Home Blog Page 104

ஜெயலலிதா முதலமைச்சராகி ஜெயிலுக்கு போவாரா ?

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஜூன் ஒன்றாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

விடுதலை உறுதியா மீண்டும் ஜெயிலா என்பது பலத்த விவாதத்துக்கு உரியது.

இப்போது விசாரணையில்  இருப்பது உச்ச நீதி மன்றம்தான்.     விடுவித்தாலும் தண்டித்தாலும் எல்லாருக்கும் தெரிய வேண்டியது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது எழுந்த சந்தேகங்களுக்கான விடைகள்.

உச்சநீதிமன்றத்திலும்  தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக வதந்திகள்.      ஆம்.    ஜெயாவுக்காக வாதாடியவர் இப்போது உச்சநீதி மன்ற நீதிபதி.       திரு நாகேஸ்வரராவ்.

அவர் நினைத்தபடிஎல்லாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்குகளை முடிக்க முடிந்திருக்கிறது.    இழுத்தடிக்கவும்  முடிந்திருக்கிறது.      எப்படி நீதித்துறை மீது நம்பிக்கை வரும்.?

நீதி கிடைக்கும் என்பதற்கான கடைசி நம்பிக்கை நீதிமன்றம்.

ஜெயா  வழக்கில் சாதகமோ பாதகமோ ஏற்றுக் கொள்ளத்தக்க  வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்பதே எல்லாரின் எதிர்பார்ப்பும்.

ஆனால் குமாரசாமியின்   தீர்ப்பை மட்டுமல்ல குன்ஹாவின் தீர்ப்பையும் நாங்கள் ஆராய்வோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது  பல ஊகங்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறது.

நாட்டில் நீதிக்கு இடம் உண்டா என்பது தீர்ப்பில் தெரிந்து விடும். .

 

சபாஷ் கமல் அய்யர் ! “” சபாஷ் நாயுடு “”” வெற்றி பெற வாழ்த்துக்கள்??!!

தனது புதுப் படத்துக்கு ‘ சபாஷ் நாயுடு ‘ என்று பெயர்  வைத்திருக்கிறார் கமல்ஹாசன் .

சினிமாக்காரர்களுக்கு  எதையாவது செய்து சம்பாதிக்க திட்டமிடுவது ஒன்று புதிதல்ல.

கமல் சிறந்த கலைஞன் என்பதிலோ தன்னை ஆத்திகர் என்று சொல்லிகொள்வதில் பெருமை கொள்பவர் என்பதிலோ  சந்தேகம் இல்லை.

ஆத்திகர் ஏன் மகளுக்கு  ஸ்ருதி என்று வேதம் என்று பொருள் கொள்ளும் பெயரை வைத்தார் என்று யாரும் கேட்கப் போவதில்லை.

முன்பே தமிழகம் சாதி பிரச்னைகளில் சிக்கி தடுமாறிக்கொண்டு இருக்கிறது.தேர்தல் சமயம் அல்லவா?

ஏற்கனவே  தேவர் மகன் என்ற பெயரில் கமல் படம் நடித்ததற்கே ஆட்சேபணை எழுந்தது.

சபாஷ் மீனா என்று படம் எடுத்தால் யார்  கேட்கப்  போகிறார்கள்?

அவரது தசாவதாரம்  படத்தில் நேர்மையான காவல் அதிகாரி பல்ராம் நாயுடு வேடத்தில் அசத்தி இருந்தார் கமல்.    அந்தப் படத்திலேயே நாயுடு வேடம்தான் பலரை ஈர்த்தது.   நாயுடு என்று ஒரு சமூகம் இருப்பது உண்மை.    அதில் ஒரு நேர்மையான அதிகாரி இருக்கிறார் என்று காட்டுவது அந்த சமூகத்துக்கு பெருமைதான்.     மற்றவர்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க வாய்ப்பே இல்லை.

”  சபாஷ் பல்ராம் நாயுடு ” என்று பெயரிட்டிருந்தால்  எந்த கேள்வியும் எழுந்திருக்காது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெயரில் படம் அறிவிக்கப் பட்டி ருந்தால்  எந்த உணர்வையும் கிளறியிருக்காது. .

தேர்தல் நேரம் என்பதால்   கிளறி விடப்பட்டிருக்கும் உணர்வுகளை ஓராண்டு கழித்து பணமாக்க கமல்  எண்ணியிருக்கலாம் .

தமிழ்நாட்டை  தமிழன் தான் ஆள வேண்டும் என்ற  குரல்  ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்  வேளையில், விஜயகாந்த்  நாயுடு வாழ்க வெல்க என்று வாழ்த்துகிறாரா கமல் அய்யர்   என்ற கேள்வி எழுவது இயல்புதானே??

உச்ச அநீதி மன்றம்????!!!!  மருத்துவப் படிப்பிற்கு தேசிய தகுதி நுழைவு தேர்வை  கட்டாயமாக்கும் தீர்ப்புக்கு ஏழை மாணவர்கள் தரும் பெயர்???!!!

உச்ச நீதி மன்ற தீர்ப்பு அனைவரையும் கட்டுபடுத்தும் என்று  அரசியல் சட்டம் சொல்கிறது.

கட்டுப் படுத்தும் என்றாலும் விமர்சனத்துக்கு உள்ளாவதை யாரும் தடுக்க முடியாது.

சமஸ்க்ரிதம் படித்திருந்தால் தான் மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்று ஒரு நிபந்தனை இருந்தது இந்தக் கால தலைமுறை பிள்ளைகள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

கல்வி கற்கவே உரிமையில்லை என்ற நிலையில்தான் பல தலைமுறைகளாக பெரும்பான்மை இந்திய சமூகம் சனாதன தர்மம் என்ற பார்ப்பனீய தர்மத்தில் நிறுத்தப் பட்டிருந்தது.    வேதத்தை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று எழுதி வைத்தவர்கள் தானே.

இன்னமும் கல்வியும் செல்வமும் தங்களுக்கு ஒதுக்கியது போக மிச்சமிருந்தால்தான் மற்றவருக்கு என்ற விதியை சட்டமாக்க ஆதிக்க சக்திகள் முயன்று கொண்டேதான் இருக்கின்றன.

அதன் ஒரு கூறுதான் இப்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும்.     அதாவது  மருத்துவ படிப்பிற்கு தேசிய தகுதி நுழைவு தேர்வு நடத்த மருத்துவ கவுன்சிலும் ,மத்திய அரசும் மத்திய கல்வி பாடத்திட்ட  கழகமும் சேர்ந்து கேட்ட அனுமதியை உச்சநீதி மன்றம் வழங்கி விட்டது.

400    கல்லூரிகள்  52000   எம் பி பி எஸ்  இடங்களை பூர்த்தி செய்ய 2010  ல் கொண்டு வரப்பட்ட நுழைவு தேர்வு திட்டம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம்    2013  ல் தீர்ப்பு சொன்னது.    அதே உச்சநீதி மன்றம் 2016   Aprl  11 ம்  தேதிய  ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பில் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இப்போது அந்த  தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டு  அனில் தவே , சிவ கீர்த்தி சிங் , ஏ கே கோயல் என்ற மூன்று பேர் கொண்ட பெஞ்ச் இந்த ஆண்டிலேயே தேர்வை நடத்த அனுமதித்தது. . முந்தைய ஐந்து பேர் கொண்ட பெஞ்சிலும் அனில் தவே இருந்திருக்கிறார்.   அவர் எப்படி மாற்றி சொல்வார்.?

ஆறு மாநிலங்கள் தேர்வை ஆட்சேபித்து எழுப்பிய வாதங்கள் கருத்திலே  கொள்ளப் பட வில்லை. .

சி பி  எஸ் இ பாடத் திட்டதில்தான்  பொது தேர்வு இருக்குமாம்.   எல்லா மாநிலங்களிலும் மாநில பாடத்  திட்ட மாணவர்கள் தான் அதிகம்.    அவர்கள் கிராமப் புற பிற்படுத்தபட்ட மாணவர்களாகத் தான் இருப்பார்கள்.    லட்சகணக்கில் கட்டணம் வசூலித்து  தகுதி  நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும் அத்தகைய  பயிற்சி பெற முடியாத கிராமப் புற மாணவர்கள் மருத்துவ படிப்பை நெருங்க முடியாமல் தடுக்கவும் தான் இந்த நுழைவு தேர்வு பயன்படும்.

இப்போது தனியார் மற்றும் மாநில அளவில் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடப்பதை இந்தி அல்லது ஆங்கிலம் என்று சுருக்கி விடுவார்கள்.  பாதிக்கப் படப் போவது கிராமப் புற மாணவர்கள்தான்!!

தனியார் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதை தடுக்க இந்த தேர்வு என்று நியாயப் படுத்த முயற்சிக்கிறார்கள். .   அதற்கு வேறு வழிகளை யோசிக்க வேண்டும்.

மாநிலப் பாடத் திட்டம் மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்வி பெற உதவாது என்று ஆக்குவதற்கு மத்திய அரசு சதி செய்கிறது.

சுகாதாரமும் கல்வியும் மாநிலப் பட்டியலிலும்  உள்ளவைதான் என்றால் இதில் மத்திய அரசு தலையிட்டு மாநில உரிமைகளில் தலையிடுவது ஏன் ?

அவசரநிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை  பொதுப் பட்டியலில் சேர்த்தார்கள்.   அப்படி போதுபட்டியலில்  கல்வி இருக்கும் வரை மத்திய அரசோ அதன் அகில இந்திய அமைப்புகளோ இந்த அத்து மீறல்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.    கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து மாநிலங்களும் போராட வேண்டும்.

அகில இந்தியாவுக்கும் பொது கல்வி திட்டம் அமுலில் இல்லாதபோது மாநில கல்வி திட்டத்தை ஒதுக்கி விட்டு மத்திய கல்வி திட்டத்தின் அடிப்படையில் பொது நுழைவு தேர்வு நடத்துவது இயற்கை நீதிக்கு முரணானது என்பதை ஏன் உச்ச நீதி மன்றம் உணரவில்லை?

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கைகள் விட்டு விட்டு ஓய்ந்து விடலாம்.

விடை தர  வேண்டிய பல கேள்விகளுக்கு உச்சநீதி  மன்றம் பதில் சொல்ல வில்லை.

+2  தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும் தொழிற்கல்வியில் சேரலாம் என்ற நிலையை மாற்ற முயற்சி செய்வது ஏன் ?    அது எதற்கும் உதவாத படிப்பு என்று நிலை நாட்ட சதிதானே?

தமிழ்நாடு இயற்றி வைத்திருக்கும் 2006 ஆண்டின் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று அமுலில் இருக்கிறதே அதன் கதி என்ன?

அகில இந்திய தொகுப்புக்கு ஆந்திராவும் ஜம்மு காஷ்மீரும் 15 %  இடங்கள் தர மாட்டோம் என்று சொல்ல உரிமை இருக்கும்போது தமிழ்நாடு ஏன் அந்த உரிமையை நிலை நாட்ட வில்லை.

தேவையான மருத்துவ கல்லூரிகளை அதிகப் படுத்த அக்கறை காட்டாத மத்திய அரசு இருக்கும் இடங்களை உயர் சாதியினர் கபளீகரம் செய்ய உதவுகிறதே?

எதிர்ப்பு வலுக்கும் நிலையில் தனது வேடத்தை  மாற்றிக்கொண்டு இந்த ஆண்டு வேண்டாம் அடுத்த ஆண்டு தேர்வு நடத்தலாம் என்றோ தேர்வு தேதியை மாற்றலாம் என்றோ மத்திய அரசு நாடகம் ஆடலாம்.

மாணவர்களும் பொது மக்களும் தெருவில் இறங்கி போராடினால்தான் மாநில உரிமைகள் காக்கப்  படும் என்ற நிலை இருப்பது கசப்பான உண்மை.

கொசுறு;      ஐ ஐ டி மாணவர்கள் விருப்ப அடிப்படையில் சமஸ்க்ரிதம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்காக தேவையான ஆசிரியர்கள் பணியிட காலி இடங்களை நிரப்ப உள்ளதாகவும் அமைச்சர் ஈரானி மேலவையில் தெரிவித்தார்.

 

 

 

திருக்குறளை கற்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டிய அவலநிலை உள்ளதே???

திருக்குறளை 6  ம்  வகுப்பிலிருந்து   12  ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க உயர்நீதிமன்ற  நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

90     மொழிகளில் ஆக்கம் செய்யப் பட்டு உலகப் பொதுமறையாக ஏற்கத் தகுந்த நூலான திருக்குறளுக்கு தமிழ்நாடு செய்யும் மரியாதை இப்போதுதான் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிடவேண்டிய நிலையில்  இருக்கிறது .

ஒழுக்கம் போற்றப்படும் சமுதாயத்தை உருவாக்க குறள்  மிகச் சிறந்த கருவி.     சமுதாய ஒழுக்கம் குறைந்ததால் தான் நல்ல அரசு உருவாவதிலும் சிக்கல் வருகிறது.

திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

வானொலியில்  குறளமுதம் என்ற தலைப்பில் ஓரிரு நிமிடத்தில் சம்பிரதாயமாக ஒப்பிப்பார்கள்.        ஒரு  குறளை சொல்லி அதன் பொருளை ஓரிரு வாக்கியத்தில் சொல்லுவதன் மூலம்  நாங்களும் திருக்குறளை சொல்லுகிறோமே என்று  தமிழ் ஆர்வலர்களை திருப்திப் படுத்தும் நோக்கம்தான் வெளிபடுகிறதே தவிர   அதன் பொருள் மக்கள் மனதில் பதியும் வண்ணம் நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்ற உணர்வு இல்லை.

காதைக்கிழிக்கும் ,  பொருள் புரியாத இசை நிகழ்ச்சிகளை நாள் பூராவும்  ஒலி பரப்பும் இவர்கள்  திருக்குறள் விளக்கவுரை சொல்லவோ  திருக்குறள் செய்திகளை  நாடக வடிவில் அல்லது இசை வடிவில் கேட்போர் மனதில் பொருள் நிலைக்கும் வண்ணம் நிகழ்ச்சிகளை வடிவமைக்க கவனம் செலுத்தாதது ஏன் என்பதுதான் நம் கேள்வி???

குறைந்தது    ஒருமணிநேரம்  திருக்குறளுக்கு  பொருள் விளக்கும் நிகழ்ச்சிகளை வானொலி நிலையங்கள்   ஒதுக்குவதே நியாயம் !!!!

வைகோ ஓட்டம்??!! மேலிட உத்தரவா? தமிழர்-தெலுங்கர் மோதலின் தொடக்கமா???

கோவில்பட்டியில் போட்டியில்லை என வேட்பு மனு தாக்கல் செய்யப் போகும்போது அறிவித்து விட்டு மாற்று வேட்பாளரையும் அறிவித்தார்   வைகோ.

ஒரு அணியின்  ஒருங்கிணைப்பாளருக்கு இது அழகா?

தோல்வியை ஒப்புக்கொண்டது போல் தான் இது.

தி மு க  சாதி மோதலை உருவாக்க திட்டமிடுவதாகவும் அதற்கு இடமளிக்காமல் தான் விலகுவதை போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க வைகோ முயற்சிக்கிறார்.

தேவர் சிலைக்கு  மாலை அணிவிக்க இவர் போகும்போது  சிலர் எதிர்த்து கோஷம் போட்டதால் இந்த முடிவை அவர் எடுத்தது உண்மை என்றால்  யாரோ  சிலர் கூச்சல் போட்டால் ஓடிவிடக் கூடிய    கோழையா இவர்.

தேவர் சிலைக்கு நாற்பது ஆண்டுகளாய் தொடர்ந்து மாலை போட்டு வருவது உண்மை என்றால் எதிர்த்து நின்று போராடுவது தானே முறை.

தி மு க வேட்பாளர் தான் தேவர் சாதி  என்று பேசியது வகுப்பு வாதம் என்றால் அவருக்கு எதிராக புகார் கொடுக்கட்டும்.

சீமான்  தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார்.    அதை ஏற்றுக் கொண்டு விஜயகாந்தை முதல்வராக்கும்  கூட்டணி  முடியை வைகோ கைவிடுவாரா?

விஜயகாந்துக்கு இது பின்னடைவுதான்.

தன்னை முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்காத  அதிருப்தியை  இதன் மூலம் வெளிப்படுத்துகிறாரா  வைகோ ?

குழப்பத்தில் தான் எப்போதும் இருப்பார்  என்று சொல்வது உண்மைதானோ?

மீண்டும் போட்டியிடுங்கள் என்று    எல்லோரையும் சொல்ல செய்ய  இது ஒரு தந்திரமா?

கூட்டணி தலைவர்கள் எல்லோருமே தாங்கள் அதிர்ச்சி அடைவதாக சொல்வதன் மூலம் அவர்களிடம் இவர் கலந்து ஆலோசிக்கவில்லை  என்பது தெரிகிறது.

இந்த முடிவு தனது சொந்த கட்சியை பொறுத்தது என்பதால் கூட்டணி தலைவர்களை கலந்து ஆலோசிக்க தேவையில்லை என்பது  சரியாக இருந்தாலும்  , கூட்டணியை அதன் வெற்றி பெறும் என்ற கருத்தை,  இது பாதிக்கும் என்பது வைகோவுக்கு  தெரியாதா ?

கடைசியில்  ,

ஏன் இது   மேலிட உத்தரவாக இருக்கக்கூடாது?

ஜெயலலிதா அள்ளிவிடும் பொய் மூட்டையும் அவிழ்த்து வீசக் காத்திருக்கும் பண மூட்டையும்???!!!

எல்லாரும் பயந்தது போலவே கரூரில்   5.2.  கோடி பணமும், இரண்டு கோடி மதிப்புள்ள கொலுசுகள் இரண்டு கோடி மதிப்புள்ள சேலைகள், 12  பணம் என்னும் எந்திரங்கள், போலி ஆம்புலன்ஸ் வேன் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டது.      குடோன் அன்புனாதன் என்ற   அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் நண்பருக்கு சொந்தமானது.

மறுநாள் சென்னையில் அ தி மு க பிரமுகர் விஜயகுமார் என்பவர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை இட்டு ஐந்து கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் உலா வந்தன.   சோதனையை ஒப்புப்கொண்ட  மாநில தேர்தல் அதிகாரி லக்கானி  விபரங்களை நாளை வெளியிடுவதாக கூறுகிறார்.

அன்புனாதன் குறித்து பல  திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன .  இவருக்கு ஹாங்காங் பக்கத்தில் சொந்தமாக தீவு ஒன்றே உள்ளதாகவும் அங்கே இவர் அமைச்சர்களோடு சென்று    நடிகைகளுடன்  உல்லாசம் அநுபவித்து  வருவதாகவும் ஒரு மாலைபத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தப் பட்ட நபர் பணம் தன் சொந்தப் பணம் என்பார்.     ஜெயலலிதா  இதில் இதுவரை எந்தக்  கருத்தையும் சொல்லவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றார் ஜெயலலிதா என்பது தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரிந்த நிலையில் சட்ட ப் பூர்வமாக நிரூபிக்க இயலா சூழலில் அந்தக் குற்றம் அப்படியே கரைந்து விட்டதே???       சோற்றில் பூசணிக்கா யை  மறைக்க முடியும் என்று  நிரூபித்தவர் ஜெயலலிதா.

அவரது சாதனைகள் எல்லாம் சமூகம் எதை செய்யக் கூடாது என்பதற்கான சாட்சிகள்.     எதை செய்ய வேண்டும் என்பதற்கான சான்றுகள் அல்ல.

பிரசாரத்தில் சொல்லி வருவதெல்லாம் பொய் மூட்டைகள்.      சட்ட மன்றத்தில் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விட்டிருந்தால் அவர்கள் விளக்கம் அளித்திருப்பார்கள்.    அங்கே விவாதம் மறுத்துவிட்டு    இங்கே பிரசாரத்தில்  பேசினால் யார் மறுத்து உரைப்பது. ?

கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு கட்சிகள் ,அதிகாரிகள், அரசியல்வாதிகள் , தன் கட்சிக்காரர்கள் என  எல்லாரையும் விலைக்கு வாங்கி  தனக்கு எதிரான வாக்குகளை பிரிப்பது, பல எதிரிகளை அவர்களுக்குள்ளாகவே  மோத விடுவது மிஞ்சி இருப்பவர்களை விலைக்கு வாங்கி  விடுவது என்று பகாசுர பாணியில் திட்டமிட்டு தமிழக மக்களை மீண்டும் அடிமைப் படுத்திட துடித்து வருகிறார் ஜெயலலிதா.

இந்த தேர்தலும் நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் வந்து விட்டது.

மக்கள்  சக்தி இந்த சதிகளை எல்லாம் முறியடித்து விடும் என்ற நம்பிக்கை ஒன்றே  சத்தியம்.

பார்க்கலாம் ???

தடை சட்டம் இருந்தும் கழிவுகளை அள்ளி பலியான 10 மனிதர்கள்??!!!

தடை சட்டம் இருந்தும் சென்னையில்  மட்டும் கடந்த  2010  ல் இருந்து இன்று வரை பத்து பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள் .      ஆம்.    கழிவுகளை அகற்ற மனிதர்கள் மற்றும் திறந்த கழிப்பறை தடை சட்டம்   1993    இயற்றப் பட்டு பின்னர் அது   2003 ல் சாக்கடை இணைப்புகள் செப்டிக் டாங்குகள் பராமரிப்பில் மனிதர்களை ஈடு படுத்துவதை தடை செய்ததுடன் அவர்களின் மறுவாழ்விற்கும்  2013   ம் ஆண்டில் தனி சட்டமும் இயற்றப் பட்டது.

அவர்களை அந்தப் பணியில் ஈடு படுத்துவதை குற்றம் என்று வரையறை செய்த சட்டம் இதுவரை பலியானவர்கள் 10 பேரையும் வேலையில் அமர்த்தியவர்களை தண்டித்ததா???!!!

சென்னைக்கு தேவையான 200     ஜெட் ராடிங் மிஷின்களுக்கு  பதிலாக 142  மிஷின்கள்தான்  இருக்கின்றனவாம்.      பற்றாக்குறைதான் இந்த மனித பலிகளுக்கு காரணம் என்று  தெரிகிறது.

இதற்கு மேயர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.      இன்னும் சொல்ல போனால் தனியார் தேவைகளுக்கு என்று இன்னும் அதிக எண்ணிக்கையில்  மிஷின்கள் தயார் நிலையில் வைக்கப் பட வேண்டும்.

சட்டம் இயற்றினால் மட்டும் போதாது.    அதை அமுல் படுத்தும் சக்தியும் இருந்தால்தான் சட்டத்திற்கு மதிப்பு.

கேரள மார்க்சிஸ்ட்கள் முல்லை பெரியாறு அணையை புதிதாக கட்டுவார்களாம்??

தேர்தலை ஒட்டி கேரளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு  அணையை புதிதாக கட்டுவதாக மார்க்சிஸ்டுகள் அணி உறுதியளித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலோ இங்கே உள்ளவர்கள் உச்சநீதி மன்ற  தீர்ப்பின்படி  அணையின் மட்டத்தை உயர்த்தி நிலைநாட்டுவோம் என்கிறார்கள்.

அகில இந்திய கட்சிகள் என்றால் மாநிலத்துக்கு மாநிலம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்னை இருந்ததில்லை.

யாரும் கேட்க மாட்டார்கள் அல்லவா?   மாநில கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் .   ஆனால் தேசிய கட்சிகள் அகில இந்தியாவிலும் இருந்தாலும் மாநிலத்துக்கு மாநிலம் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளலாம்  என்றால் அவர்களுக்கு தேசிய கட்சிகள் என்ற பெயர் எதற்கு?

மார்க்சிச்டுகள்  கேரளத்தில்  காங்கிரசைத்தான்  எதிர்த்து போராடுகிறார்கள்..    ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தாவை எதிர்ப்பதற்கு காங்கிரசுடன்  எழுதப் படாத ஒப்பந்தத்தின் படி  அவர்களோடு இணைந்து வேலை செய்து மம்தாவை  வீழ்த்த முனைகிறார்கள்.

கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் மற்றவர்களுக்குத்தான் !   மார்க்சிஸ்டுகளுக்கு அல்ல.

தமிழ் நாட்டில் யார் என்னவேண்டுமானாலும் பேசலாம்??!!    யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்???!!

 

உத்தரகாண்டில் பா ஜ க ஆடும் ஜனநாயக கொலை தாண்டவம்???!!!

உத்தரகாண்டில் மொத்தம் 70  உறுப்பினர்களில் காங்கிரசுக்கு 36 ,  பா ஜ க வுக்கு  28, சுயேச்சைகள்      6   உறுப்பினர்கள் உள்ளனர்.     காங்கிரஸ் அரசு ரவாத் தலைமையில் ஆட்சியில் உள்ளது.

இதில் காங்கிரஸ் உறுப்பினர்கள்  9 பேர் போர்க்கொடி உயர்த்தி நிதி  மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முயன்றதால்  மசோதாவை குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியதாக அறிவித்து விட்டு அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் படி நீக்கினார் சபாநாயகர்.

இந்த நேரத்தில் மத்திய அரசு இடையில் புகுந்து அரசியல் சட்ட பிரிவு 356  ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தியது.     இது செல்லாது என்று உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து      வரும்  27 ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

9 உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியா இல்லையா என்பதுதான் இந்த பிரச்னையில் மையக் கருத்து.

சட்ட மன்றத்தி ல்தான் பெரும்பான்மை நிரூபிக்கப் பட வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட   உச்ச நீதி மன்ற தீர்ப்பு.

36 பேரில்   9  பேரை இழுத்து ஆட்சியை கவிழ்க்க பா ஜ க செய்த சதி இதில் நன்றாகவே  வெளிப்பட்டு விட்டது.   நான்கில் ஒரு பகுதியினர் கட்சிக்கு எதிராக பட்டால் தகுதி இழப்பு வரும் என்பது தெரிந்தே ,    நிதி மசோதாவை தோற்கடித்தால் ஆட்சி கலைந்து விடும் , பிறகு  பார்த்துக் கொள்ளலாம் என்று பா ஜ க சதி செய்து இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

ஒரு காலத்தில் காங்கிரஸ் செய்த அடக்கு முறையால் பாதிக்கப் பட்ட  பா ஜ க ,  தான் ஆட்சியில் அமர்ந்த பின்  தானே அந்த குற்றத்தை வெட்கமில்லாமல் செய்யத் துணிந்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப் படும்.

இதில் பா ஜ க தோற்கப் போவது உறுதி.

தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு நடிகர் சங்கமாக வேண்டும்!!!

சிம்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போகிறாராம்.

தன்னை உதாசீனப் படுத்தியதால் எடுக்கப் பட்ட முடிவாக அவர் அறிவித்திருப்பதில்  பெருமை இல்லை.     உதாசீனப் படுத்த முடியாதவராக இருப்பதே மரியாதை.

மலையாள கன்னட தெலுங்கு நடிகர்கள் தங்களுக்கு என தனி நடிகர் சங்கங்கள் கண்ட பிறகு தமிழ் நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏன் ?

மற்றவர்கள் வருவதும் நடிப்பதும் தவறில்லை.    கலைக்கு மாநிலம் மொழி தடையாக இருக்க கூடாது என்பது உண்மைதான்.

அதேபோல்தான் மொழிவழி மாநில உருவாக்கமும்.       பிற மாநில மொழிகளுக்கு மரியாதை தரும் அதே நேரத்தில்  பிறர் நம்மை எப்படி நடத்துகிறார்களோ அப்படியே பிறரை நாம் நடத்துவதே முறையாகும்.

அந்நியரை கொண்டாடி நம்மவரை அடக்கி வைக்க நாமே துணை போவது கொடுமை.

பெயரை மாற்று என்ற கோரிக்கை வலுப்பெற வேண்டும்?!

மற்ற மாநிலங்களில் அவர்கள் பெயர் மாற்றம் செய்த பிறகு நம்மவர்கள் அங்கே திரையில் தோன்றுவதை போல் இங்கே நாம் பெயர் மாற்றம் செய்த பிறகு மற்றவர்கள் இங்கேயும் தோன்ற முடியும் .

பெயர் மாற்றத்தில் என்ன இருக்கிறது என்று பூசி மெழுகாமல் உடனடியாக பெயரை மாற்றட்டும் நடிகர் சங்கம்.       நடிகர் சங்கம் மட்டுமல்ல எல்லா திரைத்துறை சங்கங்களும்தான்.