Home Blog Page 105

பா ஜ க எம் எல் ஏ கணேஷ் ஜோஷி தாக்கிய சக்திமான் குதிரை இறந்தது?!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது காவல் துறையுடன் ஏற்பட்ட மோதலில் பா ஜ க எம் எல் ஏ கணேஷ் ஜோஷி சக்திமான் என்ற குதிரையை சரமாரியாக தாக்கினார்.

அவர் தாக்கிய படம் பத்திரிகைகளில் வெளி வந்தது.     அந்த குதிரையின் கால் உடைந்து அதற்கு செயற்கை கால் பொருத்தப் பட்டு சிகிச்சை பெற்று வந்தது.     செய்தி படித்த ஒரு அமெரிக்கர் தன் சொந்த செலவில் ஒரு செயற்கை காலை தயார் செய்து கொண்டு வந்து தானே நெறி வந்து கொடுத்து விட்டுப் போனார்.    அது மானுடம் .

துரதிர்ஷ்ட வசமாக சிகிச்சை பலனின்றி அந்த குதிரை இறந்து போனது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

ஜோஷி மீது வழக்கு பதிவு செய்து  கைது  செய்யப் பட்டு பிணையில் இருக்கிறார்.

அவர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் அவருக்கான தண்டனையை அவரே விதித்துக் கொள்ள வேண்டும்.    இல்லையேல் சட்டம் அவரது பதவியை பறிக்க வேண்டும்.

பொதுவாழ்வில் தொடர உரிமை இல்லாதவர் தானே விலகா விட்டால் சட்டம் அவரை விலக்க வேண்டும்.

ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் மேலும் 2 பேர் பலி??!!

ஜெயலலிதா  விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்யும்போது இரண்டு பேர் பலியான சம்பவம் குறித்து சென்ற 13 ம் தேதி எழுதியிருந்தோம்.

நேற்று சேலத்தில் பிரசார கூட்டத்தில் மேலும் இரண்டு பேர் பலியாகி யிருக் கின்றனர்.

மனிதர்களை மாட்டு மந்தைகளாக பாவித்து காலை பத்து மணிக்கு கூட்டி வந்து மதியம் மூன்று மணி வரை அடைத்து வைத்தால் , அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?!!

முந்தைய சம்பவம் அவர்களது கண்களை திறக்க வில்லை.  காலை பதினொரு மணி முதல் மூன்று மணி வரை  வெளியே வராதீர்கள் என்று வானிலை மையம் அறிவுறுத்துகிறது.

ஆந்திரா,  தெலுங்கானா , ஓடிசாவில் 150  பேர் வெயிலுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் ஒரு மகாராணியைப்போல் அதிகாரம் செய்து கொண்டு எப்படித்தான் மக்களால் நான்  மக்களுக்காக நான் என்று சொல்ல முடிகிறதோ ?

நாட்டையே ஏமாற்றி உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டு எனக்கு யாருமில்லை  என்று  பசப்பு வார்த்தைகள் கூறுவதை நாட்டு மக்கள் இன்னும் எத்தனை காலம் நம்பி

வாக்களிப்பார்கள் ???!!!

நடந்தது விபத்து அல்ல.    அலட்சியத்தால் விளைந்த கொலை.    சட்டம் நாட்டில் இருக்கிறதா?    இருந்தால் ஜெயலலிதா மீதோ இறப்பிற்கு காரணமானவர்கள் மீதோ கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்??!!!

என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்???

பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கு தரும் சலுகைகளை ஈழ அகதிகளுக்கு மோடி அரசு தருமா?

பாகிஸ்தான்,  வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான் போன்ற  நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இந்து சீக்கிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேல்.

நீண்ட கால விசா என்ற அடிப்படையில் தங்கியிருக்கும் இவர்களுக்கு வங்கிக்கணக்குகள் துவங்கவும் வருமான வரி அட்டை ,ஆதார் அட்டை பெறவும் சிறப்பு சலுகைகளை அளிக்க மோடி  அரசு திட்டமிட்டு இருக்கிறது.

குடியுரிமை  பெற ரூபாய் 15000 லிருந்து ரூபாய்  100  ஆக   கட்டணத்தை குறைக்கும் திட்டமும் இருக்கிறது.    ஏறத்தாழ 400 குடியிருப்புகள் வரை பல மாநிலங்களில் இருக்கின்றன.

வீடுகள் வாங்க, சுய தொழில் தொடங்க  வேலையில் அமர என்று பல திட்டங்களை மோடி அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் சுமார் இரண்டு லட்சம் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகிறார்கள்.       சுமார்  30  ஆண்டுகளுக்கு மேலாக குடியுரிமை இல்லாமல் ‘ ஈழ ஏதிலியர் மறுவாழ்வு மையம் ‘ என்ற பெயரில் பல கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஈழ அகதிகளின் சீரழிந்த வாழ்க்கையை படம் பிடித்து காட்டியபோது கலங்காதவர்கள் இருக்க முடியாது.

சிங்களனின் கைகளில் சிக்கி மாண்டது போதாது என்று தமிழனின் கைகளிலும் சிக்கி மாயவேண்டுமா என்று அவர்கள் கதறுவதை பார்க்க சகிக்க வில்லை.

ஈவிரக்க மில்லாத ஒரு தமிழ் அதிகாரியின் கொடுமையால் மின் கம்பத்தை தொட்டு தற்கொலை செய்த அகதியின் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

என்ன செய்வது.?   இந்திய அரசின் கைகளில் அதிகாரம் குவிந்து கிடக்கிறது.    மாநில அரசு தன் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டிய சலுகைகளை தந்தால் என்ன கெட்டு விடும்?

ஐக்கிய நாடுகளின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் இந்தியா சேராதது ஏன் ?

ஐரோப்பிய நாடுகள் அகதிகளை அரவணைத்துக் கொள்ளும்போது அடிமைப்பட்டு கிடந்த இந்தியா அதை மறுப்பதேன் ?

அகதிகளில் இந்துக்கள் என்றும் தமிழர்கள் என்றும் இந்திய அரசு பேதம் காட்டாது என்று நம்புவோம்?????!!!!

 

 

ஜல்லிக்கட்டை எதிர்த்த சக்திகள் பூரம் திருவிழாவில் யானைகளை கொடுமை செய்வதை எதிர்க்காதது ஏன்?

ஏறு தழுவுதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று புறப்பட்ட மிருக வதை எதிர்ப்பாளர்களின் உண்மையான நோக்கம் தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழிப்பதுதான் என்று எல்லாருக்கும் இப்போது புரிந்து விட்டது.

குதிரைப்பந்தயங்கள் தடுக்கப்  படவில்லை.   ஒட்டக பந்தயங்கள் தடுக்கப்படவில்லை. நாய்க்கண்காட்சிகள் தொடர்கின்றன.

கேரளத்தில் திருச்சூர் பூரம்  திருவிழாவில் கட்சி மத வேறுபாடில்லாமல் திருவிழாவை நடத்தும் பொறுப்பை இரண்டு தனியார் தேவஸ்தான அமைப்புகள்- பரமேக்காவு ,திருவாம்பாடி – பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் எல்லாரும் வேண்டுகோள் வைத்திருக்கிறா ர்கள்.

36  மணி நேரம் நடக்கும் இந்த  திருவிழாவில் 79  அலங்கரிக்கப் பட்ட யானைகள் அணிவகுக்கப்பட்டு காதைப் பிளக்கும் செண்டை மேளங்களுடன் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுடன்  நிறைவுபெறும் .

இந்த திருவிழாவில் யானைகள் துன்புறுத்தப் படுகின்றன என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அதை ஆய்வு செய்ய இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் அறுவர் கேரள அரசின் அதிகாரிகளால் தடுக்கப் பட்டிருக்கிறார்கள்.       மாநில விலங்குகள் துறை , வன இலாகா மாவட்ட ஆட்சியர்  காவல் அதிகாரிகள் அனைவரும் தடுத்திருக்கிறார்கள்.

எல்லா யானைகளின் கால்களிலும் இரும்பு சங்கிலிகள் பிணைக்கப் பட்டிருக்கும்.    அதுவும் முன் இரண்டு கால்கள் பின் இரண்டு கால்கள் எல்லாவற்றிலும் சங்கிலிகளால் பிணைக்கப்  படும்போது அந்த யானைகள் படும் துயரத்தை அனுமானிக்கவே முடியாது.

எது எப்படியிருந்தாலும் அதிகாரிகள் ஆய்வு செய்வதை மறுப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?    தவறு நடப்பதை மறைக்கத்தானே ?

இன்னமும் தனியார் ஆதிக்கம் கோவில்களில் கொலோச்சுவதை தமிழகம்  தவிர இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பார்க்க முடியும்.

கேரள அதிகாரிகளின் நடத்தை உச்ச நீதிமன்றம் அளித்த தாக்கீதுகளுக்கும் எதிரானது.

பார்ப்பன அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும் மேலானது என்பதை சொல்லாமல் சொல்லி

இருக்கிறார்கள். 

 

உச்சநீதிமன்றம் செய்த அநியாயம்- மருத்துவப் படிப்பில் நுழைவுத்தேர்வு???!!!

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை இல்லை.

2009  ல் மருத்துவக் கவுன்சில் திட்டமிட்ட மருத்துவம்,பொறியியல் , கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்ற திட்டம் செல்லாதது என்று  2013 ல் அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர தீர்ப்பளித்தார் .   அவருடன் இருந்த தவே என்ற நீதிபதி தேர்வுக்கு ஆதரவாகவும் விக்ரம்சித் சென் என்பவர் எதிராகவும் தீர்ப்பளித்ததால்  கபீர் தீர்ப்பு நிலைத்தது. அதுவும் தான் ஓய்வு பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பு இந்த தீர்ப்பை அளித்தார்.

அதே தவே  என்ற  நீதிபதி மற்றும் நால்வர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இப்போது  தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. .

தமிழ்நாட்டில் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அறுவர் கொண்ட குழு அமைத்து அவர்களின் பரிந்துரையின் பேரில்தான் 06.12.2006  ல் தமிழக சட்ட மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கிராமப் புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கில் இந்த தேர்வு செயல்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

உயர்சாதி ஆதிக்கம்  உயர் கல்விகளில் நீடிக்க வகை  செய்யும் பலவித தந்திரங்களில் இதுவும் ஒன்றாகத்தான் பார்க்கப்படும்.

ஒரே கல்வி முறை இல்லாத போது ஒரே தேர்வு முறை மட்டும் எப்படி நியாயமாக நடக்க முடியும்.

தமிழ் நாட்டை எப்படி இந்த தீர்ப்பு கட்டுப் படுத்தும் என்பதும் கேள்விக்குறி.

மொத்தத்தில்   குழப்பங்களை  தீர்த்து வைக்க வேண்டிய உச்ச நீதி மன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பல குழப்பங்களை உருவாக்கி  இருக்கிறது.

சட்டிஸ்கரில் ஒரு லட்சம் நட்டத்திற்கு 81 ரூபாய் நிவாரணம் ??? கோவையில் மானியம் கிடைக்காமல் தற்கொலை செய்த விவசாயி???!!!

சட்டிஸ்கர் மாநிலம் சுர்கூஜா மாவட்டத்தில் ஒரு பழங்குடி இன  விவசாயி  நான்கு ஏக்கர் நிலத்தில் வெங்காயம்,   தானியம்,   எண்ணெய்வித்துக்கள்  சாகுபடி செய்திருந்தார்.

ஒருநாள் பருவம் தவறி பெய்த மழையாலும் சூறாவளிக்காற்று வீசியதாலும்  அனைத்து பயிர்களும் நாசமாகிவிட்டன.      வங்கிகளில் ரூபாய் ஒன்னேகால் லட்சம் கடன் வாங்கியிருந்தார் அந்த விவசாயி.   அரசு அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப் பட்ட இடத்தை பார்க்காமலேயே அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பினர்.

கொஞ்ச நாள் கழித்து விவசாயிக்கு கிடைத்தது ரூபாய்   81 க்கான  காசோலை. இதேபோல் அந்த ஊரில் பலருக்கும் ரூபாய் நூறிலிருந்து ஆயிரம் வரை நிவாரணம் கிடைத்துள்ளது.

கேட்டால் எல்லாம் விதிமுறைகளின்படியே கணக்கிடப்பட்டது .   நாங்கள் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று தாசில்தார் குழு சாதிக்கிறது.

கோவை வேப்பம்பள்ளம புதூர்  கிராமத்தில் ஒரு விவசாயி தனது ஆறு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து  ரூபாய் 70 லட்சம்  வங்கிக்கடன் வாங்கி தனது நிலத்தில் பசுமை வீடு கட்டுகிறார்.    அதற்கு 50 % மானியம் எதிர்பார்த்திருக்கிறார் அந்த விவசாயி.    மாநியம் கிடைக்காதது மட்டுமல்ல வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வந்து மிரட்டியும் சென்றிருக்கிறார்கள்.  ராமசாமி என்ற அந்த விவசாயி  அன்றே பூச்சி   மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.    கடன் தந்த மன அழுத்தம் உயிரை குடித்து விட்டது.

மோடி அரசு அறிவித்த காப்பீடு திட்டம் எப்போது அமுலுக்கு வருவது எப்போது விவசாயி

நிம்மதியாக வாழ்வது.???!!!!

 

அண்ணா நூலகம்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை??!!

கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காக ரூ 179   கோடி செலவில் அமைக்கப் பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை செயலற்றுப் போகவும் சீரழிந்து போகவும் விட்டுவிட  ஜெயலலிதா திட்டமிட்டு உதாசீனப் படுத்தினார்.

உயர்நீதிமன்றம் தலையிட்டு அந்த குற்றச்சாட்டு உண்மை தானா என்று ஒரு கமிட்டியை போட்டு விசாரித்து அது உண்மை என்று தெரிந்த பின் ஜூன் மாதக் கடைசிக்குள் குறைகளை சரி செய்ய கெடு விதித்து

தீர்ப்பளித்துள்ளது. .

கருணாநிதி என்ற எதிர்ப்பை சாக்காக   சொல்லி தமிழர் நலன்களை புறக்கணிப்பதில் ஜெயலலிதா அக்கறை செலுத்தி வருகிறார்.

அடுத்து வரும் தமிழர் ஆட்சி இந்த தவறை சரி செய்யும்..

 

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வு அறிவிப்பு நாள் 29.12.2013

முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நாள்20.07.2014

மெயின் தேர்வு நடைபெற்ற நாட்கள் 5,6,7 ஜீன் 2015 2015 ஆண்டுத் திட்ட அட்டவணையில் 2015 ஆகஸ்டில் கலந்தாய்வு முடிந்துவிடும் என்றும் 2016 அட்டவணையில் ஏப்ரலில் கலந்தாய்வு முடிந்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டது

ஆனால் 2016 ஏப்ரல் வரை மெயின் தேர்வு முடிவுகள்கூட இன்னும் வெளியிடப்படவில்லை … இனி நேர்காணல் மற்றும் கலந்தாய்வு எப்போது நடக்கும்? ஒரு தேர்வுக்கு மூன்றாண்டுகாலம் ஆவதால் தே்வர்கள் விரக்தி ….

இதே காலத்தில் யுபிஎஸ்சி இரு தேர்வு முடிவுகள் வெளியிட்டு மூன்றாவது தேர்வு நடத்திமுடிக்கப் போகிறது … தேர்தல் நேரத்தில் பணப்பரிவர்த்தனை கடினமாக இருக்கும் என்றும் …நேர்காணலில் பணம் பெறும் நோக்கி்ல் முடிவுகள் தள்ளிப்போடப்படுவதாகவும் தேர்வர்கள் அச்சம்…

அதிகபட்ச காலதாமதத்தால் மாநிலத்தின் உயர்பதவிகளான துணைஆட்சியர், துணைகாவல் கண்காணிப்பாளர் போன்ற பதவிகள் நேர்மையாக நிரப்பப்படுகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது

கடன் கொள்ளையர்களின் பட்டியலை வெளியிட ரிசர்வ் வங்கி மறுப்பது ஏன் ? உயர் சாதியினர் பலன் பெற்று வருவதாலா?

லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை வங்கிகளில் இருந்து கடனாக பெற்று திருப்பி  தராதவர்களின்  பட்டியலை உச்ச நீதி மன்றம் கேட்டு அதை தாக்கல் செய்த ரிசர்வ் வங்கி அதை வெளியிட வேண்டாம் என்று நீதி மன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

காரணம்; வெளியிட மாட்டோம் என்ற உறுதி மொழி  . மற்றும் அது வெளியிடப்பட்டால்  அது நாட்டின் பொருளாதாரத்தில் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும். .??!!!

சரி பெயர்களைத்தான் வெளியிடவேண்டாம் மொத்த துகை எவ்வளவு என்றாவது சொல்லுங்களேன் என்று உச்சநீதிமன்றம் கேட்டு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.

என்ன நடக்கிறது.?    ரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன?    திருடர்களின் பெயரை வெளியிட மாட்டோம் என்று காவல் துறை ஒப்பந்தம் போடுமா?

வங்கிகளில் கடன் வாங்கி வாழ்பவர்கள் பட்டியலை பார்த்தால் அனைவரும் உயர் சாதி மக்களாகத்தான் இருப்பார்கள்.

ஒன்றிரண்டு சத வீதம் பிற்பட்டோர் தாழ்த்தப் பட்டோர் இருந்தால் அதிசயம்.

இப்படி நாட்டை உறிஞ்சி வாழும் இவர்களுக்காக மற்றவர்கள் உழைக்க வேண்டுமா?

மொத்தத் துகை மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது !   அவர்கள் யார் என்பது அடையாளம் காட்டப்  பட வேண்டும்.

ரகசியம் காக்கப் படும் என்ற ஒப்பந்தம் மோசடியானது சட்டத்திற்கு புறம்பானது என்றும் உச்ச நீதி மன்றம் அறிவிக்க வேண்டும்.

 

ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலி??!!! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்???!!!

விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய வந்தார்.

மதியம் பனிரெண்டு மணிக்கு கொண்டு வரப்பட்ட கூட்டம் மூன்று மணி வரை வெயிலில் காக்க வைக்கபட்டது.
மூச்சு திணறியும் மயங்கியும் மக்கள் விழத் தொடங்கினர்.
இதில் இருவர் பலியாகினர்.   வெளியேற  முயற்சித்த மக்களை காவல் துறை விடவில்லை.
உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.    தேர்தல் விதிமுறை அமுலில் இருப்பதால் நிதி உதவி பின்னால் வரும் என்று கூறியிருக்கிறார்.

அரக்கத் தனமாக ஜெயலலிதா நடந்து கொள்வதை அவர் அறிவாரா என்பதே கேள்வி.

அவரது பாணி பிறரை அடிமைகளாக பாவித்து நடத்துவதே?   அவர் மாறப் போவதில்லை.
மக்கள் மாற வேண்டாமா ???!!!