Home Blog Page 103

அன்புமணியால் சாதிக்கட்சி முத்திரையை உடைக்க முடிந்ததா???

டாக்டர் ராமதாசும் சரி அன்புமணியும் சரி பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சாதிக்கு அப்பாற்பட்டது என்று நிரூபிக்க பாடாய்ப் பட்டார்கள்.     முடிந்ததா?

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை பக்கத்தில்  வைத்துக் கொண்டு மற்ற எல்லா சாதியினரும் எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் வருவார்கள்.

எல்லா தனித் தொகுதிகளிலும் வேட்பாளர்களை  பா ம க சார்பில் நிறுத்தினீர்கள்.  பாராட்டு.     அந்த மக்கள்  ஒட்டு போட்டார்களா?   ஏற்றுக் கொண்டார்களா?

எல்லா சாதி வேட்பாளர்களையும்  நிறுத்தினீர்கள் .     எந்த சாதியும் உங்களை நம்ப வில்லையே?

பணத்தை நம்பாமல் செயல் திட்டங்களை முன் நிறுத்தினோம் என்றீர்கள்.  சரி. நீங்கள் செலவு செய்த நூற்றுக்கணக்கான கோடிகள் உங்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்ததே?   மக்களுக்கு விளக்கம் அளித்தீர்களா?

கடைசி வரை எங்களுக்கு யாரும் தேவையில்லை என்று  நீங்கள் பேசியது நம்பிக்கையா அகங்காரமா?

நடந்தது ஒரு தேர்தல்  யுத்தம்.     அதில்  நியாய அநியாயங்கள் பேசிக் கொண்டு எதில் வெல்ல விரும்புகிறீர்கள்.?   இங்கு வெற்றி   தோல்வி மட்டுமே கணக்கிடப்படும்.

நீங்களும் பணம் கொடுத்து வெல்ல முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல வில்லை.

தெரிந்தே தோற்க முயற்சித்தது ஏன் என்பதே கேள்வி.

உங்களால்  தி மு க வின் வெற்றியை தடுக்க முடிந்திருக்கிறது.     யார் வந்தால் என்ன என்று நீங்கள சொல்வீர்களே ஆனால் உங்களுக்கும் பணம் வாங்கிக்கொண்டு விஜயகாந்தை தி மு க பக்கம் செல்லாமல் பார்த்துக்  கொண்டதாக குற்றம் சாட்டப்படும் வைகோவுக்கும் என்ன வேறுபாடு?

யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறீர்களா?

உங்கள் அணுகுமுறையில் மாற்றம் வருமா  வராதா ?

வடக்கு மாவட்டங்களை தவிர உங்களுக்கு தமிழகத்தில் எங்கும் சுயேச்சைகளுக்கு இருக்கும் மரியாதைதான் என்று தெரிந்த பின் என்ன செய்யப் போகிறீர்கள்?

தோல்விக்கான  காரணங்களை ஆராய்ந்து பார்க்கவே மாட்டீர்களா?

குறைந்த பட்சம் சீமானோடும் திருமாவளவனோடும் கிருஷ்ணசாமி     யோடும்  இதர ஒத்த கருத்தை கொண்ட  தமிழர் தலைவர்களோடும் நீங்கள் ஒத்துப்  போக முடியுமா என்று ஆராய்ந்து பாருங்கள்.!

யாருமே வேண்டாம் நானே தலைவன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் வரலாறு உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.

குழப்பத்தில் தொடங்கிய ஜெயலலிதா ஆட்சி??!!! இவரை நம்பியா தமிழகம்??!!!

ஒருவழியாக ஜெயலலிதா இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

பகலில் 29  பேர் கொண்ட அமைச்சரவையாக இருந்தது  மாலையில் மேலும் நான்கு அமைச்சர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு  33  பேர் கொண்ட அமைச்சரவையாக மாறியது.

எல்லாரும் தனித்தனியாக உறுதிமொழி ஏற்றுக் கொள்வதுதான் முறை.    ஆனால் பதினான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக கோரஸ் பாடி பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

தி மு க பொருளாளர் ஸ்டாலின் முன்னாள் துணை முதல்வர்.     அவருக்கென ப்ரோடோகால் என்ற முறைப்படி அவருக்கு முன் வரிசையில் இடம் கொடுக்காமல் பின்னால் அமரவைத்து அவமானப் படுத்தினார்கள்.

வழக்கம்போல் எல்லா அமைச்சர்களும்   ஜெயலலிதா முன்பு  குனிந்து வளைந்து தமிழர் தன் மானத்தை வானமேற்றினார்கள்.

எல்லாரும் வீட்டிற்கு போவதுற்குள்ளாகவே அறிவிப்பு வருகிறது.         மேலும் நான்கு பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு விரிவாக்கம் முதல் நாளிலேயே செய்யப் படுகிறது.

அதிகாரம் இருக்கிறது.    சட்டப்படி சரி என்பதெல்லாம் உண்மைதான்.     ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன்  என்று  செயல்படுகிற ஜெயலலிதா மாறவேயில்லையே.

தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   அதுதான் அவர் எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் அனுமானிக்க முடியாது என்பது.

அவர் எது செய்தாலும் மற்றவர்கள் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் சென்ற முறை 24   முறை அமைச்சரவை மாற்றங்களை செய்த  போது யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.    கேட்கவும் முடியாது.

ஒன்று தெரிகிறது.     முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை என்று யாரோ சுட்டி காட்டினார்களாம்.    இல்லை  என்பது அப்போதுதான் அவருக்கு உதயமானதா?         அதை உணராமலா பட்டியலை தயாரித்தார்.      வாஸ்த்து என்று ஒன்றை காரணமாக பத்திரிகைகள் எழுதும்.    எல்லாரும் ஆமாம் ஆமாம் என்பார்கள்.

ஐந்து அறிவிப்புகளில் கைஎழுத்திட்டிருகிறார்.    மதுவிலக்கை நோக்கி 500 கடைகள் மூடல்.   இரண்டு மணி நேரம் கடைகள் கூடுதலாக மூடல்.     வீடுகளுக்கு   100  யூனிட் மின்சாரம் கட்டணமில்லை.   நெசவாளர்களுக்கும்  விசைத்தறி உரிமையாளர்களுக்கும் கூடுதல் மின்சாரம் இலவசம்.    சிறு குறு நடுத்தர விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் தள்ளுபடி.       நல்ல தொடக்கம் என்றே எடுத்துக் கொள்வோம்.     ஏமாற்றும் நோக்கம் இல்லாமல் இருந்தால் சரி.

எல்லாவற்றையும் விட எவராலும்  ஏற்றுகொள்ள முடியாதது அவரது செயலாற்றும் விதம.    அதாவது  style of  functioning.       எல்லாரையும் தனது அடிமைகளாக பாவிக்கும் குணம்.           அது மாற வேண்டும்.

இன்று நடந்தது அவர் மாறவேயில்லை என்பதையே காட்டுகிறது.     தானாக மாற வில்லை என்றால் காலம் மாற்றிக் காட்டும் என்பது மட்டும் உறுதி.

பார்ப்பனர் வெற்றிக்கு சான்றுகள் – ஜெயலலிதா – மமதா பானர்ஜி – ஓர் ஒப்பாய்வு

ஜெயலலிதா – மமதா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

இருவரும் பிராமணர்கள் அதாவது பார்ப்பனர்கள்.    ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.     ஊடகங்களும் அதை வெளிப்படுத்தி  எழுத மாட்டார்கள்.  ஆனால் ஜெயலலிதா  மட்டும் ” ஆமாம் , நான் பாப்பாத்திதான் ” என்று சட்ட மன்றத்திலேயே சொல்லிக் கொண்டவர்.

ஊடகங்கள் எல்லோரும் , மற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாதி முத்திரை குத்துவதில் முனைந்து  நிற்பார்கள்.        ஆனால்  பார்ப்பனத் தலைவர்களுக்கு மட்டும் சாதி முத்திரையை தவிர்ப்பார்கள்.

இருவருமே திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.         ஜெயலலிதாவை பற்றியாவது எம்ஜியாரைஇணைத்தும் சோபன் பாபுவோடு இணைத்தும் செய்திகள் வந்தது.    எம் ஜி யார் இறந்த போது தான் உடன்கட்டை ஏறுவதை சிந்தித்ததாக ஜெயலலிதாவே கூறினார்.   ஆனால் மம்தாவை பற்றி அதுபோல் ஏதும் செய்திகள் இல்லை.

இருவருமே ரத்த சொந்தங்கள் யாரையும் அரசியல் அதிகாரத்தில் இணைத்துக் கொள்ள வில்லை.

அதனால்தான்  எனக்கு யார் இருக்கிறார்கள் .    எல்லாமே நீங்கள்தான் என்று பேச ஜெயலலிதாவால்  பேச முடிகிறது.

எம் ஜி ஆரிடம் ஜெயலலிதா கற்றுக் கொண்ட பலவற்றில் இது முக்கியமானது.    அவரும் தன் சொந்தங்களை அரசியலுக்குள் கொண்டு வரவில்லை.

இறந்த போதும் தன் சொத்துக்களை அறக்கட்டளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி செய்து வைத்தார்.

அதனால்தான் அவரை பொன் மனச் செம்மல் என்று அழைத்தார்கள்.

ஜெயலலிதா போல் மம்தாவின் பேரில் சொத்து குவிப்பு என்றெல்லாம் வழக்குகள் இல்லை.  சாரதா மற்றும் நாரதா சிட் பண்ட் ஊழல்களில் மமதா சிக்கவில்லை.    ஜெயலலிதா மூன்று முறை தண்டணை  பெற்றவர்.   இப்போது விடுதலையாகி  அதன் மேலான மேன் முறையீட்டில் விசாரணையில் இருப்பவர்.

இருவரும் அசுரத்தனமாக தங்கள் கட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப் பவர்கள்.

எட்டி உதைத்தாலும் மிதித்தாலும் யாரும் சத்தம் போட்டு அழுவது கூட இல்லை. ஏனென்றால் மீண்டும் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு.

ஆனால்  இங்கு  உள்ளது போல் எல்லாரையும் தன் காலில்  விழ  வைத்து அதில் மகிழ்ச்சி காண்பவர் என்ற குற்றச்சாட்டு மமதா பேரில் இல்லை.

யாரை எப்போது தூக்குவார்கள் யாரை எப்போது இறக்குவார்கள் என்பது அவர்கள் இருவருக்குமே  தெரியாது.

எனவே இரும்பு பெண்மணிகள் என்ற முத்திரை இருவர் மீதும் .

எல்லா சாதிகளையும் அடக்கி ஆள்வதில் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

பணபலம் இருவருக்கும் பொதுவானது.     ஆனால் இங்கு சசிகலா குடும்பத்தினர் இருப்பது போல் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

மம்தாவை விட ஜெயலலிதாவுக்கு கூடுதல் சிறப்பு ஒன்று உண்டு.

அதுதான் திராவிட இயக்கத்தின் மூல வேரான பிராமணீய எதிர்ப்பு கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தும் தானே பிராமணராக இருந்தும்  அந்த இயக்கத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டு அதன் மூல வேரை மெல்ல மெல்ல சாகடித்துகொல்லும் பணியை திறம்பட செய்து வருவது.

வெற்றி பெற்றதும் பெரியார் அண்ணா எம்ஜியார் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அண்ணா வாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்.      பெரியார்

நாத்திகராயி ற்றே .   திமுக – அ திமுகவில் உள்ளவர்கள் எல்லாரும் நாத்திகர்கள் அல்ல.

ஆனால் தலைமை தாங்குகிறவர்  சாதி ஒழிப்பில்  நம்பிக்கை கொண்டிருக்க வேண்டுமா இல்லையா?    ஆனால் ஜெயலலிதா   அப்படியா?      அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் உச்ச நீதி மன்றத்தால் செல்லும் என்று தீர்ப்பளிக்கப் பட்ட பிறகும் அர்ச்சகர் பயிற்சி  சான்றிதழ் பெற்றவர்களுக்கு  வேலை கொடுக்க மறுக்கிறாரே?

தமிழர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.     ஆனால் தமிழர் அல்லாதவரை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள்.   ஏனென்றால் சக தமிழன் வரவில்லையே .   அது போதும் ??!!

எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் இருவருமே கவனம்  செலுத்து பவர்கள்.

பார்ப்பனர்  மீது பொறாமை கொண்டால் மட்டும் போதாது.  பழி சுமத்தினால் மட்டும் போதாது.   அவர்களைப்போலவே தன்னலம்  இல்லாதவர்கள் போல் காட்டிக் கொள்ள தெரிய வேண்டும்.

ரத்த சொந்தங்களுக்கு அதிகார பூர்வமாக  இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பார்ப்பனர்களை நம்பக் கூடாது என்றாலும்  பொது வாழ்க்கையில் அவர்களைப் பின் பற்றுவதே வெற்றிக்கான வழிகள்.

 

 

 

வென்றது பண வெறி?! வீழ்ந்தது தமிழ் மானம்??! தலையெடுக்க முடியுமா தன்மானம்???!!!

ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டார்.      எம்ஜியாருக்குப் பின் தானே மீண்டும் முதல்வராயிருக்கும்போதே வென்றதாக பெருமை பேசுகிறார்.

வாழ்க ஜனநாயகம்!

ஊழல் ஒரு பிரச்சினையாகவே யாரும் பார்க்கவில்லை.

இனிமேல் எல்லாவற்றுக்கும் சட்டப்படியே விலை பேசலாம் என்ற நிலை வரலாம்.

அ தி மு க  40 .8 %    கொண்ட   1,76,03,295  வாக்குகளும்  தி மு க   அணி     39.6 % கொண்ட   1,71,58,539  வாக்குகளும் பெற்று வெறும்   444757  வாக்குகளே குறைவாக பெற்று     1.2% வாக்கு வித்தியாசம் உள்ள முடிவைத் தந்திருக்கிறார்கள்  வாக்காளர்கள்.   ( 226  தொகுதிகளில் )

பின்பு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில்  134  ல் அ தி மு க வும்     89ல் தி மு  க      8 ல் காங்கிரஸ்    1 ல் முஸ்லிம் லீக்    ஆக தி மு க அணியில்    98 ம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரவாகுறிச்சியிலும் தஞ்சையிலும் தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஆறாய்ப் பாய்ந்த பணம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய் விட்டது.

நாம் தமிழர் நான்கரை லட்சம் வாக்குகள் வாங்கி 1.2% பெற்றுள்ளார்.    மதிமுக –  வி சி – வலது இடதுகளைவிட அதிக ஓட்டு சதவிகிதம் பெற்றுள்ளது.

பா.ம.க.   2011  தேர்தலில்     5.23% பெற்று  இப்போது   2016 ல்         5.30 % வாக்குகளை  பெற்று முன்னேறியிருப்பதுடன்    வட மாவட்டங்களில்  88 % வன்னியர் வாக்குகளை பெற்றுள்ளது தெரிகிறது.       எப்படி சாதிக்கட்சி முத்திரை  மாறும்???                   எதிர் காலத்திலும் திராவிட இயக்கங்களுடன் கூட்ட்டணி  இல்லை  என்று அன்புமணி சொல்வது  நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தே மு தி க பத்து லட்சம் வாக்குகள் வாங்கி 2.4% ஆக சுருங்கி மாநில கட்சி அந்தஸ்தையும் இழந்து நிற்கிறது.             அதுதான் ஒரே  ஆறுதல்.

இனி அ தி மு க ,   தி மு க   காங்கிரஸ்   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற நான்கு கட்சிகளே சட்ட மன்றத்தில் இருக்கும்.      அ தி மு க வின் கூட்டணி கட்சிகளான  மனிதநேய ஜனநாயக கட்சி கொங்கு வேளாளர் கட்சி போன்றவை இரட்டை இலை சின்னத்தில் நின்றதால் தனித் தன்மை கிடையாது.

கொங்கு  மண்டலத்தில்   57  இடங்களில்    47  இடங்களைப் பிடித்து அ தி மு  க வெற்றியை உறுதி செய்தது.

தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவை  தடுக்க சக்தியற்றுப் போய் விட்டது.

அஞ்சல் வாக்குகளை கணக்கில் எடுக்காமல் முடிவை அறிவித்தது தொடர்பாகவும் இன்னும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குகள் வரலாம் சில பல முடிவுகள் மாறலாம்.   எதுவும் ஆட்சி அமைவதை தடுக்க முடியாது.

நாம் முன்பே எழுதியதை போல உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பால் ஜெயலலிதாவின் தலையெழுத்தை  மாற்றினால் தவிர மாற்றம் ஏற்பட வழியே இல்லை.

234   சட்ட மன்ற உறுப்பினர்களில்    170   பேர் கோடீஸ்வரர்கள் என்பது இனி யார் யாரெல்லாம் சட்ட மன்றம் போக முடியும் என்பதற்கான முன்னோட்டமாக இருக்கிறது.

அரசியலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதை தடுத்தால் தவிர ஜனநாயகம் பிழைக்க வழியில்லை.

 

 

ஆட்சி மாற்றம் நிச்சயம் !!! காட்சி மாற்றம் லட்சியம்!!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாளை தெரிய வரும் முடிவில்தான் தமிழகத்தின் தலைஎழுத்து இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப் படும்.

மதுவின் ஆதிக்கம் இல்லாத,    ஊழல் கரை படாத ,     மக்களோடு மக்களாக  கலந்து அவர்களின் துயரங்களை போக்கக்கூடிய ஒரு லட்சிய ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்தகைய ஆட்சியை தி மு க தரும் என்றும் அதன் கடந்த கால தவறுகள் மீண்டும் தலைஎடுக்காது  என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

தமிழக அரசியலையே தூய்மைப் படுத்த வேண்டிய கடமையும் கூட தி மு க வுக்கு உண்டு.

ஏனென்றால் கலைஞர் அடிக்கடி கூறுவது போல் தி மு க ஒரு சாதாரண அரசியல் கட்சி மட்டும் அல்ல.    அது ஒரு சமுதாய இயக்கம்.

திராவிட இயக்க கட்சியையே  ஜெயலலிதா கடத்திக் கொண்டு போய் சனாதனக் கட்சியாக மாற்றி விட்டார்.      அண்ணா கட்சியாகவும் எம் ஜி ஆர் கட்சியாகவும் இல்லாமல் முற்று முழுதாக ஜெயலலிதா வகுத்த  ” கொள்ளையடி ,  பகிர்ந்து கொடு, பதுக்கு ,  வாக்குக்களை விலைக்கு வாங்கு , மீண்டும் கொள்ளையடி ” என்ற  கொள்கைதான் அ தி மு க வின் கொள்கை என்றாகி விட்டது.

கட்சி என்று அம்மா கட்சியானதோ அன்றே அங்கு கொள்கைக்கு இடமில்லை என்றாகி விட்டது.

எப்போதாவது பெரியார்  அண்ணா கொள்கைகளை,  சுயமரியாதை கொள்கைகளை ஜெயலலிதா பேசியதுண்டா ?       பிறந்த  நினைவு  நாட்களில் சம்பிரதாயமான மாலை அணிவித்தல் என்ற சடங்கை தவிர மறந்தும் எங்கும் அவர்களின் கொள்கைகளை  பற்றி ஜெயலலிதா பேசியதே இல்லை.    ஏனென்றால் அவற்றில் அவருக்கு உடன்பாடு இல்லை.   அதை நாணயமாக ஒப்புக்கொள்ளும் தைரியமும் அவருக்கு இருந்தது இல்லை.

தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஆற்றல் தி மு க வுக்கு உண்டு.    அதிலும் குறிப்பாக ஸ்டாலின் தற்கால தலைமுறை தலைவர்கள் வரிசையில் கண்ணியம் மிக்க தலைவராக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார் .

நம்பிக்கைதான் வாழ்க்கை!       நாளை விடியும் என்று நம்புவோம்??!!!

,

 

இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஒத்தி வைத்து கண்ணா மூச்சி காட்டும் தேர்தல் ஆணையம்??!!

அரவாக்குறிச்சியிலும்  தஞ்சாவூரிலும் மட்டுமே ஓட்டுக்கு பணம்  கொடுத்தது போல் தோன்றுகிறது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை.     இங்கு மட்டுமே  தேர்தல் ஒத்திவைக்கப் படுகிறது.

எல்லாருக்கும் தெரிகிறது எல்லா தொகுதிகளிலும் பணம் புகுந்து  விளையாடியிருக்கிறது என்று.

மற்ற எல்லா தொகுதிகளிலும்  தேர்தல் நடக்க அங்கு மட்டும் ஏன் தள்ளி வைக்கப் பட வேண்டும்?

பண விநியோகத்தை தங்களால் கட்டுபடுத்த முடியவில்லை என்று நாணயமாக ஆணையம் ஒத்துக் கொள்ளலாம்.

தேவைபட்டால் தேர்தலையே கூட ஒத்தி வைத்து விட்டு  பண  விநியோகம் தவிர்த்த தேர்தலை நடத்த முயற்சித் திருக்கலாம்.

நடவடிக்கை எடுத்ததன் மூலம் தேர்தல் நியாயமாக நடந்தது என்று நாளை யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

முடிவு என்னவாக இருந்தாலும்  ,

அதில்

பணத்தின் கறையை  அழிக்கவே முடியாது.!!!!

 

570 கோடி வங்கிப்பணமா ?? அம்மாவின் ஊழல் பணமா ?? மர்மம் நீடிக்கிறது !!!

திருப்பூர் அருகே மூன்று கன்டைனர்களில் 570 கோடி ரூபாய்  கொண்டு செல்லப்படும்போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

வியாபாரிகளிடம் ஒரு லட்சம் இரண்டு லட்சம்  பணத்தையெல்லாம் கைப்பற்றி விபரம் சொல்லும் தேர்தல் ஆணையம் இந்த பணத்திற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை.

18  மணி நேரம்  கழிந்த பிறகு ஸ்டேட் பாங்கின் அதிகாரிகள் இந்தப் பணம் கோவையிலிருந்து விசாகப் பட்டணத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்று தெரிவிக் கிறார்கள் .     கலைஞர் பல கேள்விகளை எழுப்பி இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதன் பொருள் இந்தப் பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுப்பப் படுகிறது.

மத்திய அமைச்சர் ஒருவரின் தலையீட்டின் பேரில்தான்  பணம் வங்கிக்கு சொந்தமானது என்று கோரிக்கை வந்தது என்றால் பிரச்சினை மிகப் பெரியது.

நிறுத்தாமல் சென்றது, ரிசர்வ் வங்கி விதிமுறைகள் பின்பற்றப் பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாதது, மிக மிக தாமதமாக வங்கி அதிகாரிகள் உரிமை கோரியது, இரவில் பயணித்தது, ஆவணங்களின் உண்மை நகல்கள் இல்லாமல் இருந்தது எல்லாவற்றிற்கும் மேலாக ஆவணங்களை காட்டி எங்கு  கொண்டு  செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு செல்லாமல் மீண்டும் கோவைக்கே கொண்டு செல்ல வருமான வரி துறை அதிகாரிகள் கடிதம் கொடுப்பது , என்று பல சந்தேக மேகங்கள் சூழ்ந்த மர்மக் கதை போல கதை நீளுகிறது.

தமிழக தேர்தலில் பயன்படுத்தப் படாமல் பாதுகாப்பாய் இருப்பில் வைக்க கொண்டு செல்லப் பட்ட பணம் என்றே பலரும் நம்புகிறார்கள்.

உண்மையாகவே  வங்கிப் பணம் என்றால் ஆவணங்களை காட்டி விசாகப் பட்டணம் போக வேண்டியதுதானே???     பணம் மீண்டும் கோவைக்கே திரும்ப பார்க்கிறது என்றால் விசாரணையை தவிர்க்கத்  தானே ?

முத்தாய்ப்பாக உச்ச நீதி  மன்றம் தலையிட்டு உயர்நீதிமன்றத்திடம் போங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றமும் கைகழுவி விடாமல் உண்மையை கண்டுபிடிக்க உதவுமா ??!!!

 

 

 

ஜெயலலிதா அரசாள தமிழர்கள் அடிமைகள் ஆக வேண்டுமா? ஜெயலலிதாவை வீழ்த்த யாரால் முடியுமோ அவர்களுக்கே வாக்களிப்போம் ??!!!

ஆட்சியில் நன்மைகள் தீமைகள் எல்லாம் எல்லா ஆட்சியிலும் இருக்கும்தான்.

ஆனால் எந்த ஆட்சியிலும் மக்கள் அடிமைகளைப் போல் நடத்தப் படுவது இல்லை.

ஜனநாயகத்தில் ஒரு மகாராணியைப்போல் ஜெயலலிதா செயல்படுவதை மானமுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

லஞ்சத்தை கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை தரப் படுத்தி எல்லோருக்கும் ஏதாவது கிடைக்கும்படி ஏற்பாடு செய்வதில் வெற்றிகரமான வழிமுறையை நிலைப்படுத்தி விட்டார் ஜெயலலிதா.

அதனால் தான் அவர்கள் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

அடித்தால் அழும் உரிமை கூட அங்கே யாருக்கும் கிடையாது.

மீண்டும் அழைத்து ஏதாவது கொடுப்பார் என்ற நம்பிக்கையில்  அடிபட்ட எல்லாருமே காத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு அடிமை சமூகத்தை உருவாக்கவா பெரியாரும் அண்ணாவும் பாடுபட்டார்கள். ?

லஞ்சம புரையோடிபோயிருப்பதைவிட இந்த அடிமை மனநிலை நிலைப்பட்டு விட்டது தான் மிகவும் ஆபத்தானது.

பாரதி  பாடும்போது என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்றுதான் பாடினான்.

சுதந்திர தாகம் கூட தணிந்தால் போதும் ஆனால் அடிமை மோகம் மட்டும் முற்றாக மடிய வேண்டும்.

ஜெயலலிதா கபட நாடகம் ஆடுகிறார்.   தவ வாழ்வு வாழ்கிறேன் என்று மனதார பொய் சொல்கிறார்.

எது தவ வாழ்வு.?

கோடி கோடியாய் சொத்துகளை சேர்த்து வைத்துக்கொண்டு எல்லாரையும் அடிமைபடுத்தி சொகுசாக வாழ்வதற்குப் பெயர் தவ வாழ்வா?

வள்ளுவர் இவரை பற்றிதான் சொல்லுவது போல் ,

”     நெஞ்சில்   துறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வாழ்வாரின்   வன்கணார் இல் ”       என்று பாடி வைத்தார் போல.

நல்லாட்சி தந்தாரோ இல்லையோ தமிழர்களுக்கு அடிமைகள் என்ற பட்டத்தை நன்றாகவே கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா??!

மீண்டும் வந்தால்  தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வது  இயலாது.

இவருடைய ‘ style of  functioning ‘    செயல்படும் முறை , நமக்கு ஒவ்வாது.

பிரசாரத்தின் போது ஏழு உயிர்களை காவு வாங்கிய மகாராணிக்கு நிரந்தர ஓய்வு கொடுப்போம்.?!!

பா. ஜ.க. , அ தி மு க தி மு க, பணம் கொடுக்க முன்வந்தார்கள் – விஜயகாந்த் பரபரப்பு ??!!

ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டு  கம்யுனிஸ்டுகளையும் திருமாவளவனையும்  தி மு க பக்கம்  அணைய விடாமல் தடுக்கும் வேலையை வைகோ செய்தார் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கும்போதே விஜயகாந்தும் வாசனும் அவர்களுடன் சென்று சேர்ந்தனர்.

வெல்லும் வாய்ப்பு அறவே இல்லை என்று  தெரிந்த நிலையிலும் அ தி மு க – தி மு க எதிர்ப்பு நிலையை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் என்பதற்கு இன்றளவும்  பதில் இல்லை.

வைகோ தன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே நாம் நிற்பதால் அ தி மு க வந்தால் வந்து விட்டு போகட்டும் என்று பேசினார் என்று அவரது மாவட்ட செயலாளர்களே  குற்றம் சுமத்தி விட்டு வெளியேறினார்கள்.

விஜயகாந்தும் வாசனும் தி மு க -அதிமு க  வுடன் பேரம் படியாததால் கடைசியில் வைகோவுடன் சேர்ந்தவர்கள்.        இல்லாவிட்டால் ஏன் தாமதமாக சேர வேண்டும்?

அப்போதெல்லாம் மெளனமாக இருந்து விட்டு இப்போது எல்லாரும் எனக்கு பணம் தர முன்வந்தார்கள் என்று குற்றம் சாட்டுவது என்ன நியாயம்.?

விஜயகாந்த் சொல்வதில் ஒன்று புரிகிறது.     இவர் பேரத்திற்கு அப்பாற்பட்டவர்  அல்ல .    அப்பாற்பட்டவராக இருந்திருந்தால் அப்போதே அவர் இதனை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று எப்படி உறுதி அளித்தீர்கள் என்ற கேள்விக்கு எப்படி அவர்கள் அரிசி விலையை குறைத்தார்களோ அப்படி குறைப்பேன் என்று விளக்கம் அளித்தவர் விஜயகாந்த்.

எந்தப் பிரச்னை பற்றியும் முழுமையாக கருத்தை வெளிப்படுத்த இயலாதவர்.

தமிழ் நாட்டு அரசியலின் ஜோக்கராக காட்சி அளிக்கும் விஜயகாந்த் தேர்தலுக்கு பிறகு அரசியலை விட்டு விலகுவாரா??

தமிழன் தலைஎழுத்து தகுதி இல்லாதவர்களையும் பண வெறி பிடித்தவர்களையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதா?

ஒதுங்குங்கள் விஜயகாந்த் ??!!

 

 

கொள்ளையடித்த பணம் ஜனநாயகத்தை குதறிக் கொண்டிருக்கிறது???!!! தேர்தல் ஆணையம் உடந்தை???!!!

நியாயமாகத்தான் தேர்தல் நடந்தது என்று நிரூபிக்க தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது.

ஆனால் கொள்ளையடித்த பணம் ஆங்காங்கே ஓட்டுக்கு ஐநூறு ஆயிரம்  இரண்டாயிரம் என்று விளையாடிகொண்டிருக்கிறது .

நூறு  கோடி  கைப்பற்றினோம் பிடித்தோம் என்று செய்திகள் உண்டுதான்.

பிறகு எங்கிருந்து வந்தது இந்தப்பணம் ?

அ தி மு க காரர்கள் புதுப் புது வழிகளை கண்டுபிடித்து ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி வாக்காளர்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்களா ?

கொடுமை என்னவென்றால் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இந்த பண விநியோகம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலிலும் இதுதான் நடந்தது.      ஒன்றுமே நடக்காதது போல்  எல்லாருமே மௌனித்துப் போகவில்லையா?

வாங்கிப் பழக்கப் பட்ட வாக்காளர்கள் ஏன் பணம் இன்னும் வரவில்லை  என்று கேட்கும்  அளவுக்கு ஜனநாயகம் புரையோடிப்  போயிருக்கிறது.

என்ன செய்து இந்த நிலைமையை மாற்றுவது  என்று தமிழர்கள் சிந்தித்து திட்டமிட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொடி இல்லை  தோரணம் இல்லை  போஸ்டர் இல்லை பூத் ஸ்லிப் கூட இல்லை ஆனாலும் கோடிக்கணக்கில் செலவு என்றால் அதன் பொருள் என்ன??   ஓட்டுக்கு பணம்தானே?

உட்கட்சி ஜனநாயகம் சட்டப்படி பாதுகாக்கப் பட்டு தேர்தல் நடந்து கட்சிப்  பிரதிநிதிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் கொண்ட விகிதாசார பிரதிநிதித்துவ  தேர்தல் மட்டுமே இந்த ஊழல் புரையிலிருந்து ஜனநாயகத்தை காத்திடமுடியும் என்று தோன்றுகிறது.

வந்து கொண்டிருக்கும் தேர்தல் கணிப்புகளில் அ தி  மு க வெற்றி பெறும் தொகுதிகளில் எல்லாம் மூன்றாம் இடத்தில் விஜயகாந்த் அணி இருக்கும்.    தி மு க ஓட்டையும் விஜயகாந்த் அணி ஓட்டையும் சேர்த்தால் அ தி மு க தோல்வியுறும் என்ற நிலை தான் தெரிகிறது.

ஆக  அ தி  மு க  எதிர்ப்பு ஓட்டை பிரிக்க முளைத்ததுதான் வைகோ உருவாக்கிய நால்வர் அணி என்பதும் அதில் ஒட்டிகொண்ட விஜயகாந்துக்கும் வாசனுக்கும் அதில் பங்கு உண்டு  என்பதும் தெளிவாகிறது.       1500   கோடி தன் வேலையை  கன  கச்சிதமாக பார்த்திருக்கிறது.

இதையெல்லாம் மீறி ஆட்சி மாற்றம் நடந்தால் தமிழர்களை வெல்ல யாராலும் முடியாது என்ற நம்பிக்கை மிச்சமிருக்கும்.

மீண்டும் ஜெயா ஆட்சி என்றால்???~!!!!!!