதூறு வழக்குகள் 180.      எதுவும் விசாரணையை சந்தித்ததில்லை .

இப்போதும் கலைஞர்   ,விஜயகாந்த்  ஸ்டாலின் , முரசொலி செல்வம் மற்றும் பலர் மீதும் அவதூறு வழக்குகள்.      எதிர்கட்சிக்கள் விமர்சிக்க கூடாதா?

விமர்சனங்களையும் , கண்டனங்களையும் அவதூறாக சித்தரித்தால் யாருமே பேச முடியாது.

அவதூறு வழக்கு போடுபவர்கள்   நீதிமன்றங்களில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற  நிபந்தனை   நிரூபிக்க வில்லை என்றால் செலவின பொறுப்பு போன்ற ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பாடு  இல்லை என்றால் அரசு அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதில் இருந்து ஜெயலலிதா மாற வாய்ப்பே இல்லை.

உச்சநீதிமன்றம் தான் கட்டுப் படுத்த வேண்டும்.

எல்லோரும் பாதுகாப்புக்கு கத்தி வைத்துக்கொள்ள வேண்டுமா? சுவாதி , வினுப்ரியா ,நந்தினி மரணங்கள் காட்டும் வழி???!!!

பேஸ் புக்கில் வந்த ஆபாச படத்தை போலீசார் நீக்கியிருந்தால் ஆசிரியை வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.   இறந்து மூன்று மணி நேரத்தில் அந்தப் படத்தை நீக்கிய போலீசாரை முன்பே செயல்படாமல் செய்தது எது?   பணமா?   மெத்தனமா???

சுவாதி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்யப்  பட்டு போலீசால் விரைந்து செயல் பட்டு ராம்குமாரை கைது செய்ய முடிந்தது.   அதற்குள் எத்தனை விமர்சனங்கள்.    பிராமண பெண் கொலைஎன்றால் மெத்தனமா என்று ஒய் ஜி மகேந்திரன் கேள்வி எழுப்ப வேறு யார் சம்பத்தப் பட்டிருக்கலாம் என்பதற்கு விரிவான விசாரணை வேண்டும் என்று தலித் உணர்வோடு டாக்டர் கிருஸ்ணசாமி திருமாவளவன் போன்றவர்கள் கருத்து சொல்ல கொலையில் கூட சாதி முன்னுக்கு வந்த அவலம் சந்திக்கு வந்தது.       கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல் ராம்குமார் குற்றவாளி அல்ல என்று ஜாமீன் மனு போட அரசு வக்கீல் யார் சொல்லி இவர் மனு போட்டார் என்ற கேள்வி எழுப்பியவுடன் அவர் வாபஸ் வாங்க வக்கீல்கள் தானாகவே ஜாமீன் மனு  போடுவார்கள் என்ற உண்மை வெளியே வந்தது.

ஏ டி எம்மில் பணம் எடுக்க சென்ற தன்னிடம்  இருந்து பணத்தை பறிக்க முயன்ற குற்றவாளியை துரத்தி சென்று இடையில் ஒருவர் இறக்க தானும் கல்லில் மோதி இறந்தார்  ஆசிரியை நந்தினி.    காரணம் அங்கு இருந்த மதுக்கடை .    அதை நீக்கக் கோரி மக்கள் போராடி பயன் இல்லாத நிலையில் இந்த கொடூரம்.

குற்றவாளியை பிடிக்க முயன்று வெட்டுப் பட்டு இறந்த காவலருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாயை இழப்புத் துகையாக அவரது குடும்பத்துக்கு வழங்கியது.      பாராட்டு.    இதே கடமை உணர்வுடன் செயல்பட்டு உயிரை இழந்த நந்தினி போன்ற பொது மக்களுக்கு என்ன ஈடு  ,யார் கொடுப்பது. ?

சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது.   வீட்டில் தனியே இருக்கும் பெண்களிடம் சங்கிலியை பறிக்கிறார்கள்.    உடனடியாக அரசு தக்க நடவடிக்கைகளை எடுத்து தடுக்கா விட்டால் பொதுமக்களே தங்கள் பாதுகாப்புக்கு அவரவரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.    சட்ட ஒழுங்கு கெடும்.

பல போராட்டங்களை சந்தித்த தமிழக அரசு அரசே எங்களை காப்பாற்று இல்லையேல் பதவி விலகு என்ற போராட்டத்தை  பொதுமக்களிடமிருந்து எதிர்  கொள்ள வேண்டி வரும்.

எம் ஜி ஆர் ஒரு காலத்தில் இதே போன்று எல்லாரும் கத்தி வைத்துக்  கொள்ளுங்கள் என்று சொன்னார். எதற்காக ஏன் சொன்னார் என்பதை தாண்டி அத்தகைய சூழல் இப்போது வந்து விட்டதா என்ற கேள்விக்கு ஆளும் கட்சி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஒருவழியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் ஒழிந்து சென்னை உயர் நீதி மன்றம் ஆனது ??!!

மாறுதல்களை ஏற்றுகொள்வதில் சட்டத் துறை எத்தனை மெத்தனமாக இருக்கிறது என்பதற்கு மெட்ராஸ் ஹை கோர்ட் என்ற பெயரை சென்னை ஹை கோர்ட் என்று மாற்ற மத்திய அரசுக்கு இருபது ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது என்பது ஒரு உதாரணம்.

1995  லேயே மெட்ராஸ் சென்னை ஆகி விட்டது.    அதன் தொடர்ச்சியாக எல்லா மெட்ராஸ் பெயர்களும் சென்னை என்று ஆக வேண்டியது தானே.

அதற்கென தனியாக சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இருந்தாலும் உடனடியாக அமுல் படுத்த தேவையான நடவடிக்கை களை எடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்.?

மெட்ராஸ் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று கேட்கும் நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள்?

சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை அமைக்க எத்தனை பேர் ஆட்சேபித்தார்கள்?    எத்தனை முறை உச்ச நீதி மன்றத்தின் கதவைத் தட்டியிருப்பார்கள் ?

இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் அகற்றிய பிறகே மாற்றங்களை கொண்டு வர வேண்டி யிருக்கிறது.

தாமதமாக இருந்தாலும் இப்போதாகிலும் செயல்பட்ட மத்திய அரசை பாராட்டலாம்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வலியைப்போல் உணர்ந்தாராம் சல்மான் கான்- மீண்டும் சர்ச்சை??!!

சல்மான் கான் எதையாவது சொல்லிவிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இப்போது சிக்கியிருப்பது கற்பழிப்பு வலியைப்பற்றி பேசி.      சுல்தான் படத்தில் தான் 120  கிலோ எடை கொண்ட எதிரியை பத்து முறைக்கு மேல் தான் தூக்கி தூக்கி போட வேண்டி இருந்தது என்றும் அவற்றை முடித்து விட்டு தன்னால் கால்களை எடுத்து வைக்க முடியவில்லை என்றும் அப்போது ஏற்பட்ட வலி கற்பழிக்கப் பட்ட பெண்ணின் வலியைப்போல் இருந்தது என்றும் ஒப்பிட்டு பேசினார்.

உவமை கூறும்போது கூட பெண்களை இழிவு படுத்தி பேச வேண்டுமா என்ன?

மற்றவர்களை புண் படுத்தும் என்ற உணர்வு கூட இல்லாமால் சல்மான் போன்ற பிரபல  நடிகர்கள் பேசுவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.

சரி. சர்ச்சை வந்த பிறகாவது அதை முடிக்க முயல வேண்டுமே?   அதையும் செய்ய அவர் தயாரில்லை.

அவர் சார்பில் அவர் தந்தை மன்னிப்புக் கோருகிறார்.        சிம்புவுக்காக அவர் தாயும் தந்தையும் மன்னிப்பு கோரியது போல.

சினிமாக்காரர்கள் வாயை கொஞ்சம் அடக்கி பேசவும் .    அதுவும் பிரபலங்கள் கொஞ்சம் கூடுதல் மூடல் வேண்டும்.