Home Blog Page 106

112 பேருக்கு மேல் பலி வாங்கிய வாணவேடிக்கை???!!! காக்கும் தெய்வம் கைவிட்டதா???

கேரளாவின் கொல்லம் பரவூர் தேவி கோவிலில் நடந்த திருவிழாவில் வாணவேடிக்கை நடத்தப்பட்டு அதில் 112 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். நூற்றுகணக்கானோர் படுகாயம் அடைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்த பின்னரும் மீறி வாணவேடிக்கை களை நடத்தும் துணிவை யார் தந்தது?

கைது செய்திருக்கிறார்கள். வழக்கு நடக்கும். தண்டணை கிடைக்குமா தெரியாது.
சட்டமும் வரைமுறைகளும் மீறப்பட்டதாலேயே இந்த விபத்து நடந்திருக்கிறது.
இதில் மனிதர்கள் தான் குற்றவாளிகளே தவிர இறைவனை நிந்திப்பது தவறு என்றாலும் தெய்வம் யாரை தண்டித்திருக்கிறது.என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

மனிதர்கள் மரபுகளை காரணம் காட்டி மனிதர்களை கொல்லுவதை தெய்வம் ஏற்றுக் கொள்ளுமா?
கடும் தண்டனையே எதிர் காலத்தில் இது போன்ற அத்துமீறல்களை கட்டுப் படுத்தும்.

https://www.youtube.com/watch?v=kvbh_1t4ZhY

நீதிபதிகள் நியமனத்தில் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்பது நிபந்தனையா மரபா? இந்த அடிமைத்தன மரபு நீக்கப் பட போராடுவோம்???!!!

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு ஆறு நீதிபதிகளை நியமிக்க இருப்பதாக செய்தி வெளியானது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நியமன உத்தரவு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப் படும். இதில் சம்பத்தப் பட்ட நீதிபதி தன் பெயரை இந்தி மொழியில் கையொப்பம் இட்டு குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அவரை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார் .   இந்த நடவடிக்கை நீதித்துறையின் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதாம்.
முடிவு கட்டப் பட வேண்டிய மரபு இது.
அப்படி வந்த உத்தரவில் நேற்று புதிய நீதிபதிகள் ஆறு பேரும் தங்களது பெயர்களை இந்தியில் எழுதினார்களாம்.
அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை என்னும்போது மற்றவர்களுக்கு என்ன ஆட்சேபணை என்ற கேள்வி எழுகிறது.
அவர்களுக்கு இந்தி தெரியுமா?   தெரிந்து கையெழுத்து இட்டார்களா?     இந்தி தெரியாமல் இருந்தாலும் எழுதி கொடுத்த படி கையெழுத்திட்டார்களா?
தெரிந்த ஆங்கிலத்தில் கையெழுத்து இட முடியாமல் போனது ஏன்?
அயல் நாட்டு மொழி  ஆங்கிலம் என்றால் அது நீதிமன்ற மொழியாக ஆட்சி மொழியாக  நீடிப்பது ஏன் ?
ஏன்  தமிழில் கையெழுத்து வாங்க கூடாது.?
மாற்றப் பட வேண்டிய மரபு இந்தியில் கையெழுத்து என்பதில் சந்தேகம் இல்லை!!!!!
பாராளுமன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் இடம் பெற்றால் தான் இது ஒரு நாடு என்று பொருள் படும்.

61 வது முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது? ஒரு விசாரணையும் இல்லையே ஏன்? யாரைக்காப்பற்ற???

சென்னை விமான நிலையம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2200 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு ஏற்றவாறு நவீன மயமாக்கப் பட்டது.

ஆனால் இதுவரை அறுபது முறை விமான நிலைய கூரை கதவுகள் , ஜன்னல்கள் கண்ணாடி சுவர்கள் என திடீர் திடீர் என உடைந்து விழுந்து கொண்டிருப்பது ஒவ்வொரு முறையும் செய்தியாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

ஆச்சரியமாக விசாரணை ஏதும் நடந்ததாக செய்தி எதுவும் வந்ததே இல்லை. ஒப்பந்தக்காரர் யார் அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதா? ஏன் இழப்பீடு பெறவில்லை? ஒப்பந்த நிபந்தனைகளில் இது இடம் பெறாதது ஏன்?
இவைகளுக்கெல்லாம் விடை காண மக்களுக்கு உரிமை இருக்கிறது. உண்மை வெளியாக விசாரணை வேண்டும்??!!!

1500 கோடி வாங்கிக் கொண்டு தி மு க அணியில் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்டுகள் சேராமல் பார்த்துக் கொண்டாரா வைகோ??? குற்றச்சாட்டிற்கு பதில் கூறாமல் ஒளிந்தது ஏன்?

பாலிமர் டி வி நிகழ்ச்சியில் ம தி மு க அலுவலகத்திலேயே பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்த வைகோ திடீரென்று எழுந்து வெளிநடப்பு செய்தார்.   காரணம் நெறியாளர் கேட்ட ஒரு கேள்வி.

 நீங்கள் 1500  கோடி வாங்கிக்கொண்டு தி மு க பக்கம் விஜயகாந்த் மற்றும் இரண்டு கம்யூனிஸ்டுகளும் சேரவிடாமல் செய்ததாக குற்றம் சாட்டப் படுகிறதே உங்கள் பதில் என்ன  என்பதுதான் அந்தக் கேள்வி.
இதற்கு முன்பு விஜயகாந்துக்கு 500 கோடியும் 80  சீட்டும் தர தி மு க தயாராக இருந்தது என்று குற்றம் சாட்டி இருந்தார்  வைகோ.       அதற்கு  பேச்சு வார்த்தையே நடக்க வில்லை என பிரேமலதா பதில் சொல்லி விட்டார்.
மற்றவர் மீது குற்றம் சொல்ல தயங்காத வைகோ தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல மறுப்பது ஏன்?
                         உண்மை எங்கோ உறங்குகிறது!!!!

வைகோ ஒரு சைகோ ???!!! 500 கோடியும் 80 சீட்டும் ; மத்திய மந்திரி பதவி எல்லாவற்றைவும் உதறினாரா விஜயகாந்த்???

500 கோடியும் 80 சீட்டும் ; மத்திய மந்திரி பதவி இவைகளை தி மு க வும் பா ஜ கவும் தரத் தயாராக இருந்தும் எங்களோடு விஜயகாந்த் சேர்ந்திருக்கிறார் என்று விஜயகாந்த் சொல்லாததை வைகோ சொல்லியிருக்கிறார்.

வைகோ யாரையும் வாழ வைத்ததாக வரலாறு இல்லை. அவர் சென்ற இடம் விளங்கியதும் இல்லை.

அவர் சொன்னது உண்மை என்றால் பிரேமலதா அதை மறுப்பது ஏன் ? தி மு க வுடன் பேச்சுவார்த்தையே நடக்க வில்லை என்று அவர் மறுத்திருக்கிறார். பேச்சுவார்த்தையே நடக்காத போது பேரத்திற்கு என்ன வழி?

கலைஞர் சட்ட அறிவிப்பு அனுப்பியிருக்கிறார் . வரவேற்பதாக வைகோ சொல்லியிருக்கிறார். வழக்கு நடக்கட்டும் உண்மை தெரியட்டும்.
அதுவரை இந்த அவதூறு வேலை செய்யும் என்று எண்ணியிருக்கலாம் .
சதியின் மொத்த உருவமாக வைகோ மாறியிருக்கிறார். கூட்டு சேர்வதை ரகசியமாக வைத்திருந்து இப்போது வெளியிட்டோம் என்பது ஒரு வியூகமல்ல. குணத்தின் அடையாளம். பேச்சு வார்த்தை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

அப்படியானால் பேரங்களுக்கு வைகோ பழக்கப்பட்டவர் என்றல்லவா ஆகிறது. தான் நடத்திய உடன்பாடுகளுக்கு பணம்தான் ஒரு மையமாக இருந்தது என்பதை ஒப்புகொள்வாரா?
தன்னை சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் அவர் சமரசம் செய்து கொண்டது எதற்காக?
ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலுக்கு மட்டும் தனியாக நிலை எடுப்பது எதற்காக.?
விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்த கணமே அவர்கள் தோற்பது உறுதியாகி விட்டது.

நாலு வார்த்தை ஒழுங்காக பேசத் தெரியாது. பத்திரிகையாளர்களுடன் உரையாட தெரியாது. எந்த பிரச்னை பற்றியும் சட்ட மன்றத்தில் பேசியதும் இல்லை. நான்கு ஆண்டுகள் எதிர்க் கட்சி தலைவராக இருந்து என்ன சாதித்தார்?

மனைவியையும் மைத்துனரையும் தவிர வேறு யாரையும் நம்பாமல் அரசியல் கம்பெனி நடத்தி வியாபாரம் செய்து வரும் நபராகத்தான் விஜயகாந்தை தமிழ்ச் சமூகம் பார்க்கிறது.
இது வரை எந்த கொள்கையை அவரது கட்சி முன்னிறுத்தி இருக்கிறது.?
தமிழ்ச் சமூகத்திற்கு இத்தைகைய துரோகத்தை இழைக்க திருமாவளவனுக்கு எப்படி மனம் வந்தது. ?

அன்புமணி மேலும் ராமதாஸ் மேலும்தான் கோபம வருகிறது.
இடது வலதுகள் தவறாக கணக்கிட்டு விட்டார்கள். எதோ கொஞ்சம் மான உணர்வில் எங்கள் கூட்டணி மக்கள் நல கூட்டணிதான் விஜயகாந்த் கூட்டணி இல்லை என்று தோழர் நல்லகண்ணு கூறிவிட்டார். தொகுதி உடன்பாடுதான் கூட்டணி இல்லை என்றும் சொல்லிவிட்டு அப்புறம் எப்படி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் சொதப்பல் பதில்தான்.
வெற்றி பெற்ற பிறகு கூட்டாக செயல் திட்டம் வகுப்பார்களாம். அதுவரை தனிதனி தேர்தல் அறிக்கை தானாம்..
நாதியற்றுப் போனாயடா தமிழா என்று நொந்து கொள்வதை விட வேறு என்ன செய்ய முடியும் ?

அன்னை பாரதம் வாழ்க சொல்வோம்? பாரத் மாதா கீ ஜெய் சொல்ல மாட்டோம்???!!! சரியா தவறா?

ஜெய் ஹிந்த் , ஜெய் பாரத் ஜெய் மகாராஷ்டிரா என்று சொல்லிக்கொண்டே பாரத் மாதா கீ ஜெய் சொல்ல மறுத்த சட்ட மன்ற உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல் இடை நீக்கம் செய்யபட்டார்.
அல்லாவைத் தவிர வேறு எவரையும் வணங்க தன் மதம் அனுமதிக்க வில்லை என்று சொல்லி விளக்கம் சொல்லியிருக்கிறார்.

காங்கிரசின் அப்துஸ் சத்தார் என்ற காங்கிரஸ் உறுப்பினர் இடைநீக்கத்தைவரவேற்றிரிக்கிறார்.
இதற்குள் கழுத்தில் கத்தி வைத்தாலும் சொல்ல மாட்டேன் என்றும் அரசியல் சட்டம் அப்படி நிர்பந்திக்க வில்லை என்றும் ஒரு தரப்பும் மறுப்பவர்கள் தலையை கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசு என்று மறு தரப்பும் மாறி மாறி நிலைமையை மோசமாக்கி வருகிறார்கள்.
தேசிய கீதம் வங்க மொழியில் இருக்கிறது. . எல்லாரும் புரிந்தோ புரியாமலோ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

விளக்கம் கிடைக்க முடியாத பல முரண்பாடுகளோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என் தாய் மொழி தமிழ். என் தாய் நாடு இந்தியா என்றால் என் தாய் மொழியில் அதை வாழ்த்தி போற்றுவது தானே முறை. இந்தி என் நாட்டு மொழி என்றாலும் அது என் தாய் மொழி அல்ல.
என் தாய் நாட்டை வேற்று மொழியில்தான் வாழ்த்தி முழக்கம் இட வேண்டும் என்று என்னை யாராவது கட்டாயப் படுத்தினால் மறுக்க எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா?
எனவே சொல்லுவோம் அன்னை பாரதம் வாழ்க!!!
சொல்ல மறுப்போம் பாரத் மாதா கீ ஜெய்???!!!

கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் விகிதாசார பிரதிநிதித்துவம்!!! கூட்டணி குழப்பங்களுக்கு அதுவே தீர்வு!!

Partywise Vote Shareதலை சுற்றுகிற அளவிற்கு அரசியல் கட்சிகளின் பேர அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருகிறது.
வாங்கும் வாக்குகளுக்கு ஏற்ப கட்சிகளுக்கு பிரதிநிதி கள் என்ற ஏற்பாடு இருந்தால் உட்கட்சி ஜனநாயகமும் காப்பாற்றப்படும்.

உலக நாடுகளில் விகிதாசார பிரதிநிதித்துவம் அமுலில் இருக்கிற நாடுகளின் அனுபவங்களை அலசி விவாதித்து அவற்றை மேம்படுத்தி இந்தியாவில் அமுல் படுத்த வேண்டும். அதுவே உண்மையில் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை சட்ட மன்றங்களுக்கு அனுப்பும்.
இரண்டும் கலந்த கலவையாக அந்த ஏற்பாடு இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் எந்த பொது பதவியிலும் இரண்டு முறைக்கு மேல் தொடர முடியாது என்ற வரையறையும் வேண்டும்.

ஆயுட்கால தலைவர் என்ற முறை கூடாது. அதே நேரத்தில் ஒருவர் அரசியலுக்கு வந்து இரண்டு முறைக்கு மேல் ஒரு பதவியில் தொடர முடியாது என்றால் அவர் அரசியலில் இருக்க முடியாது என்று பொருள் அல்ல.. வேறு பொறுப்புகளில் தொடரலாமே??
தமிழ் நாட்டில் ஐந்து முனை ஆறு முனை போட்டி வந்தால் உண்மையான பிரதிநிதிகள் வர முடியாத நிலை உருவாகலாம்.
தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்பதையே இந்த கூட்டணி குழப்பங்கள் தெளிவாக்குகின்றன .

கவுரவக் கொலைகளை தடுப்பது எப்படி? உடுமலை சங்கர் கடைசியாக இருக்கட்டும்??!!!!

Dalit Youth Udumalapet Shankar Murderகவுசல்யா 19 வயதில் படிப்பை நிறுத்தி விட்டு நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவருக்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
கவுசல்யா தேவர் என்பதும் சங்கர் தலித் என்பதும் போதாதா பிரச்சினைக்கு ?. கணவனை விட்டுவிட்டு வந்துவிடு என்பக்தை கவுசல்யா ஏற்காததால் பட்டப்பகலில் கடைத்தெருவில் சங்கர் கொலை செய்யப்பட கவுசல்யா தலையில் வெட்டோடு பிழைத்திருக்கிறார் .
கொன்றது கூலிப்படையா என்பது காமிராவில் பதிவாகி இருக்கிறது. . தந்தை சரண் அடைந்திருக்கிறார். மற்றவர்கள் இனி பிடிபடுவார்கள். தண்டிக்கப் படுவார்கள்.

மூன்றாண்டுகளில் 98 கொலைகள் நடந்திருப்பதாக தகவல்கள். தர்மபுரியில் நடந்த கொலை அன்புமணியை எம் பி ஆக்கத்தான் உதவியது.
வளர்த்த மகள் 18 வயதில் பெற்றோரை உதறி விட்டு விரும்பும் காதலனை மணக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் நியாயம்? நியாயத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள முரணை களைய என்ன விவாதம் நடை பெற்றிருக்கிறது.?

கொல்பவன் முடிந்தால் தப்பிப்போம் இல்லையேல் தண்டனையை அனுபவிப்போம் என்றுதானே கொல்கிறான்.
கடுந்தண்டனை குற்றங்களை குறைக்க முடியும் என்றால் இருக்கும் சட்டங்களே போதும். இருக்கும் சட்டங்களை அமுல் படுத்தாமல் புது சட்டங்களை கொண்ட வருவதில் என்ன பொருள் இருக்கிறது.

கொல்பவர்களை மன நோயாளிகளாக பாவித்து மருத்துவம் செய்ய வேண்டும். ஆசையுடன் பொறியியல் படிக்க வைத்த தந்தையின் கனவு சிதைந்தது. கனவுகளுடன் பட்டம் படிக்க வைத்த குடும்பம் சிறையில் வாடுகிறது. இரண்டு குடும்பங்களும் தத்தளிக்கும் நிலைக்கு யார் காரணம்?
பிரச்னை காவல் துறைக்கு போனவுடன் இதை சரியான முறையில் கையாண்டு கொலையை காவல் துறை தடுத்திருக்க முடியாதா?
வடக்கே ஒரு ஊரைச்சேர்ந்தவர்கள் சகோதர சகோதரிகள் என்பதால் திருமணம் செய்ய முடியாது என்ற பொருந்தா விதி காப் பஞ்சாயத்தால் இன்னமும் சட்டத்துக்கு புறம்பாக அமுல் படுத்தப் பட்டு வருகிறதே?

பெற்றோரின் அனுமதியில்லாமல் திருமணம் செய்யும் உரிமையை 21 வயது என்று நிர்ணயிக்க சட்டப்படி முடியுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
சாதி ஒழிப்பு ஒன்றே இறுதி இலக்கு என்பதை எல்லாரும் ஒப்புக் கொள்ளும்போது இந்தப் பிரச்சினைகள் மறைந்து விடும்.

சட்டப் படி சாதியை ஒழிக்க முடியுமா என்பதும் கேள்விக்குரிய ஒன்று.
முடியாது என்பதே உண்மை என்றால் கொலைகளை தவிர்க்க என்ன வழி என்பதே அடுத்த கேள்வி?
சட்டமும் தண்டனையும் மட்டுமே போதும் என்றால் நாட்டில் குற்றங்களே நடை பெறாது.
கட்சிகள் ,ஆட்சியில் இருப்போர் , சங்கங்கள் என அனைவரும் கலப்பு திருமணங்களை நடைமுறைப்படுத்த முன் வந்தால் மட்டுமே சாதி ஒழிப்பு இலட்சியம் நிறைவேறும். !!!!

2016-17 ல் மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் !!! பா ஜ க அரசின் ஆதிக்க வெறி???!!!

2016-17 ல் மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி அறிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டில் கலைஞர் , வைகோ, அன்புமணி ராமதாஸ் போன்றோர் தவிற பெரிய எதிர்ப்பு எழுந்ததாக தெரியவில்லை.

ஒருவேளை அடுத்த ஆண்டு பள்ளிகள் துவங்கும்போது பிரச்சினை வெடிக்கலாம். அல்லது நீதிமன்றங்கள் இதை எடுத்துக்கொண்டு ஏதாவது உத்தரவு பிறப்பிக்கலாம் .
இந்தியை திணிக்க முடியாமல் சமஸ்கிருததை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறதா ?

தமிழ் வங்காளம் தவிர இதர மொழிகள் சமஸ்கிருதம் இல்லாமல் இயங்க முடியாது.
எனவே அவர்கள் சமஸ்கிருத திணிப்பை தீவிரமாக எதிர்ப்பார்கள் என எதிர் பார்க்க முடியாது. இதைத்தான் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

கட்டாயமாக்கும் எதுவுமே மக்களால் ஏற்றுக்கொள்ளப் படும் என்று எதிர் பார்க்க முடியாது.
தவிர எதிர் மறையாக அரசுக்கு எதிரான உணர்வை தூண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசர பிரச்சினை இது.

அமைச்சர்களை பந்தாடும் ஜெயலலிதா??? உதை வாங்கியும் மௌனம் காக்கும் அமைச்சர்கள்???

டந்த நான்கரை ஆண்டு காலத்தில் 24 முறை அமைச்சரவை மாற்றங்களை செய்திருக்கிறார் ஜெயலலிதா.

சமீபத்திய நீக்கம் டி கே எம் சின்னையா.
அரசியல் சட்ட பிரிவு 163 , 164 ன் படி அவர் எவரை வேண்டுமானாலும் அமைச்சராக வைத்துக் கொள்ளலாம் நீக்கலாம்.

அதற்காக காரணம் எதுவும் சொல்லாமல் நீக்குவதும் கொஞ்ச காலம் பொறுத்து மீண்டும் அவரையே சேர்த்துக் கொள்வதும் இது ஒன்றும் அவரது வீடு அல்லவே?
பொது வாழ்வில் வெளிப்படைத் தன்மை வேண்டுமா வேண்டாமா?

அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியுமா ? முடியும் என்று வரிந்து கட்டிக் கொண்டு செயல் படுகிறார் ஜெயலலிதா. 110 விதி யை அவரைப்போல் தாறுமாராகவும் எக்குத் தப்பாகவும் பயன் படுத்தியவர்கள் யாருமே இல்லை.?
சட்டம் நடைமுறை, நாகரிகம், பண்பாடு, அனைத்தையும் தன் காலடியில் போட்டு மிதித்து எல்லாம் தனக்கு அடக்கம் எல்லாரும் எனது அடிமைகள் என்ற பாசிச போக்கில் பீடு நடை போட்டு தொடர்கிறார் ஜெயலலிதா?!!

ஒருவன் போனால் பல்லக்கு தூக்க நான் நீ என்று போட்டி போட கூட்டம் வரிசையில் காத்திருக்கையில் அவரது சாட்டை சுழல்வது நிற்காது.
முதல் அடிமை என்று பட்டம் சூட்டப் பட்ட ஒ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வரிசையாக நீக்கப் படுவது தொடங்கி இருக்கிறது.
நல்ல அடிமைகள். அடித்தாலும் அழத் தெரியாத அடிமைகள்.